Monday, November 30, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டின் முக்கியத்துவம் - சீத்தாராம் யெச்சூரி




புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு தன்னுடைய நிகழ்ச்சிநிரலை மிகவும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. மாநாடு தில்லி பிரகடனத்தையும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. அடுத்து நடைபெறவேண்டிய 12ஆவது மாநாட்டை தென் ஆப்ரிக்கக் குடியரசில் நடத்திடவும், அதனை தென் ஆப்ரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி 2010 இல் கடைசி காலாண்டில் நடத்திடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் இம்மாநாடு பல வழிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தற்போதுள்ள உலகப் பொருளாதார மந்தம் தொடர்பாக உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆய்வினை இம்மாநாட்டில் சமர்ப்பித்து, முதலாளித்துவமானது ஒரு வரையறைக்கு மேல் வளர முடியாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது என்று கூறி, இதற்கெதிராக மனித சமூகத்திற்கு விடுதலையை அளிக்கக்கூடியது சோசலிசமே என்றும் அதனை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டு வலியுறுத்தின. இடைப்பட்ட காலத்தில், உலகப் பொருளாதார மந்தத்திலிருந்து தன்னைக் காப்பாற்றி மீண்டெழுவதற்காக உலக முதலாளித்துவம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளையும் அவைகள் விளக்கின. உதாரணமாக, கார்பரேட் நிறுவனங்கள் நெருக்கடியிலிருந்து மீளவேண்டுமென்பதற்காக அவை கேட்டுக்கொண்டபடி முதலாளித்துவ அரசுகள் 14 டிரில்லியன் டாலர்கள் உதவி இருக்கின்றன. இதற்குப் பதிலாக, இவ்வளவு பெரிய தொகையை பல்வேறு நாடுகளிலும் பொது முதலீட்டில் செலவழித்திருந்தால், அது மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பினையும் பெருக்கி அந்தந்த நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பையும் எழுப்பியிருக்கும். அதன் மூலமாக மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, தங்களின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் முதலாளித்துவ உற்பத்தி முறையும் மீண்டெழுந்து வலிவும் பொலிவும் பெற்றிருக்கும், உலகப் பொருளாதாரமும் இப்போது ஏற்பட்டுள்ள மந்தத்திலிருந்து மீண்டெழுந்திருக்கும். ஆயினும், இந்தப் பாதையில் செல்வதென்பது கார்பரேட் நிறுவனங்களைப் பொறுத்த வரை, தாங்கள் முதலாளித்துவ நெருக்கடிக்கு முன்பு லாபமீட்டியதுபோல் லாபமீட்ட வெகு காலமாகும். எனவே இதனை அவை விரும்பவில்லை. நெருக்கடிக்குள்ளான நிதி ஜாம்பவான்கள் அத்தொகையை நேரடியாகவே விழுங்கி தங்களுக்கு லாபத்தில் ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்து கொண்டன. ஆனால், இந்தப் பாதையானது மிகப் பெரிய அளவில் வேலையிழப்பினை ஏற்படுத்தி, மக்களை உலக அளவில் வறுமை மற்றும் பட்டினிக் கொடுமைக்குள் தள்ளி இருக்கிறது. இவ்வாறு உலக முதலாளித்தவம் மக்களைப் பற்றிக் கவலைப்படாது தன் நலன்களை மட்டும் காப்பாற்றிக்கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில், நடைபெற்ற சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு, மக்களைக் காப்பாற்றிட ஒரு மாற்றுப் பாதையைக் காட்டியிருக்கிறது. வெகுஜன இயக்கங்களின் மூலம் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவதன் அடிப்படையில் இந்த மாற்று இருந்திட வேண்டும். வெகுஜன இயக்கங்கள் மூலம் முதலாளித்துவத்திற்கு எதிராக, சோசலிசத்திற்கான ஓர் அரசியல் மாற்றுக்கான போராட்டம் வலுப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்திருக்கிறது.

பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தருணத்தில் இம்மாநாடு நடைபெற்றது. மேற்கத்திய நாடுகள் அனைத்திலும், இக்கொண்டாட்டத்தை, கம்யூனிஸ்ட் எதிர்ப்புப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொண்டன. உலகப் பொருளாதார மந்தத்தால் மக்கள் படும் துன்ப துயரங்களை மறக்கடிக்கவும் முதலாளித்துவ உலகம் இதனைப் பயன்படுத்திக் கொண்டது. ஐரோப்பா கண்டம் முழுவதுமே கம்யூனிசத்தை பாசிசத்துடன் ஒப்பிட்டு மிகவும் கேவலமான முறையில் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.

பெர்லினில் உள்ள ரெய்ச்ஸ்டாக் கோட்டையில் செங்கொடியை உயர்த்தியதன் மூலம் பாசிசமும் ஹிட்லரும் தோற்றதை உலகுக்கு அறிவித்தது, சோவியத் யூனியன்தானே தவிர, அமெரிக்காவோ அல்லது இங்கிலாந்தோ அல்லது பிரான்சோ அல்ல. இந்த வரலாற்று உண்மையை மீளவும் நாம் மக்கள் மத்தியில் சொல்ல வேண்டியிருக்கிறது. கம்யூனிச எதிர்ப்பு என்பது ஐரோப்பிய நாடுகளில் மிகவும் இழிவான நிலைக்குச் சென்றிருக்கிறது. கிரீஸில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஓர் இளைஞன் சோசலிசத்திற்கு ஆதரவாக இருந்தான் என்பதற்காகப் பள்ளி நிர்வாகம் அவனை இடைநீக்கம் செய்திருக்கிறது. இவ்வாறு உலகம் முழுதும் வரலாற்றைத் திரித்திடும் போக்கு முன்னுக்கு வந்துள்ள சூழ்நிலையில்தான் இதற்கெதிராக கம்யூனிச அடையாளத்தை உயர்த்திப் பிடிக்கும் வகையிலும், இத்தகைய முதலாளித்துவத்தின் சித்தாந்தரீதியான தாக்குதலை முறியடிக்கக்கூடிய வகையிலும் நடைபெற்றுள்ள சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.

மாநாட்டின்போது அமெரிக்காவிலிருந்தும் கியூபாவிலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், இஸ்ரேலிலிருந்தும் பாலஸ்தீனத்திலிருந்தும் வந்த கம்யூனிஸ்ட் கட்சிப் பிரதிநிதிகளும், ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டதைப் பார்த்தோம். இதுதான் உண்மையான கம்யூனிஸ்ட் உணர்வு என்பதாகும். மாநாட்டின் துவக்கத்தில் சர்வதேசிய கீதம் இந்தியில் இசைக்கப்பட்டு அது முடிவுறும் சமயத்தில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வந்திருந்த பிரதிநிதிகள் தங்கள் தங்கள் மொழியில் சர்வதேசிய கீதத்தை இசைத்தனர். இதுவே மனிதகுலத்தின் சகோதரத்துவம். இன்றைய உலகில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம் ஒன்றால்தான் இத்தகைய அரசியல் உணர்வைப் பிரதிபலிக்க முடியும்.

பல்வேறு நாடுகளில், பல்வேறு சிரமமான சூழ்நிலைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் அனுபவங்களை மாநாட்டில் பகிர்ந்துகொண்டார்கள். இவ்வாறு செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்றாகும். அரபு நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதைக் கண்டித்திருப்பதுடன், அரசின் கட்டாய ராணுவப் பயிற்சிக்கு எதிராக உயர்நிலைப் பள்ளி மாணவர்களை இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சி அணிதிரட்டி வருகிறது. மிகவும் இக்கட்டான சூழ்நிலைமைகளிலும் கூட, இஸ்ரேல் கம்யூனிஸ்ட் கட்சியானது, 150 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூன்று உறுப்பினர்களை தொடர்ந்து அனுப்பி வருகிறது. இம்மூவரில் இருவர் யூதர்கள் என்பதும், ஒருவர் அராபியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலில் உள்ள கட்சிகளில் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றில்தான் யூதர்களும், அராபியர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, மக்கள் ஆதரவு வெகு குறைவு என்று ஒரு துஷ்பிரச்சாரம் அடிக்கடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பிரச்சாரத்தை வாதத்திற்காக ஏற்றுக்கொண்டாலும், அந்தந்த நாடுகளில் அவை ஆளும் வர்க்கங்களின் மூர்க்கத்தனமான தாக்குதல்களை எதிர்த்து நின்றே தங்களின் அரசியல் போராட்டங்களை நடத்தி வருகின்றன. பல நாடுகளில் அவர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் முதலாளித்துவத்திற்கு எதிராக கூர்மையான மற்றும் தெளிவான மாற்றை முன்வைத்திருக்கின்றன.

