Monday, October 27, 2014

மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை(2)

(2)

மோடி அரசாங்கம்: மேற்கொண்டுள்ள  நிகழ்வுகள்
(முன்கூட்டி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதன் பொருள் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும்.)

2014 பொதுத் தேர்தல்கள் நடைபெற்ற சமயத்திலேயே, இப்பகுதியில் நாம்நரேந்திர மோடி தலைமையிலான பாஜக,  ‘வளர்ச்சிஎன்றும் குஜராத் மாடல்என்றும் பல்வேறு தேர்தல் தாயத்துக்களை அணிந்திருந்த போதிலும், எதார்த்தத்தில் அவை மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் பிரச்சாரத்தையே மேற்கொண்டன  என்றும் அவற்றை மூடிமறைக்கும் முகமூடி களாகவே மேற்படி தாயத்துக்களை அவை பயன்படுத்திக் கொண்டன என்றும்  பல தடவைகள், சுட்டிக்காட்டினோம். காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ-2 அரசாங்கத்தின் மீது மக்களிடம் விரிவான முறையில் அமைந்திருந்த வெறுப்பு உட்பட பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும், அவற்றையெல்லாம்விட அதிகமாக,  ‘இந்து வாக்குவங்கியை மதவெறி அடிப்படையில் ஒருமுகப்படுத்தி, நாணமற்ற முறையில் அது மேற்கொண்ட வாக்கு வங்கிஅரசியல்தான் தேர்தல் ஆதாயங்களுக்கு மிகவும் பிரதான காரணியாகும். எனவேதான், பாஜக இந்த வெற்றிக்குப்பிறகு, (மொத்தம் வாக்களித்தவர்களில் 31 சதவீத அளவிற்குத்தான் மக்கள் அதற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றபோதிலும் கூட) தற்போதைய மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தத்துவார்த்த அடிப்படையில்  அவர்களின் வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிச இந்து ராஷ்ட்ரமாகமாற்றிட  மிகவும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஆர்எஸ்எஸ் என்னும் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தான் பாஜக. இந்த அரசாங்கத்தின் முதல் நூறு நாட்கள் முடிவதற்கு முன்பேயே, இவர்கள் தங்களின் மதவெறி நிகழ்ச்சிநிரலை மிக வேகமாகக் கட்டவிழ்த்து விடத் துவங்கி விட்டார்கள். தேர்தல் சமயத்தில்  வளர்ச்சி குறித்து அவிழ்த்துவிட்ட வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு காற்றாகப் போய்விட்டன. இவர்கள் கூறியதையெல்லாம் நம்பி இவர்களுக்கு வாக்களித்த அப்பாவி மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் தகர்ந்து தரைமட்டமாகிவிட்டன.  ஆட்சிப்பொறுப்பு ஏற்றவுடனேயே இந்த அரசாங்கம் டீசல், சமையல் எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருட்களின் விலைகளையும்ரயில் கட்டணங்களையும் செங்குத்தான விதத்தில் உயர்த்திவிட்டது.   இவர்களின் பட்ஜெட் மற்றும்  நாடாளுமன்ற நடவடிக்கைகள் அனைத்தும் எவ்விதக் கூச்ச நாச்சமுமின்றி நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை இவர்கள் பின்பற்றுவதை வெளிப்படுத்து கின்றன.  சர்வதேச நிதி மூலதனத்தின் ஆதரவுடன் இந்திய கார்ப்பரேட்டுகள் மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு அளப்பரிய அளவிற்கு ஆதரவு அளித்த பின்னணியில், இதுபோன்றதொரு நிலைமை ஏற்படுவது இயற்கையாகவே தவிர்க்கமுடியாத ஒன்றுதான். எனவேதான், நாட்டு மக்கள் நலன்களையும்  நாட்டின் இறையாண்மையும் காவு கொடுத்து அந்நிய முதலீடுகளுக்கு அதிக அளவில் வாய்ப்புகளையும், இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கு மிகப்பெரிய அளவில் சலுகைகளையும் அளித்து வருகிறார்கள்.
பாஜக தன்னுடைய மதவெறி நிகழ்ச்சி நிரலை அடக்கி வாசிக்கும் என்று கூறி தேர்தல் பிரச்சாரத்தின்போது அதனை ஆதரித்தவர்களில் பலர், புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒருசில வாரங்களுக்குள்ளேயே, தாங்கள் வஞ்சிக்கப் பட்டுவிட்டோம் என்பதை உணர்ந்து இப்போது அமைதியாகி விட்டார்கள். வெறிபிடித்த இந்துத்துவா நிகழ்ச்சிநிரல் - அரசியலமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்தல், பொது சிவில் சட்டம், அயோத்தியில் தாவாவுக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுதல் - அனைத்தும் கேபினட் அமைச்சர்களால் பேசப்படும் சங்கதிகளாகிவிட்டன. பாஜக வெற்றியைத் தொடர்ந்து, ‘இந்து ராஷ்ட்ரம்நிறுவப்படுவது தொடங்கிவிட்டது என்று ஒரு கோவா அமைச்சர் பேசியிருக்கிறார்.
