Monday, November 16, 2015

நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக!





நேபாளத்தைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துக!

மோடி அரசாங்கம், நேபாளத்துடன் மேற்கொண்டுள்ள மோதல் போக்கு, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்திய - நேபாள உறவில் விரிசலை ஏற் படுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம், செப்டம்பர் 20ஆம் தேதி, நேபாளத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அரசமைப்புச் சட்டத் திற்கு எதிர்மறையான அணுகுமுறையைப் பின்பற்றத் தொடங்கியபின், மோதல் போக்கைக் கடைப்பிடிப்பது அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாக, இந்தியாவிலிருந்து நேபாளம் செல்லும் அனைத்துப் பாதைகளும் அடைக்கப்பட்டிருக் கின்றன. நேபாளம், தன்னுடைய அனைத்து அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் வர்த்தகத்தையும் இந்தியா வழியாகத்தான் செய்து வந்தது. மோடி அரசாங்கத்தால் தூக்கிப்பிடிக்கப்பட்டுள்ள மாதேசி கிளர்ச்சி காரணமாக, ராக்சால் - பிர்குஞ்ச் குறுக்குச்சாலையும் மற்றும் பல பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இது அத்தியாவசியப் பொருள்கள் மற் றும் எரிபொருள் பற்றாக்குறையை கடுமையாக ஏற்படுத்தி இருக்கிறது.
நேபா ளம் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபின், அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். சாலைகள் அடைக்கப்பட்டதால் புனர்நிர் மாண வேலைகளில் ஈடுபட்ட மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குளிர்காலம் வருவதற்குள்ளாகவே ரெடிமேட் வீடுகளைக் கட்டிட வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மலைப்பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்துவந்த ஹெலிகாப்டர் களுக்குப் போதிய எரிபொருள் கிடைக்காத தால் அவற்றின் இயக்கமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் சமையலுக்கான எரிபொருள் கிடைக் காததால், காட்டு மரங்களை வெட்டி விறகுகளாகப் பயன்படுத்துகிறார்கள். இது வனத்தையே அழிக்கக்கூடிய அளவிற்கு இட்டுச்சென்று கொண்டிருக்கிறது. மாதேசி கிளர்ச்சியால்தான் சாலைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவ்வாறு சாலைகள் அடைக்கப் பட்டிருப்பதற்கும், இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கிற இந்திய அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இடையே யான எல்லைப் பகுதிகளில் போக்கு வரத்து இயல்பாக நடந்திட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று இந்திய அரசின் சார்பில் இதுவரை ஓர் அறிக்கை கூட வெளியிடப்படவில்லை. இருநாடுகளுக்கும் இடையே போக்கு வரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்பட்டதாகவும் தெரியவில்லை. உண்மையில், கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறாத கிழக்கு நேபாள எல்லையில்கூட சாலைகளை அடைத்திட இந்திய அரசுஅதிகாரப்பூர்வமற்ற முறையில் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்ப தாகக் கூறப்படுகிறது.நேபாளத்தில் அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்ததற்குப்பின்னர், கே. பி. சர்மா ஒலி பிரதமராகப் பொறுப்பேற்றதை அடுத்து, புதிய அரசாங்கம் நேபாளத்தில் நிறுவப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நேபாளத் துணைப் பிரதமர்தில்லிக்கு விஜயம் செய்தார். இந்திய அயல்விவகாரங்கள் துறை அமைச்சருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, கிழக்குப் பகுதியில் சில குறுக்குச் சாலை கள் போக்குவரத்திற்காக, திறந்துவிடப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் இவரது வேண்டுகோளுக்கு இந்தியாவின் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித பதிலும் இல்லை. மாதேசி கிளர்ச்சியை ஆதரிப்பதில் இந்திய அரசாங்கம் எவ்விதத் தயக்கமும் காட்டவில்லை. மாதேசி கிளர்ச்சிக் குழுவினர் நரேந்திர மோடி மற்றும் இந்தியஅரசாங்கத்தின் ஆதரவினை வெளிப் படையாகவே கோரி வருகின்றனர்.