இத்தகைய கம்யூனிஸ்ட் அடையாளம் இன்றைய நிலையில் மிகவும் அவசியமாகும். மாநாட்டில் பங்கேற்ற கட்சிகளில் பல, தங்கள் நாடுகளில் ஏகாதிபத்திய எதிர்ப்பு மேடைகளில் முன்னணியில் உள்ள கட்சிகளாகும். சர்வதேச அளவில் நடைபெறும் இத்தகைய மாநாடுகளில் பங்கேற்பதும், வலுப்படுத்துவதும் முதலாளித்துவத்திற்கு எதிராக மாற்றை ஏற்படுத்துவதற்கு அவசியம். இத்தகைய நடைமுறையானது இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்ததைப்போல் ‘கம்யூனிஸ்ட் அகிலத்தை‘ உருவாக்குவதற்கான முயற்சி அல்ல என்பதில் நாம் தெளிவாகவே இருக்கிறோம். அந்தக் காலங்கள் இப்போது வரலாறாகிப் போய்விட்டன. இப்போது நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும், பல்வேறு நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே பெருமளவில் ஒருங்கிணைப்பை உருவாக்குவதும், தார்மீக ஆதரவினை வெளிப் படுத்தவதும்தான். இத்தகைய கம்யூனிச அடையாளம்தான், ஒன்றுபட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணிகளுக்கு அடித்தளங்களாக அமைந்திடும்.

இத்தகைய சர்வதேச மாநாடுகள், மாநாட்டில் முன்வைக்கப்பட்ட ஆய்வுப் பொருள் மீது கம்யூனிஸ்ட் இயக்கத்தின் கவனத்தை ஈர்ப்பதுடன், சோசலிசத்திற்கு ஆதரவாக ஓர் அரசியல் மாற்றை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு மட்டும் நிற்காமல், இத்தகைய மாநாடுகள்தான் சுரண்டலுக்கும், மனித குலத்தின் துன்பதுயரங்களுக்கும் மாற்று சோசலிசமே என்றும் உரத்துப் பிரகடனம் செய்கிறது.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, November 28, 2009

லிபரான் ஆணைய அறிக்கை:குற்றவாளிகளைத் தண்டித்திடுக



பல்வேறு விதமான இக்கட்டுகளைக் கடந்து பதினேழு ஆண்டுகள் கழித்து, லிபரான் ஆணையம் கடைசியாகத் தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கைக்காக 48 தடவைகள் கால நீட்டிப்பு செய்து கொண்ட பின்னர் கடைசியாக அது சமர்ப்பித்துள்ள அறிக்கை யானது, 1992 டிசம்பர் 6 அன்று மிகவும் அரக்கத்தனமான முறையில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வானது கடுஞ்சீற்றம் கொண்ட கும்பலால் தன்னெழுச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஒன்று அல்ல, மாறாக மிகவும் உன்னிப்பாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஒன்று என்று மக்களுக்கு நன்கு தெரிந்த விவரங்களை மீள அது உறுதிப்படுத்தி இருக்கிறது.

மேற்படி அறிக்கையின் சாராம்சங்களை, சில ஊடகங்கள் வெளியிட்டதை அடுத்து, ஐமுகூ அரசாங்கமானது, நாடாளுமன்றத்தில், அதன்மீது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை அறிக்கையுடன் (ஹஉவiடிn கூயமநn சுநயீடிசவ) லிபரான் ஆணைய அறிக்கையையும் வைக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. மேற்படி நடவடிக்கை அறிக்கையில் மேற்படி சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது எவ்விதமான தண்டனை நடவடிக்கையோ அல்லது சட்டரீதியான நடவடிக்கையோ எடுக்கப்படுவது தொடர்பாக எதுவும் இல்லை என்பதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதமில்லை. இத தொடர்பாக பல சட்ட வழக்குகள் பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், எனவே சட்டம் அதன் கடமையைச் செய்ய அதற்குரிய கால அவகாசத்தை அளித்திட வேண்டியிருக்கிறது என்றும் இதற்கு வக்காலத்து வாங்கப்படலாம். ஆயினும், இவ்வாறு பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து, விரைவில் முடிவு காண்பதற்கு ஏதுவாக உச்சநீதிமன்றத்திற்கு அவற்றை மாற்றல் செய்திட, தன்னுடைய சட்ட அலுவலர்கள் மூலம் அரசு முயற்சிகள் மேற்கொண்டால் அதனைத் தடுத்திடுவோர் யாருமில்லை. அத்தகையதொரு நடைமுறையைப் பின்பற்ற ஐமுகூ-2 அரசாங்கத்திட்ம் ஆர்வமோ, விருப்பமோ இருப்பதாகத் தெரியவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவமானது மிகவும் அருவருப்பான முறையில் மதம் சார்ந்த ஓரிடத்தை இடித்த நிகழ்வு மட்டுமல்ல. இது நம்முடைய நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளத்தினையே மிகவும் மோசமான முறையில் தாக்கியதொரு நிகழ்வாகும். இடிக்கப்பட்டது ஒரு கான்கிரீட் கட்டிடமாக இருக்கலாம், ஆனால் அதன் மூலமாக அவர்கள் இடித்திருப்பது அதனை மட்டுமல்ல, நவீன இந்தியாவின் உணர்வையும் உன்னதத்தையுமே உருக் குலைத்து விட்டார்கள். எனவேதான், இதனைச் செய்திட்ட கயவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது சுதந்திரமாக விட அனுமதிப்ப தென்பது, நவீன இந்தியக் குடியரசுக்கு விடப்பட்ட சவாலை எதிர்கொள்ள மறுக்கும் போக்காகும். தாமதமாகும் நீதி மறுக்கப்பட்ட நீதியாகும். பதினேழு ஆண்டுகளாகியிருந்த போதிலும், நீதி நிலைநாட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்வவமானது ஒரு நாள் நிகழ்வல்ல. அந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பும் அதற்குப் பின்பும் கூட நாடு முழுதும் மதவெறி விசிறி விடப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் வெட்டிக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். வேற்றுமையிலும் ஒற்றுமை காணும் உயரிய பண்புடன் வாழ்ந்த வந்த மக்களுக்கிடையே இருந்த மதநல்லிணக்க மாண்பை மிக மோசமான முறையில் சீர்குலைத்தனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான், இவ்வாறு பாபர் மசூதியை இடித்து, அதன்மூலம் இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பைக் குலைத்திட்ட, கயவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதோடு, இந்த சம்பவத்தின் மூலம் நாட்டிலும் சமுதாயத்திலும் ஏற்பட்டுள்ள காழ்ப்புணர்வைச் சரி செய்யக்கூடிய வகையிலும் நீதி அமைந்திட வேண்டும். நவீன இந்தியாவை ஒருமுகப்படுத்தும் வகையில், லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காது இருந்துவிடக் கூடாது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து நடைபெற்ற மும்பை கலவரங்கள் தொடர்பாக விசாரணை செய்த ஸ்ரீகிருஷ்ணா ஆணையத்தின் அறிக்கையின் பரிந்துரைகள் மீது உருப்படியாக நடவடிக்கை எதையும் எடுக்காததுபோல் இதனையும் விட்டு விடக் கூடாது.
லிபரான் ஆணையமானது, அப்போது மத்தியில் ஆட்சியிலிருந்த நரசிம்மராவ் அரசாங்கத்தின் பங்களிப்பு குறித்து கண்டு கொள்ளாமல் விட்டிருப்பது விநோதமாகத் தோன்றுகிறது. சம்பவ சமயத்தில் எல்லோரும் அறிந்த உண்மைகளுக்கு முற்றிலும் முரணான முறையில் இது அமைந்திருக்கிறது. அந்த சமயத்தில் மதச்சார்பின்மையைப் பாதுகாத்திட மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டிலிருந்த அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் மத்திய அரசின் பின்னால் அணிவகுத்து நின்றன. உண்மையில், பாபர் மசூதி இடிப்புக்கு ஒருசில நாட்களுக்கு முன்பு கூடிய தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில், (இக்கூட்டத்தை பாஜக-வும் அப்போது அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த அதிமுகவும் பகிஷ்கரித்தன), பாபர் மசூதியைப் பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நரசிம்மராவ் அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, தோழர் சுர்ஜித் அவர்களால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தை, ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. ஆயினும், இவ்வாறு அனைத்துக் கட்சிகளும் ஆதரவு அளித்தபோதிலும், அரசாங்கமானது வலுவான முறையில் செயல்படவில்லை.