நாட்டின் பல பகுதிகளில், வகுப்புவாத பதட்ட நிலைமைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் மூர்க்கத்தனமான முறையில் கலகங்களும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதும் நடந்திருக்கின்றன. தேர்தலுக்கு முன்பே முசாபர்நகரில் மதவெறித் தீ கொளுந்துவிட்டு எரிந்து பலர் கொல்லப்பட்டதையும், காயங்கள் அடைந்ததையும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளைத் துறந்து வெளியேற்றப்பட்டதையும் இப்பகுதியில் முன்பு குறிப்பிட்டிருக்கிறோம்.  2013இல் தேர்தல் நடைபெற்ற சமயத்தில், நாடு முழுதும் வகுப்புவாத வன்முறையின் கீழ் 823 நிகழ்வுகள் நடந்துள்ளன என்று உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் மட்டும், 247 வன்முறை வெறியாட்டங்கள் நடந்துள்ளன. இதன் பின்னணியில்தான் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 மக்களவை இடங்களில் பாஜக 71 இடங்களையும் அதன் கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களையும் வென்றுள்ளன. தேர்தலுக்கு முன் சில மாதங்களில் நாடு முழுதும் நடைபெற்ற வகுப்புவாத வன்முறை சம்பவங்களில் இம்மாநிலம் உச்சத்தில் இருந்தது. 2014இல் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் நாடு முழுதும் 149 வகுப்புவாத மோதல்கள் நடைபெற்றுள்ளன. சட்டமன்றத் தேர்தல்களை விரைவில் சந்திக்கவிருக்கும் மகாராஷ்ட்ராவிலும், அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்திலும் இத்தகைய மோதல்கள் அதிக அளவில் இடம் பெற்றிருக்கின்றன.
தில்லியில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றமே 16க்குப் பின், கடந்த பத்து வாரங்களில், உத்தரப் பிரதேசத்தில் மட்டும் வகுப்புவாத தன்மை கொண்ட 605 நிகழ்வுகள் நடந்துள்ளதாக, அதிகாரபூர்வ புள்ளி விவரங்களை ஆதாரமாகக் கொண்டு, தேசிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மிக விரைவில் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடைபெறக்கூடிய 12 சட்டமன்றத் தொகுதிளைச் சுற்றி இந்நிகழ்வுகளில் மூன்றில் இரண்டு பங்கு நடைபெற்றிருக்கிறது என்பது குறித்துக் கொள்ளப்பட வேண்டியவைகளாகும். இதேபோன்றே பீகாரிலும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறவிருக்கும் 10 தொகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சியில் அமர்ந்தபிறகு, பாஜகவானது தன்னுடைய அனைத்தும் நன்றாகவே நடக்கிறது’’ என்பதுபோன்ற முழக்கங்களுக்கு விடைகொடுத்துவிட்டு, தங்கள் தேர்தல் ஆதாயங்களை மேலும் அதிகரித்துக்கொள்ளக்கூடிய விதத்தில் ஆர்எஸ்எஸ்-இன் ஆணிவேர்களான மதவெறித் தீயைக் கூர்மைப்படுத்தும் வேலையில் மிகவும் கூச்சநாச்சமின்றி இறங்கிவிட்டது.
இத்தகைய வகுப்புவாத பதட்டநிலைமைகளைத் தூண்டிவிடக்கூடிய விதத்தில் வேறு சில சமூக மூலக்கூறுகளும்’’ இருக்கின்றன.  முசாபர்நகர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஜாட் இனத்தவரை நிறுத்தியதைப் போல, சஹரான்பூர் கலவரங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக சீக்கியர்களை நிறுத்தி இருக்கின்றன. இடைத்தேர்தல்களின்போது பகுஜன் சமாஜ் கட்சி ஒதுங்கி இருந்த சமயத்தில், பாஜக-வானது தலித்துகளின் ஆதரவினைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராம் 1980களின் பிற்பகுதிகளில், முஸ்லீம்களையும் தலித்துகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்துதான் அக்கட்சி மாநில அரசாங்கத்தில் அமர முடிந்தது. தாங்கள் வெற்றி பெற வேண்டுமானால் இந்த ஒற்றுமை தகர்க்கப்பட வேண்டும் என்பதை பாஜக நினைத்தது. குறிப்பாக மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இதனைச் செய்திட அது முனைந்தது. நாட்டு மக்கள் மத்தியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை அழிப்பது நாட்டின் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் மிகப்பெரிய அளவில் அழிவினை உண்டாக்கும். ஆயினும் ஆர்எஸ்எஸ்/பாஜக, நாட்டில் மக்கள் மத்தியில்  நிலவும் இத்தகைய சமூக நல்லிணக்கத்தினை, மனச்சான்றின் உறுத்தல் எதுவுமின்றி, தங்கள் தேர்தல் மற்றும் அரசியல் ஆதாயங்களுக்காக அழித்தொழித்திடும் வேலைகளில்  இறங்கி இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கூட்டங்களில் தலைவர்கள் ஆற்றும் உரை கலகத்தைத் தூண்டக்கூடிய விதத்தில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்ற வாரம் இந்தூரில் உரையாற்றிய விசுவ இந்து பரிசத் தலைவர் ஒருவர் முஸ்லீம்கள் 2002 குஜராத்தை மறந்திருக்கலாம், சென்ற ஆண்டு நடந்த முசாபர்நகர் கலவரங்களை நன்கு அறிந்திருப்பார்கள் என்று பேசியிருக்கிறார்.  அனுமானின் வாலில் நீங்கள் தீ வைப்பீர்களானால், இலங்கை எரியும்,’’ என்றும் அவர் தன் பேச்சின்போது மேலும் மிரட்டியிருக்கிறார்.
