Friday, January 27, 2012

உரிமைகளுக்காகப் போராடுவோம்!



பாரதம் எனப்படும் இந்தியா தன்னு டைய 63வது குடியரசு தினத்தை நிறைவு செய்திருக்கிறது. இதேபோன்றதொரு தினத் தன்று ஈராண்டுகளுக்கு முன்பு, குடியரசு தன் னுடைய அறுபதாண்டுகளை நிறைவு செய்த சமயத்தில், இந்தியா உட்பட பல புராதன நாகரிக சமுதாயங்களில் கருதப்படுவதைப் போல, இது ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது என்றும், நம் நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிறந்த தோர் இந்தியாவிற்காக ஏங்கிக் கொண்டிருப் பதையும் தெரிவித்திருந்தோம்.

துரதிர்ஷ்டவசமாக, நாட்டு மக்களுக்கு, கடந்த ஈராண்டு காலம் என்பது அதற்கு முன்பிருந்த நிலைமைகளின் தொடர்ச்சியாக மட்டுமல்ல, அதைவிட மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்ட நிலைமையே ஏற்பட்டது. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் தொடர்ந்து ஏறிவருவது, மக்களின் ஆரோக்கியமான வாழ்வாதாரங்களைக் கடுமையாக அரித்துத் தின்று கொண்டிருக் கிறது. தொடர்ந்து விரிவாகி வரும் பொரு ளாதார சமத்துவமின்மை மக்களின் துன்ப துயரங்களை மேலும் அதிகரித்திருக்கிறது. நாட்டில் பணக்காரர்களின் வாழ்வில் ஏற் பட்டுள்ள வளத்திற்கும், ஏழைகளின் வாழ் வில் ஏற்பட்டுள்ள வளமின்மைக்கும் இடையேயான இடைவெளி என்பது மேலும் விரிவடைந்து ஆழமாகி இருக்கிறது.

நம் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை யில் வளர்ந்து வரும் அவலங்கள் குறித்து தொடர்ந்து விளக்கி வந்திருக்கிறோம். நாம் மட்டுமல்ல, நாட்டின் பிரதமர் கூட, ஊட்டச்சத்துக் குறைவு தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிடும் சமயத்தில், இது ஒரு ‘‘தேசிய அவமானம்’’ என்று குறிப்பிட்டு, நாட்டு மக்க ளின் சுகாதாரமற்ற நிலையினை ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆயினும், இந்நிலை யினை மாற்றிட அரசாங்கம் உருப்படியான நடவடிக்கை எதனையும் எடுத்திட வில்லை. அதுமட்டுமல்ல, இது தொடர்பாக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது, இந் நிலை, தொடர அனுமதித்திருப்பது அனைத் தையும்விட மோசமான அம்சமாகும். சுகாதா ரம் மற்றும் கல்வி என்பது சாமானிய மக்க ளின் எட்டாக்கனியாக மாறிக் கொண்டிருக் கிறது. அரசாங்கம் சுகாதாரத்திற்காக ஒதுக் கிடும் தொகை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறை வாக இருக்கும் நிலை தொடர்கிறது. புற்றீசல் போல் முளைத்துக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகள் பணக்காரர்களுக்கு மட்டும் சேவகம் செய்யும் வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று கல்வியும் முழுமையாக தனியார்மயமாக்கப்பட்டு வணிகமயமாகி விட்டது. அரசு ஆரம்பப் பள்ளிகள் பெருமள வில் மூடப்பட்டு வருவதாக அறிக்கைகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. கல்விக் காக அரசு நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 6 விழுக்காடு ஒதுக்குவதாக ஒப்புக் கொண்டிருந்தபோதிலும், நடைமுறையில் அதில் பாதியளவுகூட இதுவரை ஒதுக்கிட வில்லை. நாட்டில் ஆறு வயதுக்கும் பதி னான்கு வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள சிறுவர்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என் கிற முறையில் நாடாளுமன்றத்தில் அரசிய லமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, கல்வி உரிமையை, நிறைவேற்றி இருந்த போதிலும், இதுதான் இன்றைய எதார்த்த நிலையாகும். அரசாங்கம் கல்விக்காக செலவு செய்வதை அதிகரிப்பதன் மூலம் கல்வி உரிமை அளிப்பதை உத்தரவாதம் செய் திருக்க வேண்டும். மாறாக, அரசாங்கம் நம் நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளம் தலைமுறையினருக்கு தான் அளித்த உறுதி மொழிகளை நிறைவேற்றாமல் நழுவிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. கல்விக்கு நிதி ஒதுக்குவதற்குப் போதிய நிதி இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசு தான் அளித்திட்ட உறுதிமொழிகளை நிறை வேற்றாமல் துரோகம் இழைத்துக் கொண்டி ருப்பதோடு, பழியை மாநில அரசுகளின் மீதும் சுமத்திக் கொண்டிருக்கிறது. மாநில அரசுகள் நிதி ஆதாரங்களைச் சேகரிப்பதற்கான வாய்ப்பு வசதிகள் மிகவும் அறுகிப் போயுள்ள நிலையில், தேவையான நிதியை சேகரிக்க முடியாமல் இப்பொறுப்பினை நிறைவேற்ற முடியாமல் இயற்கையாகவே திணறிக் கொண்டிருக்கின்றன. எனவே, அரசாங்கம் அளித்திட்ட மற்ற உரிமைகளைப் போலவே, இந்த உரிமையும் தாளில் மட்டுமே தொடர்ந்து நீடிக்கிறது.