சம்பவ இடத்தில் கொலையைச் செய்கிற ஒருவனுக்கும், சம்பவ இடத்தில் நின்று கொண்டிருக்கிற போலீஸ்காரன் அவ்வாறு கொலை நடைபெறாமல் தடுப்பதில் தவறுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் உண்டுதான். கொலைபுரிந்த கயவன் மீது கொலைக்குற்றத்திற்காக விசாரணை மேற்கொள்ளப்படும் அதே சமயத்தில், சம்பவ இடத்தில் நின்றிருந்தும் கொலை நடப்பதைத் தடுத்திடத் தவறிய போலீஸ்காரன் மீதும் கடமையைச் செய்யத் தவறியதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். உண்மையில் 1993இல் இது தொடர்பாக நரசிம்மராவ் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்மொழிந்தது. அப்போது ‘ஜார்கண்ட் லஞ்ச வழக்கு’ என்று எல்லோராலும் அறியப்பட்ட சம்பவத்தின் காரணமாக அரசாங்கம் கவிழாமல் தப்பிப் பிழைத்தது.
கடந்த அறுபதாண்டு கால குடியரசில், நவீன இந்தியாவினை ஒருமுகப்படுத்தும் நடவடிக்கையில் நாம் மற்றொரு தாக்குதலையும் எதிர்கொண்டோம். 1975இல் உள்நாட்டு அவசரநிலைப் பிரகடனம் என்ற வடிவத்தில் அது இருந்தது. மக்கள் அதனை எதிர்கொண்டு முறியடித்து, ஜனநாயகத்தை மீள நிலைநிறுத்தினார்கள், இந்திரா காந்தியைத் தோற்கடித்தார்கள். ஜனநாயகத்தை மதிக்காது அத்துமீறி நடந்துகொண்ட மேலும் சிலரையும் உரிய முறையில் தண்டித்தார்கள். பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பின் மீதான மிக மோசமான தாக்குதலாகும். நம்முடைய நவீன குடியரசின் நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் அழியாது காத்திட வேண்டுமானால், இவ்வாறு பாபர் மசூதியை இடித்தக் கயவர்கள் மீது உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டியது அவசியம். எனவே. லிபரான் ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் அதன்மீது அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அறிக்கை மீது நாடாளுமன்றம் விவாதிக்கும்போது, இந்தத் திசைவழியில் அது அமைந்திட வேண்டும். நவீன இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக மாண்பு ஒருங்கிணைக்கப்படும் நடைமுறைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

(தமிழில்: ச.வீரமணி)

Wednesday, November 25, 2009

மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று!



முதலாளித்துவத்தை தூக்கி எறிவோம்! மனித குலத்திற்கு சோசலிசமே மெய்யான மாற்று! சர்வதேச கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாட்டுப் பிரகடனம்
மனித குலத்தின் வருங்காலத் திற்கு சோசலிசமே ஒரே மெய்யான மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங்களை வலுப்படுத்துவதில் உலக மக்கள் கம்யூனிஸ்ட்டுக ளுடன் இணைந்து நிற்க வேண்டு மென்று தில்லியில் நடந்த உலக கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் 11-வது மாநாடு பிரகடனம் செய்துள்ளது.

47 நாடுகளைச் சேர்ந்த 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11-வது சர்வதேச மாநாடு புதுதில்லியில் நவம்பர் 20 முதல் 22 வரை நடைபெற்றது.

இம்மாநாடு தனது தில்லிப் பிரகடனத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. பிரகடனம் வருமாறு:-

“சர்வதேசப் பொருளாதார நெருக்கடி, தொழிலாளர்கள், மக்கள் ஆகியோரின் போராட்டம், இதற்கான மாற்றுக்கள், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் பங்கு” என்ற அடிப் படையில் இம்மாநாடு தனது பிரகடனத்தை நிறைவேற்றியது.

பிரகடனம்

தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்துவத்தின் வர லாற்று எல்லைகளை வரையறுத்துக் காட்டியுள்ளதோடு, புரட்சிகரமான நட வடிக்கைகள் மூலம் முதலாளித் துவத்தைத் தூக்கி எறிய வேண்டியதன் தேவையையும் சுட்டிக்காட்டுகிறது. உற்பத்தியின் சமூகத்தன்மைக்கும் முதலாளித்துவச் சுரண்டலுக்கும் இடையே உள்ள முதலாளித்துவத்தின் பிரதான முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் அது எடுத்துக் காட்டுகிறது. மூலதனத்தின் அரசியல் பிரதி நிதிகள், இந்த நெருக்கடியின் மைய மாக உள்ள மூலதனத்திற்கும், உழைப் பிற்கும் இடையேயான தீர்க்க இயலாத முரண்பாட்டை மூடிமறைக்க முயற் சிக்கின்றனர். மூலதனத்தின் சுரண்டலைத் தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் நெருக்கடிக்கான தங்களது தீர்வுகளை அவர்கள் முன்வைக்கின்றனர். உலக அமைப்புக்களான சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றோடு இச்செய லில் ஈடுபட்டு வரும் ஏகாதிபத்திய சக்திகளிடையே நிலவும் போட்டி களை இந்நெருக்கடி தீவிரப்படுத்து கிறது. ராணுவ அரசியல் தீர்வுகள், தீவிர மாக முன்வைக்கப்படுகின்றன.

நேட்டோ ராணுவக் கூட்டணி அமைப்பும் தனது தீவிர நடவடிக்கை களை அதிகரித்து வருகிறது. அரசியல் அமைப்புக்கள், ஜனநாயக, சிவில் உரிமைகள், தொழிற்சங்க உரிமைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்ற மிகவும் பிற்போக்கான தன்மைக்கு மாறி வருகின்றன என்பதை இம்மாநாடு வலியுறுத்திக் கூறுகிறது.

தற்போதைய நெருக்கடி, 1929-ம் ஆண்டில் ஏற்பட்ட மகத்தான பொருளா தார நெருக்கடிக்குப் பின்னர் அனைத்துத் துறைகளையும் பாதிக்கின்ற ஒன்றாக உள்ளது என்பதை இம்மாநாடு உறுதிபடக் கூறுகிறது. விவசாயமும், கிராமப் பொரு ளாதாரங்களும் பெரும் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளன. உலகளவில் கோடிக் கணக்கான விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் துன்பத்தையும் வறுமை நிலையையும் அதிகரித்து வருகி றது. கோடிக்கணக்கானோர் வேலைக ளையும் வீடுகளையும் இழந்து நிற்கின் றனர். வரலாறு காணாத அளவில் வேலை யின்மையின் அளவு அதிகரித்து வருகி றது. அதிகாரப்பூர்வமாகவே வேலையில் லாதோரின் எண்ணிக்கை 5 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஆகி வருகின் றனர். நூறு கோடி மக்களுக்கும் அதிக மானோர், அதாவது மனித குலத்தில் ஆறில் ஒரு பகுதியினர் பட்டினியால் வாடுகின்றனர். இளைஞர்கள், பெண்கள், நாடு பெயர்ந்தோர், இடம்பெயர்ந்த தொழி லாளர்கள் ஆகியோர் இதற்கு முதல் பலியாகின்றனர்.