இவ்வாறு இவர்களின் சமிக்ஞைகள் மிகவும் தெளிவானவை. முன்கூட்டி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதன் பொருள் தாக்குவதற்கான முன்னேற்பாடுகளைச் செய்கிறார்கள் என்பதாகும். இவ்வாறு இவர்கள் மேற்கொள்ளும் மதவெறி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திட, நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியரும் கிளர்ந்தெழுந்திட வேண்டும். இவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் இதுகாறும் பின்னிப்பிணைந்து உருவாக்கப்பட்டுள்ள நம் நாட்டின் பல்வேறு இன, பல்வேறு மத, பல்வேறு சமூக வலைப்பின்னலை பலவீனப்படுத்தி, சிதறடித்திடும். அதனை அனுமதித்திடக் கூடாது. அத்தகைய அவர்களின் முயற்சிகளை நாம் அனைவரும் வலுவானமுறையில் ஒன்றுபட்டு நின்று முறியடித்திடுவோம்.
(ஆகஸ்ட் 11, 2014)



Sunday, October 26, 2014

மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை - சீத்தாராம் யெச்சூரி


இலக்கியா  வாசகர்களுக்கு,
மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’’ என்னும் புத்தகம் 2014 அக்டோபர் 30 அன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்
சீத்தாராம் யெச்சூரியால் வெளியிடப்படுகிறது. அதில் தோழர் சீத்தாராம் யெச்சூரி பாரதிய ஜனதா கட்சியின் தத்துவார்த்தப் பின்புலம் என்ன என்பதையும், அதன் வகுப்புவாத மற்றும் பாசிச குணத்தையும், தலித்துகள், பெண்கள் மற்றும்  முஸ்லீம் சிறுபான்மையினருக்கு எதிராக விசிறிவிடும் வகுப்புத் துவேஷத்தையும் ஆணித்தரமான ஆதாரங்களோடும் வெளிப்படுத்தியுள்ளார்.
அவற்றின் தமிழாக்கத்தை ஏழு பகுதிகளாக.  வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
தோழமையுடன்
ச. வீரமணி.

(1)
 மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை என்னும் புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு சீத்தாராம் யெச்சூரி எழுதிய முன்னுரை.
தமிழ்ப்பதிப்பிற்கான முன்னுரை
மோடி அரசாங்கம்: வகுப்புவாதத்தின் புதிய அலை’’ என்று ஆங்கிலத்தில் வெளியான  என்னுடைய கட்டுரைகளின் தொகுப்பை, சென்னை பாரதி புத்தகாலயம் தமிழில் கொண்டுவருவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்புத்தகம் ஆங்கிலத்தில் வெளியானதற்குப் பின்னர், ஆர்எஸ்எஸ்/பாஜக படைக் கொட்டிலிலிருந்து புதிய தாக்குதல்கள் வந்துள்ளன. தாங்கள் கூறிவரும் `இந்து சமூகத்தினை ஒருமுகப்படுத்துவதற்காக தங்கள் முயற்சிகளை மேலும் பல வடிவங்களில் கொண்டுசெல்ல முனைந்துள்ளனர்.  
சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை’’ நிறுவிடம் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.
அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் - ஜெய்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று காரணம் காட்டி பதினொரு தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப் பட்டிருப்பதாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தலைவர்  தலித்துகள் இவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடு களிலிருந்து  படையெடுத்து வந்த முஸ்லீம்கள்’’தான் காரணம் என்றும்  அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித்துள்ள ஆர்எஸ்எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014).