அக்டோபரின் கடைசி வாரத்தில், மாதேசி தலைவர்களின் தூதுக்குழுவினர் தில் லிக்கு விஜயம் செய்திருந்தனர். இது, நேபாளத்தின் உள் விவகாரங்களில் பகிரங்க மாகவே தலையிடும் விஷயமாகும். பிர்குஞ்ச் பகுதியிலிருந்து கிளர்ச்சியா ளர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று நேபாள அதிகாரிகள் கோரியபோது, .இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, போலீஸ் துப்பாக்கிச்சூடு நடைபெறுவதற்கு இட்டுச்சென்றது. இதில்இந்திய சிறுவன் ஒருவன் இறந்தான். கிளர்ச்சியில் ஈடுபட்ட சில இந்தியர்களைக் கைது செய்திருப்பதாக, நேபாள அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் மூர்க்கத்தனமான நிலைப்பாட்டை இந்திய அயல்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைஅம்பலப் படுத்திவிட்டது. அவர் அந்தஅறிக்கையில், “நேபாளத்தை எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் அரசியல் முக்கியத்துவம் உடையவைகளாகும். அவற்றை வலுக்கட்டாயமாகத் தீர்த்திட முடியாது. தற்போதைய மோதலுக்குக் கார ணங்களாக அமைந்துள்ளவை குறித்து, நேபாள அர சாங்கம் உண்மையாகவும், வலுவாகவும் தீர்மானிக்க வேண்டியது அவசியமாகும்.’’ இந்தியா ஆதரிக்கும் மாதேசிகளின் கோரிக்கையை நேபாளம் அங்கீகரிக்க வேண்டியது அவசியம் என்று இந்தியா நேபாளத்தின் நெற்றியில் துப்பாக் கியை வைத்து மிரட்டும் செயலே இது வன்றி வேறல்ல. இந்திய அரசாங்கம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது, நேபாள மக்களின் மத்தியில் கடும் எரிச்சலை ஏற் படுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு எதிராகமக்களில் பெரும்பான்மையோர் ஆத்திரப் படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நேபாள அரசாங்கத்தையும் அதன் அரசி யல் நிறுவனத்தையும் மிரட்டி அடக்க மோடி அரசாங்கம் முரட்டுத்தனமாக மேற் கொண்டுள்ள முயற்சிகளுக்கு எதிராக நேபாளத்தில் இயங்கும் அனைத்துக் கட்சிகளும் கட்சி வித்தியாசமின்றி ஒன்று பட்டுள்ளன. இதனால் நேபாளம் சீனாவைஅணுக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி யுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஓர்ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, திபெத்திலிருந்து தரைமார்க்கம் வழியாக சீனா 1000 மெட்ரிக் டன் பெட்ரோல் வழங்க ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்தியாஅனைத்து சாலைகளையும் அடைத்து வைத்திருப்பது குறித்து, நேபாள அயல்துறை அமைச்சர் ஐ.நா.அமைப்பிடம் முறையிட்டிருக்கிறார். நேபாள மக்கள் சாலைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதன் காரண மாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சார்க் நாடுகள் அனைத்தும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளன. நேபாளம் குறித்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை ஓர் அரைவேக்காட் டுத் தனமான ஒன்று என்று சொல்வதற் கில்லை. இந்தப் பிராந்தியத்தில் தான் ஒரு தேசிய வெறி கொண்ட பெரிய வல்லரசு நாடு என்று காட்டிக்கொள்வதற்காக, மோடி அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள் கிறது. மேலும் நேபாள அரசியல் நிர்ணயசபை, நேபாளத்தை ஓர் மதச்சார்பற்ற குடியரசு என்று பிரகடனம் செய்ததற் காக, ஆர்எஸ்எஸ்-பாஜக பரிவாரங்கள் நேபாள அரசை பகிரங்கமாகவே அவமதித்துக் கொண்டிருக்கின்றன. நரேந்திர மோடி யும், பாஜக அரசாங்கமும் மாதேசிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக நேபாள அர சைப் பகைத்துக்கொள்ளவும் தயாராகவே இருக்கின்றன. இதன்மூலம் பீகாரில் வாழும் மாதேசிகளின் ஆதரவினைப் பெற்று தேர்தலில் வென்றுவிடலாம் என் பது பாஜகவின் எண்ணம். ஆனால் அது நடக்கவில்லை.தெற்கு ஆசியாவில் மோடி அரசாங்கத்தின் அயல்துறைக் கொள்கையை தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித்ஜோவல், வடிவமைத்துக் கொண்டிருக் கிறார். இவரது நடவடிக்கைகளின் காரண மாக பாகிஸ்தானுடனான உறவுகள் ஏற்க னவே சிதிலமடைந்துவிட்டன. இப்போது, மிக நீண்ட காலம் கலாச்சார ரீதியாகவும், நாகரிக உறவுகளிலும் மிகவும் நெருக்க மாக இருந்த நேபாளத்தையும் எதிரி நாடாகமாற்றிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, நேபாளம் பாதுகாப்புக் கோரி, சர்வ தேச அமைப்புகளை அணுக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கிறது. இதனால்சர்வதேச அளவில் இந்தியாவின் சித்திரம்மிகவேகமாக சிதைந்து கொண்டிருக்கிறது.நேபாளத்தைக் கொடுமைப்படுத்தும் இக்கொடூரமான கொள்கையை மோடி அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண் டும். நேபாள அரசாங்கத்துடன் கலந்துபேசி எல்லையில் சாலைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடைகளை அகற்றிட வேண் டும். மாதேசிகள் மற்றும் ஜன்ஜாதிகள் பிரச்சனைகள் நேபாளத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக சுமுகமாகத் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும். இந்தத் திசை வழியில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு மாதேசி குழுக்களிடம் இந்திய அரசு தன் செல்வாக்கினைப் பயன்படுத்திட வேண்டும்.