இயற்கையான தங்களின் வர்க்க நிலைக்கேற்ப, முதலாளித்துவ நாடுக ளின் அரசுகள் இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு இத்தகைய அடிப்படையான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தவறி யுள்ளன. நவீன தாராளமயத்தின் ஆதர வாளர்களும், முதலாளித்துவத்தின் சமூக ஜனநாயக நிர்வாகிகளும் இதுநாள்வரை அரசைக் குறை கூறி வந்தனர். இப்போது தங்களை நெருக்கடியிலிருந்து மீட்க அரசைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முதலாளித்துவ அரசமைப்பு எப்போ துமே முதலாளிகளின் பெருத்த லாபத் திற்கான பாதைகளை விரிவுபடுத்தவும், அதனைப் பாதுகாக்கவும் எப்போதும் துணை நிற்கும் என்ற அடிப்படையான உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ நிறுவனங்களை நெருக் கடியிலிருந்து மீட்பதற்கான மீட்பு நடவ டிக்கைகள் பொதுமக்களின் பணத் திலிருந்து செய்யப்படுகின்றன; ஆனால் இதனால் பயனடைவோர் சிலரே. நெருக் கடியில் உள்ள முதலாளிகளை மீட்பதற் கான நடவடிக்கைகள் முதலில் மேற் கொள்ளப்பட்டதோடு, அவர்களின் கொழுத்த லாபத்திற்கான பாதைகள் விரிவுபடுத்தப்பட்டன. வங்கிகளும், நிதிக் குழுமங்களும் மீண்டும் தொழில்களில் ஈடுபட்டு லாபம் ஈட்டுகின்றன. கார்ப் பரேட் நிறுவனங்களை மீட்கப் பெருந் தொகையை அரசுகள் பரிசாக வழங்கின.

ஆனால் அதிகரித்துவரும் வேலை யின்மையும், உண்மையான ஊதியத்தின் வீழ்ச்சியும்தான் உழைக்கும் மக்களுக்குப் பரிசாக கிடைத்தது. ஒரு சிலரின் பேரா சையின் அடிப்படையில் உருவான பிறழ்ச் சியாலோ அல்லது முறையான ஒழுங்கு முறைகள் இல்லாமையாலோ இந்த நெருக்கடி உருவாகவில்லை. உலகமய மாக்கல் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தச் சில பத்தாண்டுகளில் முதலாளித் துவத்தின் அடிப்படையான லாபத்தைப் பெருக்குதல், நாடுகளுக்கிடையிலும், ஒரு நாட்டிற்குள்ளேயும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் கூர்மையாக அதிகரித்துள்ளது. இதன் விளைவாக உலக மக்களின் மிகப்பெரும்பான்மையோரின் வாங் கும் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளது. தற் போதைய நெருக்கடி முதலாளித்துவத் தின் உள்ளார்ந்த நெருக்கடியாகும். முதலா ளித்துவ அமைப்பு உள்ளார்ந்த வகையில் நெருக்கடியில் உழலும் ஒன்று என்ற மார்க்சிய பகுப்பாய்வு சரியானதே என்று மீண்டும் நிரூபணமாயுள்ளது.

முதலாளித்துவம் லாப வேட்டைக் காக எல்லைகளைத் தாண்டிச் செயல் படுகிறது. எல்லாவற்றையும் மிதித்து நாச மாக்குகிறது. இந்த நிகழ்வுப் போக்கில் அது தொழிலாளி வர்க்கத்தையும் இதர உழைக்கும் மக்களையும் சுரண்டுவதைத் தீவிரப்படுத்துகிறது. அவர்கள் மீது கூடு தல் துன்பங்களைச் சுமத்துகிறது. முதலா ளித்துவத்திற்கு உண்மையில் ஒரு நிரந்தர உழைப்பாளர் படை தேவைப்படுகிறது.

மெய்யான மாற்று அமைப்பை, அதா வது சோசலிசத்தை நிறுவுவதன் மூலமே இத்தகைய முதலாளித்துவக் கொடுங் கோன்மையிலிருந்து விடுதலை பெற முடியும். இதற்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்புப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒரு மாற்றுப்பாதைக்கான நமது போராட்டம் முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான தாகும். ஒரு மாற்றுக்கான நமது போராட்டம் மக்களை மக்கள் சுரண்டுவதும் ஒரு நாட்டை மற்றொரு நாடு சுரண்டுவதும் இல்லாத ஓர் அமைப்பாகும். இது வேறொரு உலகத்திற்கான, ஒரு நியாய மான உலகத்திற்கான, ஒரு சோசலிச உலகத்திற்கான போராட்டமாகும்.

இரண்டாவதாக, சுற்றுச்சூழல் தூய்மை கெட்டிருப்பதற்குக் காரணமான முதலாளித்துவம், உலகம் வெப்பமய மாவதைத் தடுப்பதற்கான சுமை முழுவ தையும் தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்கள் மீது திணிப்பதற்கு முயல்கின்றது. உலகத்தின் வெப்பம் அதி கரிப்பதற்கு அவர்களே காரணமாவர். வெப்ப மாற்றத்தைத் தடுப்பது என்ற பெயரால் உலகக் கட்டமைப்பை மாற்றி யமைப்பதற்கான முதலாளித்துவத்தின் ஆலோசனை, சுற்றுச்சூழலைப் பாது காப்பதற்கு எந்தத் தொடர்பும் இல்லா ததாகும். பசுமை வளர்ச்சி, பசுமைப் பொரு ளாதாரம் என்பனவற்றைப் புதிய அரசு ஏகபோக விதிமுறைகளைச் சுமத்துவ தற்கே பயன்படுத்தப்படுகின்றன. இவை அதிகபட்ச லாபத்திற்காகவும், மக்கள் மீது புதிய துன்பங்களைச் சுமத்துவதையும் ஆதரிக்கின்றன. முதலாளித்துவத்தின் கீழ் அதிகபட்ச லாபமானது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் மக்களின் உரிமைகளுக் கும் இசைவானதல்ல.

ஆதிக்க ஏகாதிபத்திய வல்லரசுகள் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உழைக் கும் மக்கள் மீது கூடுதல் சுமைகளைச் சுமத்துவதற்கு முயல்கின்றன. நடுத்தர அல்லது கீழ்மட்ட முதலாளித்துவ வளர்ச்சி நிலையிலுள்ள, அதாவது வள ரும் நாடுகளின் சந்தைகளில் ஊடுருவ வும், ஆதிக்கம் செலுத்தவும் முயல்கின் றன. முதலாவதாக, உலக வர்த்தகக் கழக தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் மூலம் இதைச் செய்ய முயல்கின்றன. இவை இந்த நாடுகளின் மக்களுக்குப் பாதகமான முறையில், குறிப்பாக விவசாயத் தரங்கள், விவசாயப் பொருட் கள் அல்லாத பிற பண்டங்களுக்குச் சந்தை அனுமதி மூலம் செய்ய முயல்கின்றன.

இந்த நிலைமைகளில், நிலையான முழு வேலைவாய்ப்புக்காகவும், எல்லோ ருக்கும் இலவச மருத்துவ வசதி, கல்வி மற்றும் சமூக நல்வாழ்விற்கும், பாலின வேறுபாட்டிற்கு எதிராகவும், இன வெறிக்கு எதிராகவும், இளைஞர்கள், பெண்கள், குடியேறித் தொழிலாளர்கள் மற்றும் இன, தேசிய சிறுபான்மையோர் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் அனைத்துப் பகுதிகளின் உரிமைகளின் பாதுகாப்புக்காகவும் போராட்டத்தில் மக்கள் சக்திகளின், முடிந்த அளவு பரந்த பகுதிகளைத் திரட்டுவதற்கு கம்யூ னிஸ்டு - தொழிலாளர் கட்சிகள் செய லூக்கமாகப் பாடுபட வேண்டும்.

கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகள் தமது நாடுகளில் இந்தப் பணியை மேற்கொண்டு, மக்களின் உரிமைகளுக் காகவும், முதலாளித்துவ அமைப்புக்கு எதிராகவும் பரந்த போராட்டங்களை நடத்த வேண்டும். தொழிலாளர் வர்க்கம் தனது பலத்தைத் திரட்டி, முதலாளித் துவத்தின் முயற்சிகளை எதிர்க்கும் போது, தனது உரிமைகளைப் பாதுகாப் பதில் வெற்றியடைய முடியும் என்று அனு பவம் காட்டுகிறது.