தங்கள் இயக்கத்தின் அரசியல் அங்கமாகத் திகழும் பாஜக மத்திய அரசாங்கத்தில் அமர்ந்திருப்பதால் தைரியம் அடைந்துள்ள ஆர்எஸ்எஸ்  இந்தியாவில் உள்ள அனைத்துக் குழுவினரையும் ஒன்றாக்கி, ஒரே நூலின்கீழ், ஒரே இந்து அடையாளத்தின் கீழ் கொண்டுவந்து, அதனை சட்டப்படி செல்லத்தக்கதாக மாற்றவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி யுள்ளது.  இதற்கு, மாபெரும் நம் நாட்டின் பலநூறு ஆண்டுகால வரலாறு, அவர்கள் விடும் சரடுகளுக்கு ஏற்பதிருத்தி எழுதப் பட்டாக வேண்டியது அவசியமாகும். தற்போதைய நவீன மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக் குடியரசை, அவர்கள் கருத்தாக்கமான இந்து ராஷ்ட்ரமாகமாற்றி அமைப்பதற்கு, இது அவசியமாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் இருந்துவரும் பலதரப்பட்ட கலாச்சாரங்கள், பாரம்பர்யங்கள், பழக்க வழக்கங்கள், மொழிகள் கொண்டவர்களை இந்துயிசம்என்னும் ஒரே குடையின்கீழ் அடைத்திட அவர்கள் முயற்சிக்கிறார்கள். இரண்டாவதாக, ஓர் அயலக எதிரியை (இந்துக்களுக்கு அயலாக உள்ளவரை அதாவது   முஸ்லீம்களை,) உருவாக்க வேண்டியது அவர்களுக்குத் தேவை. தங்கள் குறிக்கோளை எய்துவதற்காக இவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
வரலாற்றை மாற்றி எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆர்எஸ்எஸ் தன்னுடைய சமீபத்திய நடவடிக்கையாக, “இந்து சுவடிகளின்படி சூத்திரர்கள்எப்போதுமே தீண்டத் தகாதவர்களாக இருந்ததில்லை,’’ என்று கூறியிருக்கிறது.  ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குருமார்கள் அமைப்பில் இரண்டாவது குருமாராக இருக்கும், பையாஜி ஜோஷி, இவ்வாறு கூறியிருக்கிறார்.  மத்தியக் காலத்தில் இஸ்லாமியர்களின் அட்டூ ழியங்கள்தான்’  தீண்டத்தகாதவர்கள், தலித்துகள் மற்றும் இந்திய முஸ்லீம்கள் உருவானதற்குக் காரணம் என்றும் கூறுகிறார்.
இதே தொனியை எதிரொலித்து ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மற்றொரு மூத்த தலைவர்இஸ்லாமியர் காலம் தொடங்கிய காலத்தில், பிராமணர்களுக்கும் சத்திரியர்களுக்கும் எதிராக அட்டூழியங்கள் நடைபெற்றதன் விளைவாகத்தான், ஒடுக்கப்பட்ட சாதிகளும், கீழ் சாதிகளும் தோன்றின என்றும் தலித்துகள் என்போர் துருக்கியர், முஸ்லீம்கள் மற்றும் மொகலாயர் சகாப்தத்தில் சிருஷ்டிக்கப்பட்டனர்,’’ என்றும் எழுதி இருக்கிறார்.
இந்திய வரலாற்றை இவ்வாறு திரித்து எழுதும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் கீழ் இயங்கும் அமைப்பு ஒன்று சமீபத்தில் ரகசியக் கூட்டம் ஒன்று நடத்தியதாகவும் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வரலாற்றாசிரியர்கள் பங்கேற்று, தற்போதுள்ள பாடத்திட்டங்களில், இந்துக்கள் அனைவரையும் ஒருமுகப்படுத்தும் தங்கள் குறிக்கோளை எய்திடுவதற்காக சாதி அல்லது கீழ் சாதி ஆகியவற்றிற்கும் அப்பால் இந்து அடையாளத்தை நிலைநிறுத்தக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக விவாதித்தார்கள் என்றும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட் டிருக்கின்றன. 
சாதிய அமைப்பும் அதனையொட்டி நடைபெற்று வரும் சமூக அட்டூழியங்களும் புராதன இந்து சமூகத்தில் எப்போதுமே நடந்ததில்லை என்பதுபோலவும், முஸ்லீம்கள் படையெடுத்து வந்தபின்னர்தான் சமூகத்தில் இவை உருவாயின என்று கூறுவதும் இதுவரை எழுதப்பட்டுள்ள வரலாற்றையும், காலங்காலமாக வாய்மொழி வழியாகக் கூறி வரும் வளமான அனுபவங்களையும்  முழுமையாகத் திரிக்கும் செயலாகும்.
உண்மையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூலவேர்கள்,  `இந்து சட்டத்தின்’ (‘Hindu Code’) மதரீதியான ஒப்புதலுடன் அமைக்கப்பட்டு, அவை ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரால் மிகவும் புனிதராகப் போற்றப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மாதவ சதாசிவ கோல்வால்கரால் சரி என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளாகும்.