(தமிழில்: ச. வீரமணி)

Thursday, November 12, 2015

பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு



பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு பெரும் பின்னடைவு
பீகார் தேர்தல் முடிவு பாஜகவிற்கு கடும் தோல்வியினை ஏற்படுத்தி இருக் கிறது. ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று, ஆட்சிக்குவந்திருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள், நாட்டின் அரசியலில் மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த இருக்கின் றன. பாஜக, மக்களவைத் தேர்தலின்போது மேற்கொண்ட அதே உத்தியை - அதாவது வளர்ச்சி குறித்துப் பேசிக்கொண்டே, மதவெறித் தீயை விசிறிவிடுவது - இப் போதும் பின்பற்றியது. மக்களவைத் தேர்தலின்போது மதவெறித் தீயை மக்களிடம் கொண்டு சென்ற நூற்றுக்கணக் கான ஆர்எஸ்எஸ் ஊழியர்கள், பீகார்தேர்தலின்போதும் இறக்கிவிடப்பட்டார் கள். உச்சகட்டமாக, நரேந்திர மோடியும், அமித்ஷாவும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறியை உமிழ்ந்தார்கள். மோடி பேசியஇடங்களில் எல்லாம், ஐக்கிய ஜனதா தளமும், ராஷ்ட்ரிய ஜனதா தளமும் “தலித்துகள், மகா தலித்துகள், பிற்படுத்தப் பட்டோர், பொருளாதார ரீதியாக பிற் படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 5 சதவீத இடங்களை ஒரு குறிப் பிட்ட இனத்தினருக்குக் கொடுக்க முன்வந்திருக்கிறார்கள்,’’ என்று மக்களை எச்சரித்தவண்ணம் இருந்தார்கள்.
இதே கருத்தைத் தாங்கி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக விளம்பரங்களும் செய்தார்கள். பாஜகவின் தலைவர் அமித் ஷா பேசுகையில், பாஜ கவை எதிர்ப்பவர்கள் எல்லாம் தேச விரோதிகள் என்று பொருள்படும்படி, பாஜகவின் தோல்வி, பாகிஸ்தானில் வெடிகள் வெடித்துக் கொண்டாடப்படும் என்று பிரகடனம் செய்தார். தேர்தல் பிரச் சாரத்தின்போது, “பசுக்களும்’ ’ பயன்படுத்தப்பட்டு, “பசுக்களுக்கு அச்சுறுத்தல்’’ என்று விளம்பரங்கள் செய்யப் பட்டன.பாஜக, மக்களின் மனோநிலை குறித்து, முழுமையாகத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டது. மத்தியில் ஆட்சி செய்தபாஜக-வின் 18 மாத கால ஆட்சி, “வளர்ச்சி’’ குறித்துப் பேசினாலும், அது முற்றிலும் மாயை என்பதை மக்களுக்குப் புரிய வைத்துவிட்டது. பருப்புகளின் விலைகிலோ ரூ.200க்கும் அதிகமாக உயர்ந்து விட்டன. பாஜக, உயர்சாதியினர், பொரு ளாதார ரீதியில் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகளை ஒன்றிணைப்பதன் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என கனவுகண்டது. ஆனால் பாஜகவின் கனவை,ஆர்ஜேடி - ஐக்கிய ஜனதா தளத்தின்ஒற்றுமை சுக்கு நூறாக உடைத் தெறிந்துவிட்டது. தேர்தல் பிரச்சாரம் உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இடஒதுக்கீட்டுக் கொள்கை மறுபரி சீலனை செய்யப்படும் என்று அறைகூவல் விடுத்தது,