நாட்டில் உள்ள குழந்தைகள் அனைத் தையும் பள்ளிகளில் சேர்க்க வேண்டு மானால் எவ்வளவு செலவாகும்? கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் கவுன்சில் (சூஊநுசுகூ), இந்த இலக்கை எட்ட ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வோராண்டும் 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும் என்று மதிப்பிட்டிருக்கிறது. இந்த ஐந்தாண்டுகள் என்பது புதிய பள்ளிகளுக் கான கட்டிடங்கள் கட்டுவதற்கும், லட்சக் கணக்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கும், மதிய உணவு மற்றும் பாடப் புத்தகங்கள் முதலானவை அளிப்பதற்கும் தேவைப்படும் கால அளவாகும். மொத்தத்தில் ஐந்தாண்டு களுக்கும் இத்தொகை என்பது 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய்களாகும். அதாவது நம் நாட்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையில் கொள்ளையடிக்கப்பட்ட தொகையைவிட இத்தொகையானது ஆயிரம் கோடி ரூபாய் குறைவானதாகும்.

அதேபோன்று, நம் நாட்டு மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்கிற உறுதிமொழியும் ஏட்டளவிலேயே இருக் கிறது. நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதத்திற்கு 3 ரூபாய் விலையில் 35 கிலோ கிராம் உணவுதானியங்கள் அளிக்க இருப்ப தாக அரசின் திட்டம் கூறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதனை வறுமைக்கோட் டுக்குக் கீழ்/வறுமைக்கோட்டுக்கு மேல் என்று எவ்விதப் பாகுபாடும் பார்க்காது, அனைத்துக் குடும்பத்தினருக்கும் 2 ரூபாய் விலையில் அளித்திட வேண்டும் என்று கோருகிறது. இதற்கு அரசாங்கத்திற்கு ஆண் டொன்றுக்கு 88 ஆயிரம் கோடி ரூபாய் கூடுத லாக செலவினமாகும். இதுவும்கூட 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழலில் அடிக் கப்பட்ட கொள்ளையுடன் ஒப்பிடுகையில் அதில் பாதிதான்.

மக்களுக்கு அரசு தன் உறுதிமொழியை நிறைவேற்றிடவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும் நாட்டில் போதிய வளங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. மாறாக, நாட்டின் வளங்கள் நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளின் வாயிலாக மிகவும் அதிர்ச்சியடையக்கூடிய விதத்தில் கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டிருக் கின்றன. நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற மெகா ஊழல்களைத் தடுத்து நிறுத்தி யிருந்தாலேயே நாட்டு மக்களுக்குத் தேவை யான வசதிகளைச் செய்து தந்திருக்க முடி யும். அவர்களின் ஊட்டச்சத்துக் குறை வினைப் போக்கி இருக்க முடியும், தேவை யான கல்வியை அளித்திருக்க முடியும், இளைஞர்களை போதுமான அளவிற்கு ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும், சுதந்திரம் பெற்றதிலிருந்து இன்றளவும் நாட்டின் சாபக்கேடாக இருந்து வருகிற பசி, பஞ்சம், பட்டினியை விரட்டி அடித்திருக்க முடியும்.

ஆயினும், ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் உயர்மட்ட அளவில் நடந்துவரும் ஊழலை ஒழித்துக்கட்டும் வகையில் வலுவான வகையில் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டங்களைக் கொண்டுவர நாடாளுமன் றத்தை அனுமதித்திட மறுத்து வருவது தொடர்கிறது. இவ்வாறாக அரசாங்கம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும் உறுதிமொழி களை நிறைவேற்ற மறுப்பதோடு மட்டுமல் லாமல், நம் நாட்டின் செல்வங்கள் நவீன தாராளமயக் கொள்கைகளின் மூலம் கார்ப்ப ரேட்டுகள் அதிகபட்ச லாபம் என்ற பெயரில் கொள்ளையடித்துச் செல்லவும் வசதி செய்து கொடுத்திருக்கிறது.

இவ்வாறு ஆட்சியாளர்கள் கார்ப்பரேட்டு களுக்கு ஆதரவாகக் கடைப்பிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளில், மக்கள் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய விதத் தில் தீவிரமானமுறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உறுதிமொழி களை நிச்சயமாக நிறைவேற்றிட முடியாது. கடந்த காலங்களில் இப்பகுதியில் பல தடவை நாம், ஆட்சியாளர்கள் பணக்காரர் களுக்கு அளித்து வரும் வரிச்சலுகை களைக் கைவிட்டு அத்தொகைகளை பொது முதலீடுகளில், குறிப்பாக விவசாயத் துறையில், ஈடுபடுத்தினால், தற்போது நாட்டு மக்கள் அனுபவித்து வரும் சொல்லொண் ணாத் துன்பதுயரங்களையும், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதையும் தடுத்து நிறுத்திட முடியும் என்று குறிப்பிட்டு வந் திருக்கிறோம். மேலும் நாட்டில் வேலை வாய்ப்பையும் அதிகப்படுத்தி, நம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படவும் இது இட்டுச் செல்லும்.

