Wednesday, March 23, 2011

பகத்சிங்: புரட்சியாளர்களின் விடிவெள்ளி - ஹர்கிசன்சிங் சுர்ஜித்





நவஜவான் பாரத் சபாவில் சேர்ந்தபோது எனக்கு வயது 14. நாட்டில் போராட்டங்கள் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சம யம் அது. நாட்டிற்குப் பூரண சுதந்திரம் மற்றும் அதனை அடைவதற்கு ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றை மேற்கொள்வது தொடர்பாக, லாகூர் காங்கிரஸ் அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மக்கள் மத்தி யில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு பகத்சிங் புரிந் திட்ட தியாகம், எனக்குத் தனிப்பட்ட முறை யில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. பகத் சிங்கின் உச்சபட்ச தியாகத்தால் உத்வேகம டைந்து, நான் கல்வி கற்பதைக் கைவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் முழுமையாகக் குதித்துவிட்டேன். பகத்சிங் மற்றும் அவரது தோழர்கள் தூக்குமேடையில் வெளிப்படுத் திய வீராவேசம் மட்டுமல்ல, அவர்கள் புதி தாகப் பின்பற்றத் தொடங்கிய விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் இதற்குக் காரண மாகும். விஞ்ஞான சோசலிச சிந்தனைகள் அந்த சமயத்தில் அனைவரையும் வேகமாக ஈர்த்து வந்தன. அக்டோபர் புரட்சி மற்றும் அதன் சிந்தனைகள் 1922இல் லாகூரிலிருந்து வெளிவந்த “இன்குலாப்”, 1923இல் ஜலந்தரி லிருந்து வெளிவந்த “தேஷ் சேவாக்”, 1926இல் அமிர்தசரசில் இருந்து வெளிவந்த “கிர்திக்” (தொழிலாளி) போன்ற வெளியீடு களில் அவை தெளிவுபடுத்தப்பட்டன. இந்த இதழ்களில் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக் கள், பகத்சிங் மீது அழிக்கமுடியாத அளவிற்கு ஈர்ப்பை ஏற்படுத்தின. பகத்சிங், தில்லி நாடா ளுமன்றத்தில் வெடிகுண்டை வீசியபோது, “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று முழக்கமிட்ட தன் மூலமாக, அம்முழக்கத்தை மிகக்குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் கொண்டுசென்று விட்டார். “நான் எந்தத் தனிப்பட்ட நபரையும் குறி வைத்து இந்த வெடிகுண்டை வீசவில் லை. மாறாக, 1919 மாண்ட்போர்ட் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நாடாளு மன்றத்திற்கு எதிராகவே இதனைப் பயன் படுத்துகிறேன்” என்று மிகத் தெளிவாகப் பிரகடனம் செய்தார். ஒரு ஜனநாயக முறையில் செயல்படும் நாடாளுமன்றம் என்று பகட்டான முறையில் பிரிட்டிஷார் சொல்லிக் கொண்டி ருந்தாலும், உண்மையில் அது “சுரண்டல் பேர்வழிகளின் குரல் வளையை நெரிக்கும் அடையாளச் சின்னம்” என்று பகத்சிங்கும் பட்டுகேஷ்வர் தத்தும் தங்களுடைய அறிக் கையில் கூறினார்கள். தொழிற்சங்க இயக்கத் தின் தலைவர்கள் ஒட்டுமொத்தமாகக் கைது செய்யப்பட்டதற்கு (மீரட் சதி வழக்கு தொடர் பாக கம்யூனிஸ்ட்டுகள் கைது செய்யப்பட்ட தற்கு) எதிராகவும், தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தைச் சட்டவிரோதமாக்கி டும் ‘தொழில் தகராறு சட்டமுன்வடிவிற்கு’ எதிராகவும் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக் கையில் இறங்கினோம் என்று தங்கள் அறிக் கையில் அவர்கள் மேலும் பிரகடனம் செய் தார்கள்.