மக்கள் மத்தியில் பாஜக- ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிநிரல் உயர்சாதியி னரைத் தூக்கிப்பிடிக்கும் இந்துத்துவா கொள்கைதான் என்பதை உறுதிப்படுத்தி விட்டது. இன்றைய சூழ்நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய முக்கியத்துவம் பெறுகின்றன. மோடி அரசாங்கம் பத விக்கு வந்ததிலிருந்தே, ஆர்எஸ்எஸ் பரிவாரம் இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை முன்னெ டுத்துச் செல்ல வெறித்தனமாகப் பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டு வந்தன. சிறுபான் மையினர் மீதான தாக்குதல்கள், பசுவதைபோன்ற பிரச்சனைகளை வைத்து அவர் களைக் குறிவைத்துத் தாக்குதல், இதன்விளைவாக தாத்ரியில் முகமது இக்லாக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டது ஆகிய சம்பவங்கள் தெள்ளத்தெளிவாக்குகின்றன. மதச்சார்பற்ற அறிவு ஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களையும் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார்கள். இதன் விளைவாகத்தான் பன்சாரே மற்றும் கல்புர்கி கொல்லப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றன. மத்திய அமைச்சர வையில் உள்ள அமைச்சர்களிலிருந்து, ஆர்எஸ்எஸ் பரிவாரங்களின் அடிமட்ட ஊதுகுழல்கள் வரை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளத்தை அகற்ற வேண்டும் என்ப திலேயே குறியாக இருந்தார்கள்.
பீகார்தேர்தல் பிரச்சாரத்தின்போதும் இத்தகைய மோசமான பிரச்சாரம் அவர்களால் உமிழப் பட்டன. மோடி அரசாங்கத்தின் பதினெட்டு மாத கால ஆட்சியில் சாமானிய மக்களின் வாழ்க்கையில் கடும் தாக்குதல்கள், சமூக நலத்திட்டங்கள் கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய வலது சாரி பொருளாதார மற்றும் மதவெறி நிகழ்ச்சி நிரலைத்தான், பீகார் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ஆறு இடதுசாரிக் கட்சிகள் சட்ட மன்றத் தேர்தலில் ஒன்றுபட்டு நின்று போட்டியிட்டன. பிரதான கூட்டணி களுக்கு இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இடதுசாரிகள் சுமார் 4 சதவீதவாக்குகளையும், சிபிஐ(எம்-எல்-லிப ரேசன்) கட்சிமூலம் மூன்று இடங்களையும் பெற முடிந்திருக்கிறது.
இடதுசாரிக் கட்சிகளின் தேர்தல் புரிந்துணர்வு மிகவும் தாமதமாகத்தான் உருப்பெற்றது. தேர்தல்கள்அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர் 7 அன்றுதான் அனைத்து இடதுசாரிக் கட்சி களின் கூட்டு சிறப்பு மாநாடே நடந்தது. தொகுதி ஒதுக்கீட்டிலும்கூட முழுமை யான அளவில் அனைத்துக்கட்சிகளும் ஒத்துப்போகவில்லை. மாநில அளவில் தீவிரமான அளவில் கூட்டுப் பிரச்சாரமும் நடைபெறவில்லை. இவ்வளவு பலவீனங் கள் இருந்தபோதிலும், இடதுசாரிக் கட்சிகளின் ஒற்றுமை மாநிலத்தில் ஒரு வலு வான இடது ஜனநாயக கூட்டணியை கட்டிஎழுப்பிட முடியும் என்பதைக் காட்டி இருக் கிறது. இதற்கு வரவிருக்கும் காலங்களில் இடதுசாரிக்கட்சிகள் ஒன்றுபட்டு நின்று செயல்பட வேண்டும். பீகார் தேர்தல் வெற்றி, மோடி அரசாங்கத்தின் வலதுசாரிப் பொருளா தாரக் கொள்கைகள், ஆர்எஸ்எஸ்-பாஜககூட்டணியின் மதவெறி நிகழ்ச்சிநிரல், வளர்ந்துகொண்டிருக்கும் எதேச்சதி காரம் ஆகியவற்றிற்கு எதிராக நடைபெற் றுக் கொண்டிருக்கும் அகில இந்தியப் போராட்டங்களுக்கு உதவிடும். வலதுசாரி தாக்குதலின் இம்மூன்று அம்சங்களுக்கு எதிராக வலுவான இயக்கங்கள் மற் றும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட, மேடை அமைக்கப் பட்டுவிட்டது.
நவம்பர் 10, 2015 தமிழில்: ச. வீரமணி