இவ்வாறு நாம் கூறுவதால் இந்தியா வளர்ச்சி அடையவில்லை என்றோ அல்லது முன்னேறிடவில்லை என்றோ பொருளல்ல. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தால் ஏற்பட்ட பயன்கள் நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசிலருக்கு மட்டுமே சென்றடைந்துள்ளன. மீதமுள்ள கோடிக் கணக்கான மக்களை துன்ப துயரங்களில் தள்ளியுள்ளன. இத்தகைய அரசின் ஒரு சார்புத் தன்மை சரிசெய்யப்பட்டாக வேண் டும். இதனை, ஆட்சியாளர்கள் தங்கள் பொரு ளாதாரக் கொள்கைகளை மக்கள் சார்பான தாக மாற்றக்கூடிய விதத்தில், வலுவான மக்கள் இயக்கங்களை நடத்துவதன் மூலம் மட்டுமே, செய்திட முடியும்.

எனவே, 63ஆவது குடியரசு தினம் நாட்டுப்பற்று மிக்க இந்தியர் அனைவரையும், சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கக்கூடிய வகையில் மக்களின் உரிமைகளைப் பாது காத்திடக்கூடிய வகையில் ஆட்சியாளர் களின் இத்தகைய மோசமான கொள்கை களுக்கு எதிராக வலுவான போராட்டங்களை நடத்திட முன்வரவேண்டும் என்று அறை கூவி அழைக்கிறது.

தமிழில்: ச.வீரமணி

Sunday, January 22, 2012

பாடம் கற்காத மத்திய அரசு!



ந்தியப் பிரதமரும் நவீன தாராளமய மேதாவிகளும் இந்தியப் பொருளாதாரம் தன் னுடைய மந்த வளர்ச்சி நிலையிலிருந்து மீண்டு எழுந்து வருகிறது என்று என்னதான் வாய்ச்சவடால் அடித்தாலும் அவற்றைப் பொய்ப்பிக்கக்கூடிய வகையில் உலக வங்கி வளர்முக நாடுகளுக்கு அதிலும் குறிப்பாக இந் தியாவிற்கு ஓர் எச்சரிக்கையை விடுத்திருக் கிறது. அதாவது, 2008-09ஆம் ஆண்டில் ஏற் பட்டுள்ள உலகப் பொருளாதார மந்த நிலை மையைப் போன்ற அல்லது அதைவிட மோச மான விதத்தில் ஒரு நெருக்கடியை எதிர் கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என்பதே அந்த எச்சரிக்கையாகும்.

உலக வங்கியின் பொருளாதாரப் பிரிவுத் தலைவர் ஜனவரி 18 புதனன்று பேசுகையில், ‘‘உலகப் பொருளாதாரம் என்னும் சக்கரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகளில் பொரு ளாதார மந்தம் அதிகமான அளவிலும், வளர் முக நாடுகளில் குறைந்த அளவிலும் தற் போது இருந்தபோதிலும், இவை ஒன்றை யொன்று மாற்றிக்கொள்ளும் நிலை - அதா வது வளர்முக நாடுகளில் அதிகமான அள விலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் குறைந்த அளவிலும் மாறும்,’’ என்று கூறி யிருக்கிறார். இதனை லண்டன், ஃபைனான் சியல் டைம்ஸ் ஏடு வெளியிட்டிருக்கிறது. உலக வங்கியின் பொருளாதாரம் தொடர்பான முன்னறிவிப்புகள் 2011 ஜூனில் அது கூறி யதைவிட குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறை வாகவே இருந்தன. ஆனால் 2011இல் அது மிகவும் பயந்துகொண்டே அறிவித்த யூகங்கள் அனைத்தும் அநேகமாக மெய்யாகிவிட்டன. உலகப் பொருளாதாரம் 2012இல் 2.5 விழுக் காடும், 2013இல் 3.6 விழுக்காடும் வளரக் கூடும். (இவ்விரண்டு ஆண்டுகளுக்கும் 3.6 விழுக்காடு வளர்ச்சி இருக்கக்கூடும் என் பது உலக வங்கியின் யூகமாகும்.) ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தில், பொருளாதார நிலைமை 2012இல் வீழ்ச்சியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற வளர்ந்த முத லாளித்துவ நாடுகளிலும் வளர்ச்சி விகிதம் 2.1 விழுக்காடு அளவிற்கே இருந்திடும்.

இந்தியாவில் நிதிச் சீர்திருத்தங்களை மேலும் தாராளமயமாக்குவதன் மூலம் அந்நிய நாடுகளிலிருந்து நிதி மூலதனம் ஏராளமாக இந்தியாவிற்குள் வந்து கொட்டும் என்றும் அதன் மூலம் நம் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் உந்துவிசை ஏற்படும் என்கிற ஆட்சியா ளர்களின் நம்பிக்கைகளும் உலக வங்கியின் எச்சரிக்கையை வைத்துப் பார்க்கும்போது பொய்த்துப்போகும் என்றே தோன்றுகிறது. ஏனெனில் மூலதனத்தைக் கொண்டு வந்து கொட்டக்கூடிய அளவிற்கு பணக்கார நாடு களிடம் பணம் ஏதும் இல்லை என்று உலக வங்கி தெளிவாக உணர்ந்துள்ளது.