1939இல் நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ (We or Our Nationhood defined (1939) என்று கோல்வால்கர் எழுதிய தன் புத்தகத்தில், கோல்வால்கர் மனுவை உலகின் முதலாவதும், மாபெரும் சட்ட வல்லுநருமாவார்’’ என்று போற்றிப் பாராட்டியிருப்பதுடன்,  “அவர்தான் தன்னுடைய மனுதர்மத்தில், உலகில் உள்ள அனைத்து மக்களும் இந்துஸ்தானுக்குச் சென்று அந்நாட்டிலுள்ள `முதலில் பிறந்தபிராமணர்களின் புனிதக் காலில் விழுந்து வணங்கி, தங்களுடைய கடமைகள் என்ன என்பதைக் கற்றுத்  தெளிய வேண்டும்,’’  என்றும் கட்டளையிட்டிருக்கிறார். (கோல்வால்கர், 1939, பக். 55-56). 
பிராமணன் தலையிலிருந்து பிறந்தவன், சத்திரியன் (அரசன்) கைகளிலிருந்து பிறந்தவன், வைசியன் தொடைகளிலிருந்து பிறந்தவன், சூத்திரன் கால்களிலிருந்து பிறந்தவன். இதன் பொருள் மக்கள் இவ்வாறு நான்கு மடிப்புகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே, அதாவது இந்து மக்கள் நம் கடவுள்.’’
இப்போது மனுஸ்மிருதி என்ன கூறுகிறது என்று பார்ப்போம். சூத்திரனுக்கு மிகவும் சிறந்த இயற்கையாய் அமைந்த செயல் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதுதான் என்று பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர அவன்  வேறு எதைச்செய்தாலும் அவனுக்குப் பலனளிக்காது.`` (123, அத்தியாயம் 10)
பின்னர் மனுஸ்மிருதி சமூகத்தில் சாதியற்றவர்கள் என்றும் தீண்டத்தகாதவர்கள் என்றும் குறிப்பிடப்படுபவர்களை வரையறுப்பதைத் தொடர்கிறார். அவர்களுக்கு சமூகத்தில் எந்த இடமும் எப்போதும் கிடையாது என்று கூறும் அவர் அவர்களது இழி செயல்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறார். சகித்துக் கொள்ள முடியாத சாதியக் கட்டமைப்பு கோல்வால்கரின் நூலிலும் இன்றைய காவிப் படையினரிடத்திலும் எதிரொலிப்பதைக் காணலாம். ஏனெனில் மனுஸ்மிருதியும் `ஆரியர்சமூக அமைப்பின் அடிப்படையில் அமைந்த ஒன்றுதான்.
ஆரியர் அல்லாதவர்களுக்குள்ள முரட்டுத்தனம், கொடூரமானவனாக இருத்தல் மற்றும் சடங்குகளைப் புரியும்போது வழக்கமாகத் தோல்வியுறுதல் அனைத்தும் இந்த உலகில் அவர்கள் கறைபட்ட கருப்பையிலிருந்து பிறந்தவர்கள் என்பதைத் தெளிவாய்க் காட்டும். (58, அத்தியாயம் 10).
ஆயினும் தாங்கம் விரும்பும் `இந்து ராஷ்ட்ரம்நிறுவப்படவேண்டுமாயின், அதற்கு ஆரியர்கள் இந்த நிலத்தின் பூர்வகுடியினர்தான் என்றும், அவர்கள் வேறெங்கிருந்தும் வந்தேறியவர்கள் அல்ல என்றும்  மறுக்கவியலாத அளவிற்கு மெய்ப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
`நம்பிக்கையின் அடிப்படையில்ஆர்எஸ்எஸ் அனைத்து வரலாற்றுச் சான்றுகளையும் தள்ளுபடி செய்துவிடுகிறது. வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர், ““சமஸ்கிருத வேதத்தின் மொழியியல் சாட்சியமானது ஈரானிலிருந்து ஓர் இந்தோ-ஐரோப்பிய மொழி இந்தியாவிற்குள் வந்தது, ஆனால் அது இந்தியா ஆரியர்களின் தாய்நாடு என்னும் கற்பிதத்தினை ஆதரித்திடவில்லை,’’ (செமினார் 400, டிசம்பர் 1992) என்று நிறுவியிருக்கிறார்.
இவ்வாறு ஆர்எஸ்எஸ் கூட்டத்தினர், வரலாற்றிற்கு மேல் புராணத்தையும், தத்துவஞானத்திற்கு மேல் மத நம்பிக்கையையும் வைத்து, `நம்பிக்கையின் அடிப்படையில்அனைத்தையும்  ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகெட்ட சமூக அமைப்புதான் இன்றைய இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ந்து அநீதிகளை இழைத்து வருகிறது.