இந்த இளம் புரட்சியாளர்களின் மனதில் ஏற்பட்ட மாற்றம் இவர்களது அறிக்கையிலி ருந்து மிகத் தெளிவாக உலகுக்குத் தெரிய வந்தது. “ஒரு புரட்சிகர மாற்றம் அத்தியாவசி யம். சோசலிசத்தின் அடிப்படையில் சமூக அமைப்பை மாற்ற விரும்பும் அனைவரும் இதனைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.... புரட்சி என்பதன் பொருள், தொழி லாளர் வர்க்கத்தின் இறையாண்மை அங்கீ கரிக்கப்படுவதன் அடிப்படையில் ஓர் உன் னதமான சமூக அமைப்பு இறுதியாக நிறுவப் படுவதேயாகும்,” என்று அந்த அறிக்கையில் அவர்கள் மேலும் தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

துரதிர்ஷ்டவசமாக, காந்தி இப்புரட்சியா ளர்களின் வீரஞ்செறிந்த நடவடிக்கைகளுக்கு எதிராக, எதிர்மறையான அணுகுமுறையைக் கையாண்டார். ஆயினும், பகத்சிங் மேற் கொண்ட வழிகளைக் கண்டிப்பதற்காக, காங் கிரசாரை அணி திரட்டுவதற்கு அவர் மேற் கொண்ட முயற்சிகள் மிகவும் கடினமாகவே இருந்தன.

பகத்சிங், நாட்டுப்பற்றும் தேச விடுதலைப் போராட்ட வீரர்களும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் மாமா அஜீத்சிங், 1905ஆம் ஆண்டு காலனிமய சட்டத்திற்கு (ஊடிடடிnளையவiடிn ஹஉவ) எதிராகப் போராடிய முன்னோடி. இதன் காரணமாக நாடு சுதந்திரம் அடையும் வரை யில் அவர் நாடு கடத்தப்பட்டிருந்தார். அப்போ தும் அவர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடுவதைத் தொடர்ந்து நடத்தி வந்தார். பகத்சிங் தந்தையும், தேச விடுத லைக்கான போராட்டத்தில் தன்னையும் முழுமையாக இணைத்துக் கொண்டவர்தான். இத்தகைய பாரம்பரியம்தான் இயற்கையா கவே பகத்சிங்கிடமும் வீரத்தை விளைவித் திருந்தது. மாணவப் பருவத்திலேயே அவர் புரட்சியாளர்களின் செல்வாக்கிற்கு ஆட்பட் டார். அக்டோபர் புரட்சி அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் விளைவாக வங்காளம், பஞ்சாப், பம்பாய், உத்தரப்பிரதேசம், சென்னை மற்றும் பல்வேறு மாநிலங்களிலும் பல கம்யூனிஸ்ட் குழுக்கள் அமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்தன.

நான் முன்பே குறிப்பிட்டிருப்பதுபோல, சோசலிசக் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு பரப்பிடும் வகையில் ஏராளமான இதழ்கள் வெளிவரத் தொடங்கி இருந்தன. பகத்சிங், ‘‘கிர்த்தி’’ (தொழிலாளி) இதழுடன் தன்னைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். இந்த இதழ் கதார் கட்சி சார்பாக அமிர்தசர சில் இருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. அவர்கள் கம்யூனிஸ்ட் அகிலத்துடன் தொடர் பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். பகத்சிங், இம்மாத இதழின் பஞ்சாபி மற்றும் உருது மொழிகளின் ஆசிரியர்களான சோஹன் சிங் ஜோஷ் மற்றும் ஃபெரோசிதீன் மன்சூர் ஆகி யோருடன் இணைந்து பணியாற்றினார். இதன் வாயிலாக மார்க்சிசம்-லெனினிசத் தை மேலும் ஆழமாகக் கற்றிட பகத்சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தது,. அதன் காரணமாக, இந்தி யப் புரட்சியின் பாதை மார்க்சிச - லெனினிச வழியிலேயே அமைந்திட வேண்டும் என்றும் பகத்சிங் முடிவுக்கு வந்தார்.

அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் இலக்கி யங்கள் மிகவும் குறைவு. மார்க்ஸ் தேர்வு நூல் கள் சிலவற்றின் பிரதிகளைத் தவிர, கம்யூ னிச சித்தாந்தம் குறித்த மங்கலான தெளி வற்ற சில வெளியீடுகளே வெளிவந்திருந்த காலம். பகத்சிங் மாணவராகப் பயின்று கொண் டிருந்த தேசியக் கல்லூரி, இந்த சிந்தனை களைப் பரப்பிடும் மையமாக அப்போது திகழ்ந் தது. இக்கல்லூரியின் முதல்வர் சபிலிதாஸ். இவருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது. இவர் சோசலிசம் பற்றி எழுதிய பல பிரசுரங்கள் புகழ்பெற்றவைகளா கும். இப்பிரசுரங்களில், அறிவியல் பூர்வமான தர்க்கவியல் பொருள்முதல்வாத அணுகுமுறை காணப்படவில்லை எனினும், சோசலிச சிந்தனையை நோக்கி மக்களைக் கவர்ந் திழுக்கும் பங்கினை இவையாற்றின.

இன்றுள்ள தோழர்களுக்குக் கிடைத் திருக்கக் கூடிய அளவிற்கு, அபரிமிதமான அளவில் கம்யூனிச நூல்கள் கிடைக்காத அந் தக் காலத்தில், பகத்சிங்கும் அவரது தோழர்க ளும் இப்போதுள்ள கம்யூனிஸ்ட்டுகள் அள விற்கு மார்க்சிச- லெனினிச அறிவியல் மற் றும் சித்தாந்தம் குறித்து ஞானம் பெற்றிருப்பார் கள் என்று ஒருவர் எதிர்பார்க்க முடியாது, எதிர் பார்க்கவும் கூடாது. ஆயினும் அவர்களுக்குக் கிடைத்திட்ட குறைந்த அளவிலான நூல் களைக் கற்றே அவர்கள், தாங்கள் செல்ல வேண்டிய பாதையை மிகத் தெளிவாக, அஞ் சாநெஞ்சுடனும் அளப்பரிய அர்ப்பணிப்பு உணர்வுடனும் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந் தார்கள். இதுதான் மற்ற புரட்சியாளர்களிலி ருந்து பகத்சிங் மற்றும் அவரது தோழர் களைத் தனியே நிறுத்தி வைக்கிறது. இது தான், அவர்கள் வீரமரணத்திற்குப் பின்னரும் அவர்களைப் புகழடைய வைத்திருக்கிறது. அதனால்தான் நாம் அவர்களது நினைவு களை இன்றும் போற்றிப் பாராட்டுகிறோம்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக் கப்பட்ட சமயத்தில், நாடு முழுவதும் மிகப் பிரம்மாண்டமான வகையில் வெடித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அவர்களுக்கு மக்கள் மத்தி யில் இருந்த செல்வாக்கை வெளிப்படுத்தின. மக்கள் மத்தியில் வெளிப்பட்ட இத்தகைய ஆவேச உணர்ச்சி அலை காரணமாகத்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் உடல்களைத் திருட்டுத்தனமாக அப்புறப்படுத்தி எரியூட்டினர்.

அவர்களது வீரச் செயல்கள் நாடு முழுவ தும் அலை அலையாகப் பிரதிபலித்தது. வீரத் தியாகிகளின் லட்சியத்தின் மீது மக்கள் மத்தி யில் பற்று ஏற்பட்டது. சோசலிசம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண் டும் என்கிற அவா வளர்ந்தோங்கியது. மக்களின் உணர்வு வெளிப்பாடு காங்கிரஸ் கட்சிக்குள் ளும் வெளிப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் விவாதங்களின்போது, கட்சியில் கணிசமான பகுதியினர் பகத்சிங் மற்றும் தோழர்கள் கொல் லப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்களது வீரமரணமும், அவர்கள் நீதிமன் றத்தில் ஆற்றிய வீரஞ்செறிந்த பிரச்சாரமும் சுதந்திரப் போராட்டம் மற்றும் சோசலிசப் புரட்சியின் ஒரு பகுதியாக மாறின.

பகத்சிங் எழுத்துக்களை நுணுகி ஆராயும் போது, பகத்சிங் புரட்சிப் பாதையைத் தேர்ந்தெ டுத்தபின், தனக்குக் கிடைத்த அனுபவங்க ளின் அடிப்படையில், நாட்டில் தன் முன்னி ருந்த யதார்த்த நிலைமைகளைப் புரிந்து கொள்ளத் தொடங்கியதையும் அதன் தொடர்ச் சியாக அரசியல் மற்றும் சித்தாந்தத் தெளிவு பெற்று, சோசலிச லட்சியத்திற்காகத் தன் னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என் கிற நிலைக்கு வந்தார் என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.