இவ்வாறு நிலைமைகள் இருந்த போதி லும்கூட, ஐ.மு.கூட்டணி-1 ஆட்சிக் காலத் தின்போது இடதுசாரிக் கட்சிகள் தடுத்து நிறுத்திய தாராளமய நிதிச் சீர்திருத்தங்கள் தொடர்பான சட்டங்களை, இப்போது மீண்டும் வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது கொண்டுவர ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கம் முடிவு செய்திருப்ப தாகவே தோன்றுகிறது. உலகப் பொருளாதார நெருக்கடியில் இருந்து அப்போது இந்தியா தப்பியதற்குக் காரணமே இவ்வாறு இடது சாரிக் கட்சிகள் நிதிச் சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்தியதால்தான் என்கிற நம் முடைய சொந்த அனுபவத்திலிருந்து அரசாங் கம் பாடம் கற்றுக்கொள்ள மறுப்பதோடு மட்டு மல்லாமல், இப்போது உலக வங்கி அளித் துள்ள எச்சரிக்கையையும் கண்டுகொள் ளாது, கண்மூடித்தனமாகச் செயல்பட அர சாங்கம் முன்வந்திருப்பதுபோல் தோன்று கிறது.

இன்சூரன்ஸ் துறையில் உள்ள கட்டுப் பாடுகளை நீக்கி, அந்நிய நிதி மூலதனத்தை உள்ளே கொண்டுவருவதற்கும், வங்கி சீர் திருத்தங்கள் மூலமாக அந்நிய வங்கிகள் இந் தியாவில் உள்ள தனியார் வங்கிகளை கபளீ கரம் செய்வதற்கு அனுமதித்திடவும், ஓய்வூ திய நிதியங்களை தனியாரிடம் தாரை வார்க் கவும் சட்டங்களைக் கொண்டுவர விரும்புவ தோடு மட்டுமல்லாமல், ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்கள் முடிவடைந்தபின் சில்லரை வர்த்தகத்துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு வாசலைத் திறந்து விட வும் அரசாங்கம் அனைத்து விதமான நட வடிக்கைகளையும் எடுத்திருப்பது போலவே தோன்றுகிறது. அரசாங்கத்தின் இத்தகைய முடிவுகள் நாட்டில் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்றும், மேலும் நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் கடுமையாக சீர் குலைத்திடும் என்றும் நாம் இப்பகுதியில் முன்வைத்த வாதங்கள் எதற்கும் அரசாங்கம் பதிலளிக்க இதுவரை முன்வரவில்லை.

சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவில் கொள்ளை லாபமீட்டுவதற்காக அந்நிய நிதி மூலதனம் வந்து குவிந்திடும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதே இதற்கு முக் கிய காரணமாகும். இவ்வாறு வந்து குவியும் மூலதனத்தின் மூலம் பங்குச்சந்தை வர்த்தக மும் உயரும் என்றும் அதன் மூலம் நாட்டில் ஒருசிலர் மேலும் ஒளிரக்கூடிய வாய்ப்பினை அளித்திடலாம் என்றும் அது நம்புகிறது. இத் தகைய அரசின் முடிவானது சில்லரை வர்த் தகத்திலும் கோடானுகோடி இந்திய மக்கள் வாழ்க்கையிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத் தும் என்பதைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. ஆயினும் மன்மோகன் சிங் அரசாங்கம் எதிர்பார்க்கக்கூடிய அள விற்கு, அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் வந்து கொட்டுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே உலக வங்கியின் யூகங்களின் மூலம் தெரிகிறது. அந்நிய நேரடி முதலீடு தொடர்பாக அரசாங்கம் முன்வைத்திடும் வாதங்கள் அனைத்துமே அது, இந்தியாவுக்கான எரி சக்தி பாதுகாப்பு என்ற பெயரில் என்ரான் நிறு வனத்திற்கு ஏராளமான சலுகைகள் அளித்த போது அவற்றை நியாயப்படுத்தி அளித்திட்ட வாதங்களையே ஒத்திருக்கிறது. என்ரானுக்கு என்ன நடந்தது என்பது இன்று எல்லோருக் குமே தெரியும். ‘‘எல்லாம் நன்றாகவே நடக் கிறது’’ என்று நினைத்திட்ட அனைவருக் கும் பேரிடரை அது கொண்டு வந்தது. அதே போன்று, அந்நிய நேரடி முதலீட்டை சில் லரை வர்த்தகத்துறையில் அனுமதிப்பது என் பதும் விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக் கும் நலம் பயக்கும் என்று சொல்வதும் வெறும் கண்துடைப்பேயாகும்.

உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புகளை எதிர்கொண்டு தடுத்து நிறுத் தக்கூடிய வல்லமை இன்றைய தினம் வளர் முக நாடுகளில் சீனத்திற்கு மட்டுமே உண்டு என்று உலக வங்கி கூறுகிறது. ஆயினும் அது வும் கூட, 2008இல் சீனாவிடம் இருந்த வல் லமை அளவுக்குத் தற்போது இல்லை என் றும் உலக வங்கி எச்சரிக்கிறது.