2001இல் வெளியான மத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் அறிக்கையின்படி, (அதற்குப்பிறகு அதுபோன்றதொரு அறிக்கை  வெளிவரவில்லை)  சமூகத்தின் மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதத்தினராக இருக்கும், மூன்று உயர் சாதியைச் சேர்ந்தவர்கள் (பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள்) அரசியல் பிரதிநிதித்துவத்தில் 66.5 சதவீதத்தை யும், கல்வியில் 43 சதவீதத்தையும், வேலை வாய்ப்பில் 87 சதவீதத்தையும், வணிகத்தில் 97 சதவீதத்தையும், நில எஸ்டேட்டுகளில் 94 சதவீதத்தையும் எவ்விதமான சட்ட ஒதுக்கீடுகளும் இல்லாமலேயே ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், ஆனால் அதே சமயத்தில் மக்கள் தொகையின் இதர பகுதியினர் (சூத்திரர்கள்), தலித்துகள் மற்றும் பழங்குடியினர், முஸ்லீம்களுடனும் சேர்ந்து, மொத்த மக்கள் தொகையில் 85 சதவீதமாக இருப்பவர்கள், மீதமுள்ளவற்றை மனிதாபிமானமற்ற சமத்துவ மின்மையுடன் மிகவும் நம்பிக்கை யிழந்த நிலையில் பங்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.’’ என்று கூறியிருக்கிறது.
நீதிக்கான போராட்டத்தைத் தொடங்கிட இந்த சமூக நிலைமை தூக்கி எறியப்பட்டாக வேண்டும்.
இந்திய வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக நிகழ்ச்சி நிரலானது, யார் யார் எல்லாம் இந்துக்கள் கிடையாது என்று அவர்கள் கருதுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகளை மறுக்க வகை செய்வதுடன், இத்தகைய ஏற்றுக்கொள்ள முடியாத சமூக ஒடுக்குமுறையும் தொடர்ந்து நீடித்திருக்கக்கூடிய விதத்தில் வரையப்பட்டு வருகிறது.
இந்தப் பின்னணியில்தான் இந்நூலை வெளிக் கொணர்கிறோம். இது வகுப்புவாதத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் நம் முன்னணி ஊழியர்கள் அனைவருக்கும் ஓர் ஆயுதமாகத் திகழும்.
சீத்தாராம் யெச்சூரி
புதுதில்லி
27-09-2014
   




தேர்தல் முடிவு காட்டுவது என்ன? - பீப்பிள்ஸ் டெமாக்கரசி தலையங்கம்



சமீபத்தில் மாநில சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து, பாஜக ஹரியானாவில் தன் சொந்த பலத்துடனும், மகாராஷ்டிராவில் அதன் தலைமையில் கூட் டணி ஆட்சியும் அமைய இருக்கின்றன. மகா ராஷ்டிராவில் 15 ஆண்டு கால காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கட்சிக் கூட்டணி அரசாங்கத்தை அடுத்தும், ஹரியானாவில் கடந்த பத்தாண்டுகளாக தொடர்ந்து இருந்து வந்த காங்கிரஸ் அரசாங்கத்தை அடுத்தும் இவ்வாறு ஆட்சிகள் அமைகின்றன. போட்டியிட்ட கட்சிகள் மிகப்பெரிய அளவிற்கு மோசடியில் ஈடுபட்டதாக புகார் வராது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற்ற பின்னணியில் மக்களின் தீர்ப்பு இவ்வாறு வந்திருக்கிறது.
நம்மைப் போன்றதொரு ஜனநாயக நாட்டில் மக்களின் தீர்ப்பே இறுதியானதாகும். காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங் கிரசும் தனித்தனியாக இத்தேர்தலைச் சந்தித் தன. கடந்த 15 ஆண்டு கால ஆட்சியின் காரணமாக மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது எழுந் துள்ள கோபம் தங்கள் பக்கம் திரும்பாது என்று தேசியவாத காங்கிரஸ் கருதியதுபோலத் தெரிகிறது. தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர், காங்கிரஸ் கட்சி 18 சதவீத வாக்குகள் பெற்று42 இடங்களையும், தேசியவாதக் காங் கிரஸ் 17 சதவீத வாக்குகளைப் பெற்று 41 இடங்களையும் பெற்றிருக்கின்றன. ஹரியானாவில் பாஜக மொத்தம் உள்ள 90 இடங்களில் 47 இடங் களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது.பாஜக தற்போது, பல கட்சிகள் தனித் தனியே போட்டிபோடக்கூடிய சமயங்களில், மூன்றாவது அல்லது மக்களின் குறைந்த சதவீத ஆதரவு பெற்றநிலையிலும், சொந்தமாகவே பெரும்பான்மையைப் பெறக்கூடிய கலையில் பூரணத்துவம் பெற்றுவிட்டது போலத் தோன்று கிறது. நாடாளுமன்ற தேர்தலின்போது, மக்க ளின் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று கணிசமான அளவிற்குப் பெரும்பான்மையைப் பெற்றது.