முதலாளித்துவ அமைப்பு இயல்பா கவே நெருக்கடி சூழ்ந்ததாக இருந்த போதிலும், அது தானாகவே வீழ்ச்சி யடைந்துவிடுவதில்லை. கம்யூனிஸ்ட் தலைமையிலான எதிர் தாக்குதல் இல்லா விட்டால் பிற்போக்கு சக்திகள் தலை தூக்கும் அபாயத்தை ஏற்படுத் தும். தமது நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதற் காக ஆளும் வர்க்கங்கள் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்கு முழுமூச் சான தாக்குதலைத் தொடுப்பார்கள். முதலாளித்துவத்தின் மெய்யான தன்மையைச் சமூக ஜனநாயக வாதிகள் தொடர்ந்து பிரமைகளை வளர்க்கிறார் கள். இதற்காக அவர்கள், ‘முதலாளித்து வம் மனித நேயமடைந்து வருகிறது. முறைப்படுத்தப்பட்டு வருகிறது. உலக ரீதியான நிர்வாகம்’ முதலிய முழக்கங் களை முன்வைக்கின்றனர். இவை உண்மையில், வர்க்கப் போராட்டத்தை மறுக்கின்ற முதலாளித்துவத்தின் தந்தி ரத்தை ஆதரிக்கின்றன.

மக்களுக்கு எதிரான கொள்கை களைக் கடைப்பிடிப்பதற்கு ஆக்கமளிக் கின்றன. எந்த அளவு சீர்திருத்தமும் முதலாளித்துவத்தின் கீழான சுரண் டலை அகற்ற முடியாது. முதலாளித் துவம் தூக்கியெறியப்பட வேண்டும். இதற்குத் தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனப் போராட் டங்கள் சித்தாந்த ரீதியிலும், அரசியல் ரீதியிலும் முனைப்பாக்கப்பட வேண்டும். ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு வேறு மாற்று இல்லை என்பது போன்ற பல வகைப்பட்ட தத்துவங்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. அவற்றை முறிய டிப்பதற்கு நமது பதில் ‘சோசலிசம்தான் அவற்றுக்கு மாற்று’.

உலகின் அனைத்துப் பகுதிகளிலி ருந்தும் தொழிலாளி வர்க்கத்தின் மற்றும் சமூகத்தின் இதர உழைக்கும் மக்கள் அனைவரின், உலக மக்களின் மிகப் பெரும்பான்மையோரின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கம்யூனிஸ்ட், தொழிலாளர் கட்சிகளாகிய நாம், கம்யூ னிஸ்ட் கட்சிகளின் மாற்றப்பட்ட முடி யாத பாத்திரத்தை வலியுறுத்துகிறோம்.

மனித குலத்தின் வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரு மெய்யான மாற்று. அதாவது நமது வருங்காலத்திற்கு சோசலிசம்தான் ஒரே மாற்று என்று பிரகடனப்படுத்துவதற்கான போராட்டங் களை வலுப்படுத்துவதில் எங்களுடன் சேர்ந்து நில்லுங்கள் என்று மக்களை அறைகூவி அழைக்கிறோம்.

Sunday, November 22, 2009

ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உலகளாவிய போராட்டம் - சர்வதேச கம்யூனிஸ்ட் - தொழிலாளர் கட்சிகள் மாநாடு முடிவு



புதுதில்லி, நவ.22-

புதுதில்லியில் நடைபெற்ற 11-வது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் மாநாடு ஞாயிறன்று நிறைவு பெற்றது.

இதையொட்டி வெளி யிடப்பட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளதாவது:-

48 நாடுகளைச் சேர்ந்த 57 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 83 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். “சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, உழைப்பாளர்கள் மற்றும் மக்கள் போராட்டம், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாற்று மற்றும் பங்கு” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்தின.

மாநாட்டின் முத்தாய்ப்பாக நிறைவேற்றப்பட்ட தில்லி பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த சர்வதேச இயக்கத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற வங்கதேச தொழிலாளர் கட்சியின் கோரிக்கையை மாநாடு ஏற்றுள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கட்சியும் இதில் இணைத்துக் கொள்ளப்படும்.

12-வது சர்வதேச மாநாட்டை ஆப்பிரிக்க கண்டத்தில் நடத்துவது என்றும், மாநாட்டை நடத் தும் பொறுப்பை தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஒப்படைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் செயற்குழு கூடி மாநாட்டின் ஆய்வுப் பொருள், தேதி மற்றும் இடம் குறித்த விபரத்தை முடிவு செய்யும்.

அமைதி, இறையாண்மை, ஜனநாயகம், சமூக நீதிக்காக உலகம் முழுவதும் தொழிலாளர்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு இந்த மாநாடு தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

நேட்டோ மற்றும் உலகளாவிய ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், ஏகாதிபத்திய ராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும், பல்வேறு நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஏகாதிபத்திய போர்த் தந்திரங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவது என்று மாநாடு முடிவு செய்துள்ளது.

டமாஸ்கசில் 2009 செப்டம்பரில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுப்படி, நவம்பர் 29-ம்தேதியை பாலஸ்தீன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக அனுஷ்டிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

2010-ம் ஆண்டை பாசிசத்தை முறியடித்த 60-ம் ஆண்டாக அனுஷ்டிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாக்க தொழிற் சங்கங்கள் ஒருங்கிணைந்த முறையில் போராடுவது என்றும், சிறைபிடிக்கப்பட்டுள்ள கியூப குடிமக்கள் 5 பேரை விடுவிக்கக்கோரி சர்வதேச அளவிலான ஆதரவுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்றும், வேலை செய்யும் உரிமையை வலியுறுத்தி இளைஞர் இயக்கங்களோடு சேர்ந்து அந்தந்த நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொழிற் சங்கங்கள் வலிமையாக முன்னெடுத்துச் செல்வது என்றும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

Saturday, November 21, 2009

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள - பொது முதலீட்டை அதிகப்படுத்துக - சீத்தாராம் யெச்சூரி பேட்டி



புதுடில்லி, நவ. 21-

முதலாளித்துவ உலகம் தற்போது எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், கார்பரேட் முதலாளிகளுக்கு பொருளாதார உதவிகளை அள்ளி வழங்குவதற்குப் பதிலாக, அத்தொகையை பொது முதலீட்டில் ஈடுபடுத்தினால், நெருக்கடியும் தீரும் வேலைவாய்ப்பும் அதிகரித்திடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென் குப்தா சனிக்கிழமையன்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாட்டிற்கு 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர்இதுவரை வந்து பங்கேற்றுள்ளனர். இன்று அதிகாலை ஆப்ரிக்கா கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி வந்து சேர்ந்தார். ‘‘சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்னும் ஆய்வுப் பொருளின் மீது பிரதிநிதிகள் விவாதங்கள் நடைபெற்றன. விவாதங்கள் ஞாயிறு காலையும் தொடர்கிறது.

இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு இரு வழிகளில் தீர்வு காண முடியும். முதலாவது வழி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் முதலாளிகளுக்கு தேவையான பொருளாதார உதவிகளை அள்ளிக்கொடுப்பது. இதனைத்தான் உலகம் முழுதும் உள்ள முதலாளித்துவ அரசுகள் செய்துள்ளன. நாம் முன்வைக்கும் மற்றொரு மாற்று வழி என்பது, அத்தகைய பொருளாதார உதவிகள் மூலமாக நெருக்கடிக்குள்ளாகியுள்ள நாடுகளில் பொது முதலீட்டை அதிகரித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பினைப் பெருக்கி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்து, அதன் மூலமாக பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பது. இதற்குக் கொஞ்ச கால அவகாசம் ஆகலாம். ஆயினும் முதலாளிகள் லாபத்தை நேரடியாகவும் உடனடியாகவும் அதீதமாகவும் துய்க்கமுடியாது என்பதால் இதனை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் இந்தத் திசைவழி நோக்கி மக்களை அணிதிரட்ட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இப்போது அமெரிக்க ஏகாதிபத்தியம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்துள்ள கார்பரேட் முதலாளிகளுக்கு 14 டிரில்லியன் டாலர்கள் உதவியினை அளித்துள்ளது. இதனை பொது முதலீட்டில் செலுத்தியிருந்தால் அதன் மூலம் வேலைவாய்ப்புப் பெருகியிருக்கும், மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்திருக்கும், அதன் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முடியும். ஆயினும் முதலாளித்துவ முறை நேரடியாக லாபத்தைத் துய்க்கவே விரும்பும்.
எனவே, மாற்று வழியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். மக்கள் மத்தியில் அவற்றை விளக்கிட வேண்டும். அதன் மூலமாக 3 கோடியே 70 லட்சம் மக்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்கிட முடியும். தற்போது வறுமையிலும் பட்டினியிலும் வாடும் அவர்களை அதிலிருந்து மீட்க முடியும். வேலைவாய்ப்பினை அவர்களுக்கு அளித்திட முடியும்.