நவீன நிதிச் சீர்திருத்தங்களை மேலும் தாராளமயமாக்குவதன் மூலம் உலகப் பொரு ளாதார மந்தத்தின் பாதிப்புகளிலிருந்து இந் தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடி யாது என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. நம் நாட்டில் நெருக்கடியை மேலும் மோசமான தாக மாற்றிடவே இது இட்டுச் செல்லும். வசதி படைத்தவர்களுக்கு வரிச் சலுகை களை வாரி வழங்குவதை விடுத்து, அத் தொகைகளை அவர்களிடமிருந்து வசூ லித்து, பொது முதலீட்டில் இட்டு, நம் நாட் டிற்குத் தேவையான சமூக மற்றும் பொரு ளாதார கட்டமைப்பு வசதிகளை உருவாக் கிட வேண்டும். அதன்மூலம் மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கிட வேண்டும் என்று திரும்பத் திரும்ப வலியுறுத்து கிறோம். நாட்டில், நாட்டு மக்களின் உள் நாட்டுத் தேவைகள் அதிகரிக்கும்போது அதன் மூலம் ஓர் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டமுடியும்.

மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது, 1981 இலிருந்து 22 ஆண்டுகள் தொடர்ந்து பிரதம ராக இருந்தவர், ஒரு மலேசியப் பொன் மொழியை உதிர்த்திருக்கிறார். (இதேபோன்று அனைத்து நாகரிகங்களிலும் பொன்மொழி கள் இருப்பதைக் காண முடியும்) அதாவது, ‘நீ செல்லும் பாதையைத் தவற விட்டு விட்டா யானால், தொடங்கிய இடத்திலிருந்தே மீண் டும் நடக்கத் தொடங்கு’ என்பதே அதன் பொருள். ஆயினும் உலக முதலாளித்துவம் இத்தகைய அறிவுரைகளிலிருந்து பாடம் எதுவும் கற்றுக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாய் இருக்கிறது. மாறாக, நவீன தாராள மயக் கொள்கைகள், மக்கள் நலத் திட்டங் களுக்கு அளித்திடும் சலுகைகளை மேலும் வெட்ட வேண்டும் என்று கூறிக்கொண் டிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகள் நிலைமைகளை மேலும் மோசமாக்கி, நெருக் கடியை மேலும் அதிகமாக்கிடும்.

நியுயார்க் ரெவ்யு ஆஃப் புக்ஸ் சமீபத்தில், ‘‘ஜான் மேனார்ட் கீன்ஸ் போதனைகளை எப்படி நாம் மறந்திட முடியும்?’’ என்று கூறி யிருக்கிறது. 1930களில் மாபெரும் பொருளா தார மந்தநிலை ஏற்பட்ட சமயத்தில், கீன்ஸ் அவர்கள் அரசு பொது முதலீடுகளை அதிக ரித்திட வேண்டும் என்றும் அதன் மூல மாகவே முதலாளித்துவம் முழு வேலை வாய்ப்பை எய்திட முடியும் என்றும் கூறி யிருப்பதை நினைவுகூர்க. இது ஒன்றே முத லாளித்துவத்தைப் பாதுகாத்திடும். இவ்வாறு முதலாளித்துவத்தை சோசலிசம் எடுத்துக் கொள்வதிலிருந்து பாதுகாத்திட முடியும் என்பதே அவரது கூற்றாகும்.

நாம் கூறும் ஆலோசனைகள் எதையும் ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக மன்மோகன் சிங் அரசாங்கமானது நவீன தாராளமய நிதிச் சீர்திருத்தங்களை வெறித்தனமாகப் பின்பற் றும் கொள்கையையே தொடர்கிறது. இது நம் நாட்டின் பொருளாதாரத்திற்கும், நாட்டு மக் களில் பெரும்பான்மையானவர்களுக்கும் பேரழிவினையே ஏற்படுத்திடும். முதலாளித் துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தவிர்க்க முடியாத ஒன்றே. மனித குலத்திற்கு உண் மையான விடுதலை, முதலாளித்துவ அமைப்பு முறையைத் தூக்கி எறிவதன் மூலமே வர முடியும்.

அதேசமயத்தில், நம் நாட்டில், ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கமானது தன்னுடைய நவீன தாராளமயக் கொள்கைகளின் திசை வழியை, பொது முதலீடுகளை அதிகப் படுத்தி, நம் நாட்டிற்குத் தேவையான உள் கட்டமைப்பு வசதிகளையும், பெரிய அளவில் வேலைவாய்ப்பையும் உருவாக்கக்கூடிய விதத்தில், மாற்றியமைத்திட ஐ.மு.கூட் டணி-2 அரசாங்கத்திற்குக் கடும் நிர்ப்பந் தங்கள் அளித்திட வேண்டியது அவசியம். அதன் மூலம் மட்டுமேதான் நாம் நம் மக் களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திட முடியும்.

தமிழில்: ச.வீரமணி

Tuesday, January 17, 2012

குழந்தைகளின் பரிதாப நிலை

சில அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள் பசி, பட்டினி, ஊட்டச்சத் துக் குறைவு தொடர்பாக நடத்திய ஆய்வு களின் மீதான அறிக்கை ஒன்றை பிரதமர் வெளியிடுகையில், ‘‘ஊட்டச்சத்துக் குறைவு பிரச்சனை ஒரு தேசிய அவமானம்’’ என்று புலம்பியிருக்கிறார். இது ஒரு தேசிய அவ மானம் என்பது உண்மையேயாகும். ஆயினும், இதற்கு முன் பிரதமர் அவர்கள், இந்தியா ‘‘வலு வான பொருளாதார நிலையை’’ எய்தி விட்டது என்று படாடோபமாக அறிவித்தது குறித்தோ, இருபதாண்டுகளுக்கு முன் தன் னால் தொடக்கி வைக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் மாபெரும் வெற்றி பெற்று விட்டதாக பீற்றிக்கொண்டது குறித்தோ எதுவும் கூறாமல் தற்போது மவுனம் சாதிக் கிறார்.

பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை, நம் நாட்டில் ஐந்து வயதுக்குக் கீழ் உள்ள குழந் தைகளில் 42 விழுக்காடு, குறைந்த எடை யுடன் காணப்படுவதாகவும், 59 விழுக்காடு தங்கள் வயதுக்குரிய வளர்ச்சியுடன் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆய் வானது நாட்டில் 2011ஆம் ஆண்டில் கிராமப் புறங்கள் நிறைந்த, நாட்டின் ஒட்டுமொத்த குழந்தைகளில் சுமார் 20 விழுக்காட்டினரை உள்ளடக்கியுள்ள 112 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டவைகளாகும்.

பிரதமர் இவ்வாறு அதிர்ச்சிதரத்தக்க செய் திகளை வெளிப்படுத்திப் பேசியுள்ள போதி லும், இம்முடிவுகள் புதியவை அல்ல. இருப தாண்டுகளுக்கு முன் இன்றைய பிரதமரும் அன்றைய நிதி அமைச்சருமாகிய மன் மோகன் சிங் அவர்களால் தொடங்கப்பட்ட நவீன தாராளமயப் பொருளாதார ‘சீர்திருத் தங்கள்’ நாட்டு மக்கள் மத்தியில் சமச்சீரின் மையை, ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, இருவித இந்தியாவை உருவாக்கவே இட்டுச் சென்றுள்ளன என்று அரசாங்கத்தின் ஆய்வு கள் பல ஏற்கனவே கண்டறிந்துள்ளன. அவ் வாறு வெளியிடப்பட்டுள்ள அரசாங்கத்தின் ஆய்வுகள் சிலவற்றை இப்போது நாம் ஆராய் வோம்.

நாட்டின் வறுமைநிலை குறித்து பல்வேறு புள்ளிவிவரங்களுக்கிடையே பல்வேறுவித மான விவரங்கள் இருந்தபோதிலும், சமீபத் தில் திட்டக் கமிஷன் சார்பில் வெளியிடப் பட்டுள்ள மனிதகுல வளர்ச்சி அறிக்கை (ழரஅயn னுநஎநடடியீஅநவே சுநயீடிசவ)யில், நம் மக்களில் சுமார் 31 கோடி பேர் அரசாங்கத்தின் அதிகாரப் பூர்வமான வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ் கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறது. 1973-74க்குப் பின், வறுமைக்கோட்டுக்குக் கீழா னோர் எண்ணிக்கை வெறும் 1 கோடியே 90 லட்சம் மட்டுமே குறைந்திருக்கிறது. வறுமை குறித்து சரியான அளவில் விவரங்கள் சேக ரிக்கப்படவில்லை என்பது ஒருபுறமிருக் கட்டும், அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப் பட்ட அறிக்கைகளின்படியே, ஒருவர் உட் கொள்ள வேண்டிய உணவின் அளவு (அதா வது குறைந்தபட்ச கலோரிகள் மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவு உட்கொள்ளுதல் என் பது) 1983க்கும் 2005க்கும் இடையே கிராமப் புறங்களில் 8 விழுக்காடும், நகர்ப்புறங்களில் 3.3 விழுக்காடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. பசி-பட்டினியில்லாத மாநிலம் என்று எது வுமே இல்லை என்று இது தொடர்பான அறிக் கைகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவைகள் ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளா கும். இது ஆப்ரிக்க நாட்டின் நிலைமையை விட மோசமானதாகும். நாட்டின் குழந்தை களில் பாதிக்கும் மேற்பட்டவைகளுக்கு தடுப்பூசிகள் முழுமையாகப் போடப்படுவ தில்லை. இதன் விளைவாக இவை, முற்றிலு மாக தடுக்கப்படக்கூடிய வியாதிகளைக் கூட இவற்றால் தடுக்க முடியாமல், நோய்க்கு இரையாகி இறக்கும் அவல நிலை இன்னமும் இருந்து வருகிறது. நாட்டில் சுகாதாரத் திற்காக அரசு செலவிடும் மொத்த செல வினம் என்பது, மொத்த உள்நாட்டு உற்பத்தி யின் விழுக்காட்டின் அடிப்படையில் பார்த் தோமானால், ஒட்டுமொத்த ஆப்ரிக்க நாடு களில் மேற்கொள்ளப்படும் செலவினத்தை விடக் குறைவானதாகும். நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் கழிந்தபின்னரும் நம் நாட்டின் துப்புரவு நிலைமைகள் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே இருக்கின்றன. நாட்டில் உள்ள குடும்பங் களில் ஐம்பது விழுக்காட்டிற்கும் மேற்பட் டவை, கழிப்பறை வசதிகளின்றியே இருக் கின்றன.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-2 நடத்தப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 நடத்தப்பட்டிருக்கிறது. ஆய்வு-2இன் போது இருந்த நிலைமை களைவிட தற்போது ஆய்வு-3இன் போது உள்ள நிலைமைகள் மிகவும் வேதனை யளிக்கக்கூடிய விதத்தில் அமைந்திருக் கின்றன. 6 மாதங்களுக்கும் 35 மாதங்களுக் கும் இடைப்பட்ட வயதில் உள்ள குழந்தை களில் ரத்தசோகை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 74.2 விழுக்காட்டிலிருந்து 79.2 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது. 15 வயதுக்கும் 49 வயதுக்கும் இடையே மண மாகியுள்ள பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 51.2 விழுக் காட்டிலிருந்து 56.2 விழுக்காடாக உயர்ந் திருக்கிறது. இதே வயதில் உள்ள கர்ப்பிணிப் பெண்களில் ரத்தசோகைக்கு ஆளானோர் எண்ணிக்கை 49.7 விழுக்காட்டிலிருந்து 57.9 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது.

தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-3 மேற் கொண்ட ஆய்வின்படி, மூன்று வயதுக்குக் குறைவான குழந்தைகளில் 38.4 விழுக் காட்டுக் குழந்தைகள், தாங்கள் இருக்க வேண்டிய வளர்ச்சியைவிட குறைவாகவே இருக்கின்றனர் என்றும். 46 விழுக்காட்டுக் குழந்தைகள் குறைந்த எடையுடன் காணப் படுகின்றனர் என்றும், 79.2 விழுக்காட்டுக் குழந்தைகள் ரத்த சோகையுடன் காணப் படுகின்றனர் என்றும் கூறியிருக்கிறது. இதுதான் நம் தாய்மார்கள் மற்றும் குழந்தை களின் இன்றைய நிலையாகும்.

நம் குழந்தைகளின் சுகாதாரம் என்பது நம் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்துடன் நேர டியாக சம்பந்தப்பட்டவை என்று அனைத்து ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ள உண்மை யாகும். ஆட்சியாளர்கள், நாட்டின் பொருளா தார வளர்ச்சி விகிதம் உயர்ந்து கொண்டே இருப்பதாக பீற்றிக்கொண்டிருந்தாலும், தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் விகிதம் 2007ஆம் ஆண்டில் 2.8 விழுக்காடாக இருந்தது, 2009-10ஆம் ஆண்டில் 9.4 விழுக்காடாக அதிகரித்திருக்கிறது என்று மதிப்பிட்டிருக்கிறது. வேலையில் உள்ளவர் களில் கூட, 16 விழுக்காட்டினர்தான் முறை யான ஊதியத்துடன் வேலையில் உள்ளவர் கள். மற்றவர்களில் 49 விழுக்காட்டினர் சுய வேலை பார்ப்பவர்கள் (அதாவது வீதிகளில் சுற்றி பொருள்களை விற்போர். சாலையோரங் களில் பொருள்களை விற்போர் போன்று சமூ கத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள்) மற்றும் 39 விழுக்காட்டினர் அத்துக்கூலி கேசுவல் தொழிலாளர்களாவார்கள்.

ஊட்டச்சத்துக் குறைவுடன் எடை குறைந்து காணப்படும் குழந்தைகள் 2004ஆம் ஆண்டில் 53 விழுக்காடாக இருந் தது, 2011இல்42ஆகக் குறைந்துவிட்டது என்பது உண்மையானாலும், இவ்வாறு 42 விழுக்காட்டுக் குழந்தைகள் எடை குறை வுடன் இருப்பது குறித்து, பொறுப்புள்ள பிரஜைகளைக் கவலைக்குள்ளாக்கி இருக் கிறது என்றும், இதனை எவரும் ஏற்க முடி யாது என்றும் பிரதமர் கூறியிருக்கிறார்.

இதில் வேடிக்கை விநோதம் என்ன வெனில், பிரதமர்தான் இந்தியாவின் ஊட்டச் சத்து சவால்களுக்கான தேசிய கவுன்சிலின் தலைவராவார். நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவுடன் காணப்படும் குழந்தைகள் பிரச் சனையை சமாளிப்பதற்காக ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் என்னும் அமைப்பினை நாடு முழுதுக்கும் அரசாங்கம் கொண்டு வந்திருக்கிறது. இது வும் கூட அரசாங்கம் தானாக முன்வந்து விரும்பி, செய்திடவில்லை. மாறாக, உச்ச நீதிமன்றத்தின் கட்டளையின்படி அரசால் கொண்டுவரப்பட்ட ஒன்றாகும். அவ்வாறு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டிருந்த போதிலும்கூட, பிரதமரின் தலைமையில் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மேற் பார்வையாளர்கள் (ஐஊனுளு ளரயீநசஎளைடிசள) பணி யிடங்களில் மூன்றில் ஒரு பங்கு நாடு முழுதும் இன்னமும் நிரப்பப்படாமல் இருக் கின்றன. இத்திட்டத்தை அமல்படுத்து வதற்கு மிகவும் முக்கியமானது அங்கன்வாடி மையங்களாகும். நாடு முழுதும் அமைக்கப்பட வேண்டிய 14 லட்சம் அங்கன்வாடி மையங்களில், 1 லட்சத்து 10 ஆயிரம் மையங் கள் இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகின்றன. செயல்படும் அங்கன் வாடி மையங்களிலும் மிகப் பெரும்பாலான வற்றின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளன. பீகார் மாநிலத்தில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் கட்டிட வசதி எதுவுமின்றி திறந்த வெளியில் இயங்கி வருகின்றன. பாதிக்கும் மேற்பட்ட மையங்களில் கழிவறை வசதி களோ, குடிநீர் வசதிகளோ கிடையாது. அர சாங்கத்தின் தாரக மந்திரமான பொது-தனி யார்-ஒத்துழைப்பு திட்டப்படி, இம்மையங்களுக்கான உணவு விநியோகம் தனியாரால் மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. இது எவ்வித ஒழுங்கு முறையுமின்றியும், தரப்படும் உணவின் தரம் மற்றும் அளவு குறித்து எவ்வித சரிபார்த் தலுமின்றி பெயரளவிலும் மிகவும் மோசமான முறையில் அளிக்கப்பட்டு வருகின்றன.