இப்போது ஹரியானாவில், வாக்க ளித்தவர்களில் 33 சதவீதம் பேர்களின் வாக்கினைப் பெற்று பெரும்பான்மையை வென்றி ருக்கிறது. மகாராஷ்டிராவில், 29 சதவீத வாக்கு களை மட்டுமே பெற்று 123 இடங்களில் வென்றிருக்கிறது. தேசியவாத காங்கிரசும், காங்கிர சும் 2004 மற்றும் 2009களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோது முறையே 40 மற்றும் 37 சதவீத வாக்குகளைப் பெற்றன. இந்தத் தடவை, தனித்தனியே போட்டியிட்டு, ஒட்டுமொத்தத்தில் 35 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன. எனிலும் அவற்றின் இடங்கள் 144 இலிருந்து 83ஆகக் குறைந்திருக்கிறது. ஆனால் பாஜகவிற்கு 46 இலிருந்து 123ஆக அதிகரித்திருக்கிறது.’’போட்டியிடுபவர்களில் அதிக அளவிற்கு வாக்குகளைப் பெற்றவரே வென் றவர் என்கிற இத்தேர்தல் முறையில் உள்ளஒழுங்கின்மையே இத்தகைய முடிவுகளுக் குக் காரணமாகும்.
நம்முடைய தேர்தல் முறையில் விகிதாச்சார முறையை நோக்கி ஒரு தீவிரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியது அவசியமாகும். இதற்கு ஆரம்பத்தில், மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பலவற்றில் இன்றையதினம் கடைப்பிடிக்கப்படு வதைப்போல, ஒரு பகுதி விகிதாச்சார முறையை கொண்டுவரலாம். மாநில சட்டமன்றங் களின் தேர்தல் முடிவுகள், நம்முடைய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை வலுப்படுத்திட வும், அதனை ஓர் உண்மையான ஜனநாயகமாக - அதாவது மக்களிடமிருந்து பெரும்பான்மை வாக்கு பெற்றவர்களின் ஆட்சி அமையக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்திடவும், இத்தகைய சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டியது அவசரம் என்பதை மீண்டும் ஒருமுறை அடிக் கோடிட்டுக் கொள்ள வேண்டும். மாறாக தற் போது மத்தியிலும், பல மாநிலங்களிலும் மக்க ளிடம் குறைவான ஆதரவினைப் பெற்ற பல கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொண்டு அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆட்சி செய்யக்கூடிய நிலை இருக்கிறது. ஜனநாயகத்தை உருக்குலைத்திடும் இத்தகையப் போக்கு உடனடி யாக சரிசெய்யப்பட வேண்டியது இன்றைய தேவையாகும்.
இத்தகைய சூழ்நிலையில், `மோடி அலை’, `மோடி சுனாமியாக மாறிவிட்டது என்று பாஜக தலைவர்கள் கூறுவதெல்லாம் வெற்று முழக்கமே என்பது தெளிவாகும். மேலும், இத்தகைய `சுனாமிதாக்கினால் அது நம் சமூக நல்லிணக்கத்திற்கும், ஒற்றுமைக்கும், ஒருமைப் பாட்டுக்கும் எந்த அளவிற்கு நாசத்தை ஏற்படுத்தும் என்பதை அறிபவர்கள் உண்மை யிலேயே நடுக்கம் கொள்கிறார்கள்.மேலும், மக்களவைத் தேர்தலுக்குப் பின் னர் இப்போது பாஜக பெற்றுள்ள வாக்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதையே, தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மக்களவைத் தேர்தல்நடைபெற்ற சமயத்தில் பாஜகவும் சிவ சேனைக் கட்சியும் கூட்டணி அமைத்துப் போட்டிபோட்ட சமயத்தில் 288 சட்டமன்றத் தொகுதிகளில் 245 தொகுதிளைக் கைப் பற்றி இருந்தன. இப்போது பாஜக 123 இடங்களிலும், சிவ சேனைக் கட்சி 63 இடங்களி லும் மொத்தத்தில் 186 இடங்களில் வென்றிருக்கின்றன.
அவை கூட்டணியாகப் போட்டியிட் டிருந்தால் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கக்கூடும் என்ற வாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் கூட, இவ்வீழ்ச்சி கணிசமானதேயாகும்.’ 2014 அக்டோபர் 20 தி இந்து நாளேட்டில் கூறியுள்ளபடி, “தேர்தல் முடிவுகளிலிருந்து பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்று விட்டதாகச் சொல்வதற்கில்லை. மோடி மிகவும் பிரம்மாண்டமாக பேரணி நடத்திய தொகுதிகளில்கூட, அதனால் வெற்றி வாகை யை சூட முடியவில்லை. மோடி பேரணி நடத்திய, பிரம்மாபுரி தொகுதியை, காங்கிரஸ் கட்சியானது பாஜகவிடமிருந்து 14 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ தேசியவாதக் காங்கிரஸ் கட்சியோ தலா பத்து வாக்குகளுக்கு மேல் பெறாதுஎன்று மோடி ஜோதிடம் கூறிய துல்ஜாபூர்தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.’’ தேசியவாதக் காங்கிரஸ் கட்சிபெற்றிருந்த கல்வான் தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 67 ஆயிரத்து 795 வாக்குகள்பெற்று கைப்பற்றியிருக்கிறது.