எனவே தங்கள் தங்கள்நாடுகளில் இந்தத் திசைவழியில் மக்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி, ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் அளித்திட எத்தகைய உத்திகளை வகுப்பது என்று விவாதிக்கப்பட்டது. விவாதங்கள் நாளை காலையுடன் நிறைவுடையும். அதன்பின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பிரகடனம் இறுதி செய்யப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

மாலையில் மாவலங்கார் அரங்கில் பொது அமர்வு நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி, பல்லவசென் குப்தா கூறினார்கள்.

(ச.வீரமணி)

Friday, November 20, 2009

உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே -சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி - அறைகூவல்





புதுதில்லி, நவ. 20-
உலகப் பொருளாதார நெருக்கடிக்கு மாற்று சோசலிசமே என்றும், மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் அடிப்படையில் தொழிலாளி வர்க்கம் புரட்சிகர தத்துவார்த்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச்செல்ல அணிதிரள வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி அறைகூவல் விடுத்தார்.
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வெள்ளியன்று காலை புதுதில்லியில் உள்ள ராமடா பிளாசா ஓட்டலில் உள்ள ரீகல் அரங்கில் தொடங்கியது. உலகம் முழுதுமிருந்து 48 நாடுகளிலுள்ள 58 கட்சிகளைச் சேர்ந்த 87 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
மாநாடு, புரட்சிகர மற்றும் சர்வதேச கீதம் இசைத்தபின் தொடங்கியது. மாநாட்டிற்கு வந்திருந்த பிரதிநிதிகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய செயற்குழு உறுப்பினர் பல்லவ சென்குப்தா வரவேற்றார். பின்னத் மாநாட்டின் வரைவு பிரகடனத்தை வெளியிட்டு உரையாற்றுகையிலேயே சீத்தாராம் யெச்சூரி இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
‘‘சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாட்டை முதன்முறையாக ஆசியக் கண்டத்தில் நடத்துகிறோம். இம்மாநாட்டின் ஆய்வுப் பொருளாக, மாநாட்டு வழிநடத்தும்குழு, ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்று வரையறுத்திருக்கிறது. இன்றைய உலக நிலைமையில் இது மிகவும் சரியான கருப்பொருளாகும்.
இன்றையதினம் ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடி என்பது ஒரு சில முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் கூறுவதுபோல், ‘ஒருசிலரின் பேராசையின் விளைவாக ஏற்பட்டதல்ல’, மாறாக இப்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடி என்பது மார்க்ஸ் குறிப்பிட்டதைப்போல, ‘‘மனிதசமுதாயத்தைச் சுரண்டுவதையே அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்புமுறையில் முடிவு அப்படித்தான் அமைந்திடும்’’. இப்போது அதற்கு ஏற்பட்டிருக்கிற மரண அடியிலிருந்து எவரும் அதனைக் காப்பாற்றிட முடியாது. உலகின் பல நாடுகளில் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள் அதனைக் காப்பாற்றிட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அவற்றால் அது சவக்குழிக்குச் செல்வதை ஒரு சில நாட்களுக்குத் தள்ளிப்போட முடியுமே தவிர, நிச்சயமாக அதனைத் தடுத்து நிறுத்திட முடியாது.
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தகர்ந்த நிகழ்வுகளானது உலக சோசலிச சக்திகளுக்கு ஒரு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை அடுத்து ஏகாதிபத்தியம் கடந்த இருபதாண்டுகளில் உலகை ஆளும் தன் மேலாதிக்க நடவடிக்கைகளை ஒருமுகப்படுத்தி, தன் ஆதிக்கத்தை உலகம் முழுதும் செலுத்தியது. ஆயினும் அதனால் அது விரும்பிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. உலகில் பல நாடுகளில் ஏகாதிபத்தியத்திற்கெதிராக வளர்ந்து வந்த எதிர்ப்பு இயக்கங்கள், அதனை வேகமாக முன்னேற விடவில்லை.
லெனின், ஏகாதிபத்தியத்தை, ‘‘சோசலிசப் புரட்சிக்கு முந்தைய நிலையில் உள்ள’’ முதலாளித்துவத்தின் இறுதி மற்றும் உச்சகட்டம் என்று வரையறுத்தார். முதலாளித்துவம் நிர்மூலமாகிவிடும் என்றும் சோசலிசம் மலர்ந்துவிடும் என்றும் இதனைப் பலர் இயந்திரரீதியாக எடுத்துக்கொண்டனர். ஏகாதிபத்தியத்தை வீழ்த்திட பல கட்டங்கள் வரலாற்று ரீதியாக உண்டு. அதற்கு சோசலிச ஒழுங்கு வளர்ந்தாக வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில், ஏகாதிபத்தியமும் உலக முதலாளித்துவமும், பிரம்மாண்டமான முறையில் மூலதனக்குவிப்பினை ஏற்படுத்துவதன் மூலம் உச்சபட்ச லாபத்தை எட்டிட முயன்றுகொண்டிருக்கின்றன. இது சர்வதேச நிதி மூலதனத்திற்கு இட்டுச் சென்றது. சர்வதேச நிதிமூலதனம் நவீன தாராளமயக் கொள்கையை வரையறுத்தது. முதலில் இது நாடுகளுக்கிடையேயிருந்த தடைகளை நீக்கியது. இத்தகைய வர்த்தக தாராளமயம், நாடுகளுக்குள் செயல்பட்டு வந்த உள்ளூர் உற்பத்தியாளர்களையும், சிறிய அளவில் நாட்டிற்குள் மட்டுமிருந்த தொழில்களை ஒழித்துக்கட்டியது. இவ்வாறு மூலதனம் தாராளமாக உலகம் முழுதும் சென்றதானது, பன்னாட்டு நிறுவனங்களை பல நாடுகளிலும் உற்பத்திச் சொத்துக்களைப் பெற்று, மூலதனக் குவிப்பைப் பல்மடங்கு பெருக்கியது.
அடுத்ததாக, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் மூலமாக அனைத்து நாடுகளுக்கும் கடன்களை வழங்கி, உலகையே ஏகாதிபத்தியத்தின் வலைக்குள் சிக்க வைத்திருக்கிறது.
மூலதனத்தின் வரலாற்றின் நெடுகிலும் அத மூலதனக் குவிப்பை இரு வழிகளில் மேற்கொண்டு வந்திருக்கிறது. முதலாவதாக, அபரிமிதமான உற்பத்தி மூலமாக மூலதன விரிவாக்கம். இரண்டாவதாக, பலாத்காரம் மூலமாக. இதன் கொடூரத்தன்மையை மார்க்ஸ் மூலதனத்தின் ஆரம்பநிலையிலான குவிப்பு என்று வரையறுக்கிறார்.
உலகமயத்தின் காரணமாக, பெரும் பகுதி மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சியடைந்ததன் விளைவாக, நிதி மூலதனம் விரைவாக லாபத்தை எட்ட வேண்டும் என்பதற்காக, தவணைமுறையில் அதிகமான நபர்களுக்கு கடன்கள் அளிக்க முன்வந்தது. ஆயினும் கடனைப் பெற்றவர்களால் நிர்ணயிக்கப்பட்ட தேதிகளுக்குள் கடன்களை மீள செலுத்த முடியாது, கடனாளிகள் மிகவும் இடிந்துபோனதானது, இந்த முதலாளித்துவ முறையையும் முடமாக்கியுள்ளது. இதுவே இப்போது மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது.
சரியானமுறையில் ஒரு வலுவான அரசியல் மாற்று உலக அளவில் இல்லாத நிலையில், முதலாளித்துவம் தனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து மீண்டுவிடும். ஆனாலும் அதற்காக அது மக்களை மேலும் கடுமையான முறையில் சுரண்டலுக்குள்ளாக்கும். மக்களின் உடைமைகளை மேலும் வலுக்கட்டாயமாக பறித்திட முயலும்.
ஏகாதிபத்தியம், தன்னுடைய தகவல் - தொலைத்தொடர்பு - கலைநிகழ்ச்சிகளைப் பரப்பிடம் கார்பரேட் ஊடகங்களால் முதலாளித்துவத்திற்கு மாற்றைக் கூறிடும், நமக்கு எதிராக வலுவான முறையில் தத்தவார்த்த தாக்குதலைத் தொடுத்துள்ளன. உலகமயத்தின் கலாச்சாரம் என்பது மக்களைத் தங்களுடைய அன்றாடப் பிரச்சனைகள் குறித்தும் அதன் காரணங்கள் குறித்தும் அறிந்து கொள்ளாமல் வைத்திருப்பதேயாகும். இவர்களது கண்ணோட்டத்தில் கலாச்சாரம் என்பது மக்களை, தங்களுடைய வறுமை மற்றும் துன்ப துயரங்களுக்கான காரணங்களை அறிய முடியாமல் செய்து, திசை திருப்புவதேயாகும்.
சமீபத்தில் உலகம் முழுதும் நடைபெற்றுவரும் தொழிலாளர்வர்க்கத்தின் போராட்டங்கள் என்பதை அநேகமாகத் தாங்கள் பெற்ற உரிமைகளைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத்தான் நடைபெற்றிருக்கின்றன.
ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்கத்தை வலுப்படுத்திக்கொண்டிருந்த போதிலும், அது உலகைப் பல்வேறு முனைகளில் தாக்கியபோதிலும், அது முதலாளித்துவ அமைப்புமுறையின் நெருக்கடியில் சிக்கி அதன் விளிம்புநிலைக்கு வந்துவிட்டது. இப்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தைவிட மேலும் கடுமையான முறையில் அது நெருக்கடியை எதிர்கொள்ள இருக்கிறது.
இவ்வாறு நாம் சொல்வதனால், முதலாளித்துவம் தானாகவே நிர்மூலமாகிவிடும் என்று பொருளல்ல. அது தூக்கியெறியப்பட்டாக வேண்டும். இதற்கு மார்க்சிச லெனினிசத்தில் நம்பிக்கை கொண்டுள்ள கட்சிகளின் தலைமையில் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர் வர்க்கம் புரட்சிகர சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அணிதிரள வேண்டும்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
(ந.நி.)