அங்கன்வாடி மையங்களின் பரிதாபகர மான நிலைமைகளுக்கு எதிராகப் பல இடங்களில் மக்கள் கிளர்ச்சிகள் நடை பெற்றுள்ளபோதிலும், இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதங்கள் நடைபெற்றுள்ள போதிலும், அங்கன்வாடி ஊழியர்களின் நிலைமைகளும் மிகவும் வேதனையளிக்கக்கூடிய விதத்திலேயே உள்ளன. அவர்களின் பணி நிலைமைகள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையிலேயே இன்றளவும் இருந்து வருகின்றன. மாத ஊதியமாக அங்கன்வாடி ஊழியர்களுக்கு 1500 ரூபாயும், அங்கன்வாடி உதவியாளர் களுக்கு 750 ரூபாயும் அளிக்கப்படுகிறது. நாட்டின் எதிர்காலமாக விளங்குகின்ற குழந்தைகளில், ஊட்டச்சத்துக் குறைவாக உள்ளவற்றைக் கண்டறிந்து, அவர்களைப் பேணி வளர்த்திடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களின் பரிதாப நிலை இவ் வாறுள்ளது.

ஆயினும், அரசாங்கம் இத்துறையை உதா சீனப்படுத்துவது இன்னமும் தொடர்கிறது. நாடு முழுதும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சிப் பணிகள் திட்டத்தை விரிவாக் கிடத் தேவையான நிதி ஒதுக்கீட்டை அர சாங்கம் இன்னமும் செய்திடவில்லை. நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே பொது சுகாதாரத்திற்காக ஆட்சியாளர்கள் செலவு செய்கிறார்கள். உண்மையில், பொது சுகா தாரத்திற்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ள அற் பத்தொகையான 22 ஆயிரத்து 300 கோடி ரூபாயைவிட, நாட்டில் நடைபெற்ற 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள தொகையானது எட்டு மடங்கிற்கும் அதிக மாகும்.

நாட்டில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகளின் நிலைமையை மாற்ற வேண்டும் என்பது குறித்து பிரதமர் உண் மையிலேயே அக்கறையுள்ளவராக இருந் தால், பின் அவர் அடிப்படை சுகாதார நலன் களை அனைவருக்குமானதாக மாற்றிட உரிய நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். இதற்கு நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தபட்சம் 3 விழுக்காடு சுகாதார நலனுக்கான திட்டங்களுக்காக ஒதுக்கிட வேண்டும். நம் அரசாங்கத்திற்கு நியாயமாக வரவேண்டிய வரி வருவாய்களில் இதைவிட அதிகமான அளவுத் தொகை தற் போது அரசாங்கத்தால் தள்ளுபடி செய்யப் பட்டிருக்கிறது. இவ்வாறு அரசாங்கம் தள் ளுபடி செய்திருக்கிற தொகை, கடந்த மூன் றாண்டுகளில் மட்டும் 14 லட்சத்து 28 ஆயி ரத்து 028 கோடி ரூபாயாகும். இதில் 3 லட் சத்து 63 ஆயிரத்து 875 கோடி ரூபாய் அள விற்கு கார்ப்பரேட்டுகளுக்கும் பணக்காரர் களுக்கும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக வளப்படுத்திடும், ஏழை களை மேலும் ஓட்டாண்டிகளாக மாற்றிடும், ஆட்சியாளர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய ‘சீர்திருத்தங்களை’ குழிதோண்டிப் புதைத்திடாமல், நாட்டின் நலனிலும், நாட்டு மக்களின் நலவாழ்விலும் முன்னேற்றம் எதனையும் உருப்படியாகச் செய்திட முடியாது. நாட்டிலுள்ள ஏழை - பணக்காரர்கள் மத்தியில் இடைவெளியை அதிகப்படுத்திடும் ஆட்சியாளர்களின் கொள்கை கைவிடப்பட வேண்டியதாகும். பணக்காரர்களுக்கு சலுகைகள் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொட்டு வது கைவிடப்பட்டு, நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகின்ற கட்டமைப்பு வசதி களைக் கட்டுவதற்கும், அதன் மூலம் பெரிய அளவில் வேலைவாய்ப்பைப் பெருக்கு வதற்கும் வழிசெய்யக்கூடிய விதத்தில் அத் தொகைகளை பொது முதலீடுகளில் உப யோகப்படுத்திட வேண்டும். நாட்டு மக் களின் வாழ்க்கைத்தரத்தையும், அதன் மூலம் சிறந்ததோர் இந்தியாவை உருவாக்கு வதற்கான விதத்தில் அவர்களது நல வாழ் வையும் மேம்படுத்துவதற்கான ஒரே வழி இதுவேயாகும்.

தமிழில்: ச.வீரமணி