இத்தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் வெறும் 25 ஆயிரத்து 457 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். நாட்டில் பாஜகவிற்கு செல்வாக்கு வளர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறப்படும் அதே சமயத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்கட்சி ஆட்சி அமைத்திட வேறெதாவது கட்சியுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைமை யிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் கடந்த பத்தாண்டு காலமாக முக்கியமான அமைச்சகங்களுக்குப் பொறுப்பு வகித்த, பதவி சுகம் அனுபவித்து வந்த, தேசியவாதக் காங்கிரஸ் தற்போது பாஜகவிற்கு வெளியிலிருந்து `தகுதியற்ற’ (நிபந்தனையற்ற என்று சொல்ல முடியாது) ஆதரவு அளிப்ப தாகக் கூறியிருக்கிறது. பாஜகவுடன் நீண்டகாலமாக கூட்டணி வைத்திருந்ததும், `இந்துத்துவாகொள்கையில் பாஜகவைவிட வெறித் தனமாக இருந்ததுமான சிவசேனைக் கட்சி,ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மீண் டும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
இவர்கள் பேரத்தின் முழு உண்மையும் வெளியே வரும்வரை இவர்களின் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுமானால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. இத்தகைய சூழ்நிலைமைகளில்தான், கூட்டணி சகாப்தம் முடிந்துவிட்டது என்றுபாஜக தலைவர்களின் பேச்சுகள் கேலிக் குரியனவாக இருக்கின்றன. மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே மோடி, இதே போன்று கூட்டணி அரசாங்கங்கள் முடிந்து விட்டன என்று கூறியதை நினைவுகூர்க. இவர்களின் ஆட்சிக்கு ஒரு வலுவான எதிர்ப்பினை அளிக்கக்கூடிய விதத்தில் கூட்டணிகள் அமையவேண்டிய தருணம் இது. பாஜக, தன் சொந்த பலத்தை நிலைநிறுத்துவதற்காக மட்டரகமான `குதிரை பேரத்தில்ஈடுபடாவிட்டால், இன்றைய தினம் அது மகாராஷ் டிராவில் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயத்திலிருந்து தப்ப முடியாது.
நம் நாட்டில் பல்வேறு மதத்தினரும் சுமுகமாக வாழ்ந்து வரக்கூடிய சமூக ஒழுங் கிற்கு `மோடி சுனாமிபேரழிவினை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கான ஒரு குறிப்பு, மீண்டும் ஒருமுறை அவர்களின் மூளையாகச் செயல்படும் ஆர்எஸ்எஸ்-சிடமிருந்து வந்திருக்கிறது. சமீபத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தேசியக் கவுன்சில் கூட்டத்தின் இறுதியில், அதன் செய்தித் தொடர்பாளர், “இந்துசமூகம் மீண்டும் காதல் ஜிகாத்’’ என்னும்அவமானகரமான’’ நிலையினை எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது,’’ என்று மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் அயோத்தியில் ராமர் கோவில்கட்டுவது தொடர்பாக, அவர், “கோவில் கட்டு வதற்குள்ள அனைத்துத் தடைகளையும் அர சாங்கம் நீக்கிடும்,’’ என்றும் கூறியிருக்கிறார். வகுப்புவாதம் தொடர்பாக கூறப்பட்ட புகார்கள் அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிய அவர், “அது உண்மையாயின், ஆர்எஸ்எஸ் தன் தளத்தை இந்த அளவிற்கு விரிவாக்கி இருக்க முடியாது,’’ (தி இந்து, அக்டோபர் 21, 2014) என்று கூறியிருக்கிறார்.உண்மை என்னவெனில், “ஆர்எஸ் எஸ், நாட்டில் மதவெறித் தீயை விசிறி விடுவதன் மூலம் தன் தளத்தை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது,’’ என்பதேயாகும். இவ்வாறு மதவெறித் தீயை தீவிரப் படுத்துவதன் மூலம் பெரும் பான்மை இந்து வாக்குகளை ஒருமுகப்படுத்துவதற்கான - `வாக்குவங்கி அரசியலின்மட்டரகமான வடிவத்தை நடைமுறைப்படுத்தி, தேர்தல் ஆதாயங்களை அறுவடை செய்திட, தன் அரசியல் அங்கமான பாஜகவைப் பயன்படுத்திக்கொள்வதை உத்தரவாதம் செய்துகொண்டிருக்கிறது.
இத்தகைய இவர்களின் சூழ்ச்சிகளை எதிர்த்துத் தனிமைப்படுத் தாவிடில், நம் சமூகத்தின் ஒற்றுமையும், சமூக,கலாச்சார, மத, மொழி வேற்றுமைகள் இருப்பினும் அவற்றிற்கிடையே உயர்ந்தோங்கி யிருந்த வளமான ஒற்றுமையும், நல்லிணக்க உணர்வும் அபாயகரமான முறையில் அச்சுறுத் தலுக்கு உள்ளாகும். எனவே, நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்கள் மீது ஏவப்பட்டுள்ள தாக்குதலை ஒன்றுபட்டு நின்று முறியடித்திட நாட்டு மக்கள் அணி திரள வேண்டும்.
அக்டோபர் 21, 2014-
தமிழில்: ச.வீரமணி