இன்று தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாள்

(தோழர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், 14.11.1995இல் எழுதிய கட்டுரை)

தமிழில்: ச.வீரமணி

Sunday, March 20, 2011

யாருக்காக ஆட்சி செய்கிறார்கள்?

கடந்த ஆறு ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியில் உள்ள ஐ.மு. கூட்டணி அரசாங்கம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தள்ளுபடி செய்துள்ள வருமான வரியின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 3 லட்சத்து 74 ஆயிரத்து 937 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக் ட்ரம் ஊழலில் இவர்கள் அடித் தக் கொள்ளையைப் போல் இரு மடங்குக்கும் அதிகமாகும். ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களிடமிருந்து வசூலிக்கும் தொகை யை வசூலிக்காமல் தள்ளுபடி செய்வது என்பது ஒவ்வோராண் டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2005-06ஆம் ஆண் டில் இவர்கள் தள்ளுபடி செய்த தொகை 34 ஆயிரத்து 618 கோடி ரூபாய்களாகும். இப்போது சமர்ப் பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் இவ்வாறு இவர்கள் தள்ளுபடி செய்திருப்பது, 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள். 155 விழுக்காடு உயர்வு. அதாவது ஆட்சியாளர் கள், சராசரியாக நாளொன்றுக்கு 240 கோடி ரூபாய் தொகையைக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்து கொண்டிருக்கி றார்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள 88 ஆயிரத்து 263 கோடி ரூபாய்கள் என்பது கார்ப்பரேட் முதலாளிகள் தரவேண்டிய வருமான வரியை வசூலிக்காமல் தள்ளுபடி செய்த தொகை மட்டுமே. இதில் அவர் களிடமிருந்து வசூலிக்க வேண் டிய வருவாய் தொகைகள், வசூ லிக்காமல் கைவிட்ட தொகை (சநஎநரேந கடிசநபடிநே) சேராது. தங் கம், வைரம் போன்றவைகள் மேல் வசூலித்து வந்த சுங்கத் தீர் வையை அரசாங்கம் கைவிட்டி ருக்கிறது. இதன் மதிப்பு மட்டும் 48 ஆயிரத்து 798 கோடி ரூபாய் களாகும். இதில் பாதி அளவுத் தொகையை செலவு செய்தாலே, நாட்டில் உள்ள மக்கள் அனை வருக்குமான பொது விநியோக முறையை வெற்றிகரமாக அமல் படுத்திட முடியும். கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் ஆட்சியா ளர்கள் தங்கம், வைரம் போன்ற ஆபரணங்களுக்கு விதித்து வந்த சுங்கத் தீர்வையைத் தள்ளுபடி செய்திருப்பதன் மதிப்பு என்பது 95 ஆயிரத்து 675 கோடி ரூபாய் களாகும்.

ஆனாலும் மக்களை மடையர் கள் என்று நினைத்துக் கொண்டு இதற்கெல்லாம் ஆட்சியாளர்கள் சொல்லும் விளக்கம் என்ன தெரி யுமா? இவை எல்லாம் ஏழைகள் நலமுடன் வாழ மேற்கொள்ளப் பட்ட நடவடிக்கைகளாம். தங்கத் திற்கும் வைரத்திற்கும் இவ்வாறு பெரிய அளவில் சுங்கத் தீர்வை தள்ளுபடி செய்திருப்பதற்குக் காரணம், உலகப் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட் டுள்ள ஏழைத் தொழிலாளர் களைக் காப்பதற்காகவாம். என்னே கரிசனம்? சூரத்தில் தங் கம் மற்றும் வைர நகைக ளைச் செய்து வந்த ஒரியா தொழிலாளர் கள் வேலையிழந்து தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பி விட்டார்கள். வேலையிழந்த பலர் தற்கொலைப் பாதையைத் தேர்ந் தெடுத்துள்ளார்கள். இவர்களில் ஒருவரைக்கூட அரசின் இந்நட வடிக்கை காப்பாற்றியதாகத் தெரி யவில்லை. இவ்வாறு ஆட்சியா ளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கார்ப்பரேட் முதலாளி களுக்கு சலுகை அளிப்பது 2008 இலேயே தொடங்கிவிட்டது. ஆயி னும் கடந்த மூன்றாண்டுகளில் இம்மாநிலத்தில் நாள்தோறும் சராசரியாக 1800 பேர் வேலை யிழந்து வருகிறார்கள்.