Wednesday, November 18, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு



புதுடில்லி, நவ. 18-

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு புதுடில்லியில் வெள்ளியன்று காலை தொடங்குகிறது. 47 நாடுகளிலிருந்து 55 கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் இம்மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இது தொடர்பாக புதுடில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு அலுவலகம் இயங்கும் ஏ.கே.கோபாலன் பவனில் செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி, மத்திய செயற்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் தேசியக்குழு உறுப்பினர்கள் டி.ராஜா மற்றும் பல்லப் சென் குப்தா ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன. இம்மாநாட்டில் 47 நாடுகளிலிருந்து 55 கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த 87 பேர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர். அவர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் பிரகாஷ்காரத் மற்றும் ஏ.பி.பரதன் ஆகியோரும் அடங்குவர்.

11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள் ‘‘ சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு’’ என்பதாகும்.

மாநாட்டில் சீனா, ரஷ்யா, வியட்நாம், கியுபா, உக்ரேன், லெபனான், ஸ்வீடன், பாலஸ்தீனம், லக்சம்பர்க், ஸ்பெயின், ஈராக், பின்லாந்து, பிரேசில், டென்மார்க், பாகிஸ்தான், ஹங்கேரி, இங்கிலாந்து, செக்கோஸ்லேவேகியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், சிரியா, அமெரிக்கா, நார்வே, பிரான்ஸ், கனடா, வடகொரியா, அயர்லாந்து, சிரியா, போர்த்துக்கல், லாட்வியா, ஜெர்மனி, இத்தாலி, கயானா, யுகோஸ்லேவியா, ஈரான், கிரீஸ், இலங்கை, வங்கதேசம், சைப்ரஸ், பெரு, டென்மார்க், மெக்சிகோ, துருக்கி, இஸ்ரேல், கிர்கிஸ்தான், நேபாளம், தென் ஆப்ரிக்கா, அர்ஜன்டினா ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவில் மாநாட்டில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, பிமன் பாசு, மாணிக் சர்க்கார், எம்.கே. பாந்தே மற்றும் கேரள முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் ஆகிய ஐந்து பிரதிநிதிகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிலிருந்து டி.ராஜா, எஸ். சுதாகர்ரெட்டி, பல்லப் சென் குப்தா, சி.திவாகரன் மற்றும் குருதாஸ் தாஸ் குப்தா ஆகியோர் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

மாநாடு வெள்ளியன்று காலை 11 மணியளவில் தொடங்குகிறது. மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்படுகிறது. ஆய்வுப் பொருள் தொடர்பான வரைவு பிரகடனத்தை சீத்தாராம் யெச்சூரி முன்மொழிகிறார். அதன் பேரில் பிரதிநிதிகள் விவாதம் நடைபெறுகிறது. காலையில் பொது அமர்வுக்கு பத்திரிகையாளர் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாலை அமர்வும் 21ஆம் தேதி அமர்வுகளும் 22ஆம் தேதி காலை அமர்வும் பிரதிநிதிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. 22ஆம் தேதி மாலை 5 மணிக்கு பொது அமர்வு புதுதில்லி, மாவலங்கார் அரங்கில் நடைபெறுகிறது. அங்கு மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சில உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும் உரையாற்றுகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். தற்போதுள்ள உலகப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு என்ன என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, மாநாடு அதுகுறித்து விவாதித்து 22ஆம் தேதி உங்களுக்குத் தெளிவுபடுத்தும் என்று சீத்தாராம் கூறினார்.

இடதுசாரிக் கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கின்றனவா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, நடைபெறும் மாநாடு உலகம் முழுதும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு என்பதால் இந்தியாவில் உள்ள இடதுசாரிக் கட்சிகளை அழைக்கவில்லை, ஆயினும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோசலிஸ்ட் கட்சித் தலைவர்கள் 22ஆம் தேதி மாலை பொது அமர்வில் கலந்து கொள்கிறார்கள் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

(ச.வீரமணி)

Monday, November 16, 2009

ஊழலுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு - கே. வரதராசன் பேட்டி



புதுதில்லி, நவ. 16-
போபோர்ஸ் ஊழலைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல், நீதிபதி தினகரன் ஊழல் என்று ஊழல்களுக்குத் துணைபோகும் ஐமுகூ அரசு குறித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும்போது நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் கூறினார்.

தலைநகர் தில்லியில் திங்கள்அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன் ஜெயா டிவி செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அனைத்து அத்தியவாசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. விலைவாசியைக் கட்டுப்படுத்திட அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ள வில்லை. இதனைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.

ஐமுகூ அரசாங்கமானது ஆசியன் நாடுகளுடன் செய்துகொண்டுள்ள சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், கேரளா விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள், ஆந்திரா விவசாயிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வாழும் மீனவர்களுக்குக் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒப்பந்தமாகும். இதுபோன்று விவசாயிகளைப் பாதிக்கிற, சாதாரண மக்களைப் பாதிக்கிற, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயக விரோத செயலாகும். இதனை நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.
அதேபோன்று மக்களைக் கடுமையானப் பாதிப்புக்கு ஆளாக்கக்கூடிய மரபணு மாற்றம் செய்து கத்தரிக்காய் மற்றும் பல்வேறு பயிர்களைப் பயிரிட சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கே தெரியாமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிறுவனங்களுக்கு அனுமதி தந்திருக்கிறது. இது கடும் பிரச்சனைகளை உருவாக்கி உள்ளது. இதனையும் நாடாளுமன்றத்தில் எழுப்ப இருக்கிறோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐமுகூ அரசாங்கமானது போபோர்ஸ் ஊழல் தொடர்பான விசாரணைகளைக் கைகழுவி விட்டது. அதேபோன்று தொலைத் தகவல் தொடர்புத் துறையில் நடைபெற்றுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறை தொலைத் தகவல் தொடர்புத்துறை அலுவலகங்களில் சோதனை செய்துள்ள போதிலும், அதன் அமைச்சர் ஆ. ராசா அவர்கள் இன்னமும் அதே துறையில் அமைச்சராக நீடிப்பதற்குத் தார்மீக ரீதியாகவும் உரிமை இல்லை, சட்டரீதியாகவும் உரிமை இல்லை. ஆயினும் அது தொடர்பாக பிரதமர் அவர்கள் தன் விளக்கத்தை அளித்திட வேண்டும். அமைச்சர் ஆ.ராசா ராஜினாமா செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிட உள்ளோம்.
அதேபோன்று, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன், சுமார் 200 ஏக்கருக்கு மேல் அரசு நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளார். இதனை வெளிக்கொண்டுவந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும், அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பிலும் இயக்கங்களை நடத்தி வருகிறோம். மத்திய மாநில அரசுகள் இந்த நீதிபதிக்குத் துணைபோகும் விதத்தில் நடத்துகொண்டு வருகின்றன. தமிழக அரசு, இது தொடர்பாக பேச்சு வார்த்தைக்குச் சென்ற எங்கள் கட்சித் தலைவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. அல் உமா, மாவோயிஸ்ட் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கூட பேச்சுவார்த்தையின் போது கைது செய்யப்பட்டதில்லை. ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தைக்குச் சென்றவர்களைக் கைது செய்து சரித்திரம் படைத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் இயக்கம் நடைபெற்ற சமயத்தில் ஆறாயிரம் காவல்துறையினர், ஒரு ஐ.ஜி,. 3 டி.ஐ.ஜி. என்று அனுப்பி தமிழகத்தில் போலீஸ் ராஜ்யம் நடப்பதைப்போன்ற ஒரு சித்திரத்தை தமிழக அரசு மேற்கொண்டது. ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒரு நீதிபதிக்கு அரசு ஏன் இவ்வாறு துணை போகிறது என்று தெரியவில்லை.