இவை மட்டுமல்ல, வேறு எந்தெந்த விதங்களில் எல்லாம் ஆட்சியாளர்கள் கார்ப்பரேட் முத லாளிகளுக்குச் சேவகம் செய்கி றார்கள் என்று பார்ப்போம். கார்ப்ப ரேட் முதலாளிகள் நடத்தி வரும் அதிநவீன மருத்துவமனை களுக்கு இறக்குமதி செய்யப்படும் அதிநவீன மருத்துவ உபகரணங் களுக்கு கோடிக்கணக்கான ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் மட்டும் இவ்வாறு 1 லட்சத்து 74 ஆயிரத்து 418 கோடி ரூபாய்கள் சுங்கத் தீர்வையிலி ருந்து விலக்கு அளிக்கப்பட்டி ருக்கிறது.

அதேபோல் கலால் வரியிலும் 1 லட்சத்து 98 ஆயிரத்து 291 கோடி ரூபாய்கள்அளவிற்கு வர வேண்டிய வருவாய் வசூலிக்கப் படாமல் கைவிடப்பட்டிருக்கி றது. சென்ற ஆண்டு இத்தொகை 1 லட்சத்து 69 ஆயிரத்து 121 கோடி ரூபாய்களாகும்.

இவ்வாறாக ஆட்சியாளர்கள் 2005-06ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளில் கார்ப் பரேட் முதலாளிகளிடமிருந்து வசூலிக்காமல் ரத்து செய்த தொகை எவ்வளவு தெரியுமா? 21லட்சத்து 25 ஆயிரத்து 023 கோடி ரூபாய்களாகும். 2ஜி ஸ்பெக்ட் ரம் ஊழல் மூலம் அடித்த தொகை யைப் போல் 12 மடங்கு. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டுமே இந்த அளவிற்கு அரசின் கஜா னாவிற்கு வரவேண்டிய தொகை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள் ளித்தரப்பட்டிருக்கிறது.

நாட்டின் அனைவருக்கு மான பொது விநியோக முறையை அமல்படுத்தி, நாட்டு மக்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் உணவுத் தேவையை உத்தர வாதப்படுத்து என்று கோரினால், அதற்குப் பணத்திற்கு எங்கே போவது என்று புலம்பும் ஆட்சி யாளர்கள் கார்ப்பரேட் முதலாளி களுக்கு கடந்த ஆறு ஆண்டு களில் அள்ளித்தந்துள்ள தொகை 21 லட்சம் கோடி ரூபாய்கள்.

ஏழையின் சிரிப்பில் இறை வனைக் காண்போம் என்று கூறு பவர்களும், சாமானியர் களுக்காகவே ஆட்சியில் இருக் கிறோம் என்று கூறுபவர்களும் உண்மையில் யாருக்காக ஆட்சி யில் இருக்கிறார்கள் என்பது மேற்கண்ட விவரங்களிலிருந்து நன்கு தெரிகிறதல்லவா?

-ஆதாரம்: பி. சாய்நாத், நியு ஏஜ் வார இதழில் எழுதிய கட்டுரை

ச.வீரமணி

குற்றவாளிக் கூண்டில் மன்மோகன் அரசு

பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-1 அரசாங்கம், இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 2008ம் ஆண்டு ஜூலையில் தன்னிச் சையாக முடிவெடுத்ததை அடுத்து, இடதுசாரிக் கட்சிகள் அதற்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தில் நடை பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, எம்.பி.க்களின் வாக்குகளை வாங்குவ தற்காக காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் மேற் கொண்ட இழி செயல்களை தற்போது விக்கிலீக்ஸ் இணைய தளம் அம்பலப் படுத்தி இருக்கிறது.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள விபரங்கள் ஐ.மு.கூட்டணி-1 அரசாங் கமானது, எந்தஅளவிற்கு மிகவும் ஆழ மாக அமெரிக்க அரசாங்கத்தின் ‘‘ராணு வக் கூட்டாளி’’யாக இந்தியா மாறு வதை உத்தரவாதப்படுத்தக்கூடிய அள விற்குப் பணிந்து போயிருக்கிறது என் பதை ஏராளமான ஆதாரங்களுடன் சுட் டிக்காட்டி இருக்கின்றன. இந்த விப ரங்கள், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி -1 அரசாங்கம் தரம் தாழ்ந்து சென்றிருக்கிறது என்பதையும், அதன் கேடுகெட்ட அரசியல் சந்தர்ப் பவாதத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளன.

அப்போது நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தையும் நம் நாட்டிலும் மற்றும் உலகம் முழுதும் பார்த்திட்ட மக்கள், எந்த அளவிற்கு நம் நாடாளுமன்ற ஜன நாயகம் மோசமாகிக் கொண்டிருக் கிறது என்பதைக் கண்டனர். அப்போது மக்களவையின் சபாநாயகராக இருந்த வர், இவ்வாறு ‘எம்.பி.க்களின் வாக்கு களைப் பெற பணம்’ வந்த விபரங்கள் குறித்துப் புலனாய்வு செய்திட ஒரு குழுவை நியமித்தார். அக்குழுவும் தன் அறிக்கையை அவையில் தாக்கல் செய் தது. அதில் கிரிமினல் நடவடிக்கை களில் ஈடுபட்ட பேர்வழிகள் மீது உரிய அமைப்புகள் மூலம் புலனாய்வு மேற் கொள்ளப்பட வேண்டும் என்று பரிந் துரைத்திருந்ததாக நம்பகமான தக வல்கள் மூலம் தெரியவருகிறது. ஆயி னும், இதுவரை இதன்மீது உருப்படி யான நடவடிக்கை எதுவும் மேற்கொள் ளப்படவில்லை.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியுள்ள உண்மைகள், இந்த விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரு மகனும் முழுமையாக சம்பந்தப்பட் டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. மேலும் அவற்றில், ‘‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரும், சோனியா காந்தியின் நெருங்கிய குடும்ப நண்பர்களில் ஒருவராகவும் கருதப்பட்ட’’ ஒரு காங்கிரஸ் எம்.பி., குறித்தும் நேரடியாகப் பல விபரங்கள் தரப்பட்டிருக்கின்றன. இவ்வாறாக, இந்த நிகழ்வு தொடர்பாக முறையாகப் புலனாய்வு நடைபெற்றிருந்தால், ஆளும் கட்சியும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி களும் மிகவும் சங்கடத்திற் குள்ளாகி இருக்கும். அதனால்தான் நாடாளு மன்ற நிலைக்குழு அளித்த பரிந்துரை கள் மீது உரிய நடவடிக் கைகள் ஐ.மு. கூட்டணி அரசாங்கத்தால் எடுக்கப் படவில்லை என்று தெரிகிறது.

பிரதமரும் ஐ.மு.கூட்டணி அர சாங்கமும் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். நாடா ளுமன்ற ஜனநாயகத்தை ஊனப்படுத் தியுள்ள இந்த இழி செயல்களில் ஈடு பட்ட - இப்போது விக்கிலீக்ஸ் வெளிப் படுத்தியுள்ள - பிரதான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, அவர்களின் குற்றச் செயல்கள் குறித்துப் புலனாய்வு மேற்கொள்ள உடனடியாக அரசு முன் வர வேண்டும். கிரிமினல் நடவடிக் கைகளில் ஈடுபட்டவர்களைக் குற்ற வாளிக் கூண்டிற்குக் கொண்டுவரு வதன் மூலம், நம் நாட்டின் நாடாளு மன்ற ஜனநாயகத்தின் உயரிய மாண் பினை மீட்டெடுத்திட குறைந்தபட்சம் இதனைச் செய்திட வேண்டியது அவ சியமாகும்.

- தமிழில்: ச.வீரமணி