இப்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை உச்சநீதிமன்ற நீதிபதிப் பொறுப்புக்குப் பரிசீலிப்பது என்பதும், உயர்நீதிமன்ற நீதிபதியாக நீடிப்பது என்பதும். பெரும் கேள்விகளுக்குரிய பிரச்சனைகளாகும்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளைத் தேர்வு செய்கிற குழு வெறுமனே சில நீதிபதிகளைக் கொண்டதாக இருக்கக்கூடாது என்றும் பலதரப்பினரும் கொண்ட குழுவாக அது மாற்றப்பட்டு அக்குழு உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கக்கூடிய வகையில் மாற்றப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி வந்திருக்கிறோம். இதனை மீண்டும் வலுவாக எழுப்பிட இருக்கிறோம்.

இவ்வாறு கே. வரதராசன் கூறினார்.

(ச.வீரமணி)

Sunday, November 15, 2009

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடு-20ஆம் தேதி தொடங்குகிறது: சீத்தராம் யெச்சூரி பேட்டி





புதுடில்லி, நவ. 15-
சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலார் கட்சிகளின் மாநாடு வரும் நவம்பர் 20, 22, 22 தேதிகளில் நடைபெறுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

இம்மாநாடு தொடர்பாக ஞாயிறு அன்று கட்சி செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 11ஆவது மாநாடு வரும் 2009 நவம்பர் 20 - 22 தேதிகளில் புதுடில்லியில் நடைபெறுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இம் மாநாட்டை நடத்துகின்றன.
1993களில் சோவியத் யூனியன் தகர்வுக்குப் பின்னர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சர்வதேச கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. மார்க்சிசம் - லெனினிசம் இன்றைக்கும் பொருந்தக்கூடியதே என்பதில் நம்பிக்கை யுள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கருத்தரங்கத்திற்கு கட்சி அழைத்தது, இதனைஅடுத்து கட்சியின் 14ஆவது அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது, சோவியத் யூனியனிலும் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அரசுகள் வீழ்ந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தது. மாநாட்டின் முடிவில் இரு முக்கிய அடிப்படை அம்சங்கள் குறித்து மறுபடியும் உத்தரவாதமான முடிவினை மேற்கொண்டது. அதாவது, சோவியத் யூனியன் சோசலிசத்தைக் கைவிட்டதால், மார்க்சிசம் - லெனினிசமும் சோசலிச சிந்தனைகளும் தவறாகிவிடாது, மாறாக அந்நாடுகள் மார்க்சிசம் - லெனினிசத்தின் புரட்சிகர சாராம்சத்தையும், சோசலிச சிந்தனைகளையும் கைவிட்டதே காரணம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்தது.

எனவே மார்க்சிச-லெனினிசம் மற்றும் சோசலிசத்தின் சாதனைகள் மீது நம்பிக்கை கொண்ட கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டோம். நாம் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட 30 நாடுகளில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம். அவற்றில் 25 கட்சிகள் கலந்து கொண்டன. ஐந்து கட்சிகள் கலந்துகொள்ள முடியாத தங்கள் இயலாமையைத் தெரிவித்திருந்தன.

அந்தக் கருத்தரங்கில் இத்தகையதொரு கூட்டத்தை தொடர்ந்து நடத்திடுவது என்றும் உலகில் உள்ள அனைத்துக் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அக்கூட்டங்களுக்கு அழைப்பது என்றும் அப்போது தீர்மானிக்கப்பட்டது.

அதனை அடுத்து ஐந்து ஆண்டுகள் கழித்து சர்வதேச மாநாடுகளை நடத்துவதற்காக ஒரு செயலாற்றும் குழு (working group) அமைக்கப்பட்டது. அதில் கியுபா, பிரேசில், ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ், லெபனான், தென் ஆப்ரிக்கா, ரஷ்யா, செக்கோஸ்லேவேகியா மற்றும் நம் கட்சி ஆகியவை அதில் அங்கம் வகித்தன. 1998ல் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியானது சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் மாநாடுகளை நடத்துவதற்கான முயற்சிகளில் இறங்கியது. அதன் அடிப்படையில் முதல் ஏழு மாநாடுகளை கிரீஸில் ஏதன்ஸ் நகரில் நடத்தியது. இம்மாநாடுகளில் கலந்து கொள்ளும் கட்சிகளின் பங்கேற்பது என்பது ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வந்தது.

நாம் இம்மாநாட்டினை உலகின் பல பகுதிகளிலும் நடத்திட வேண்டும் என்று பரிந்துரைத்தோம். அதன் அடிப்படையில் அதன்பின்னர் இம்மாநாடு வெவ்வேறு நாடுகளில் நடைபெற்றது. அதன் அடிப்படையில் எட்டாவது மாநாடு போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனிலும், ஒன்பதாவது மாநாடு பெலாரஸ், மின்ஸ்க்கிலும், பத்தாவது மாநாட பிரேசில், சாவோ பாலோவிலும் நடத்தப்பட்டன. 11வது மாநாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து இந்தியாவில் நடத்துகின்றன.12ஆவது மாநாடு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கிறது. அதன் மூலம் அனைத்துக் கண்டங்களிலும் இம்மாநாடு நடைபெற்று முடிந்துவிடுகிறது.

ஒவ்வொரு மாநாட்டின்போதும் ஒரு சில ஆய்வுப்பொருள்களின் அடிப்படையில் மாநாட்டை நடத்தி வருகிறோம். இப்போது நாம் நடத்தவிருக்கும் 11வது மாநாட்டின் ஆய்வுப் பொருள்களாக, சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, தொழிலாளர் மற்றும் மக்கள்திரளின் போராட்டம், மாற்றுக் கொள்கை, கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் பங்கு என்பனவற்றை எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

செயலாற்றும் குழுவின் முடிவின்படி மாநாட்டிற்கு 87 நாடுகளிலுள்ள 111 கட்சிகளை அழைத்திட முடிவு செய்து அழைப்பிதழ்கள் அனுப்பியிருக்கிறோம். இவற்றில்இதுவரை 43 நாடுகளிலிருந்து 53 கட்சிகள் தங்கள் ஒப்புதலை தெரிவித்துள்ளன. அடுத்த சில நாட்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்திடும்.

மாநாட்டின் அடிப்படை நிகழ்ச்சிநிரல் குறித்து சொல்ல வேண்டுமானால், மாநாட்டில் ஒரு வரைவு தீர்மானம் ஆரம்பத்தில் முன்மொழியப்படும். அதனைத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று அது இறுதி செய்யப்படும். விவாதங்களில் கலந்துகொண்டுள்ள நாடுகள் ஆங்கில அகரவரிசையில் பங்கேற்றிடும்.

மாநாட்டை நாமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து நடத்துவதால், மாநாட்டின் தொடக்க நாள் அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரவேற்புரை அளிக்கப்படவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் வரைவு தீர்மானத்தை முன்மொழிகிறேன்.

மாநாட்டில் மூன்று நாட்களும் மொத்தம் ஐந்து அமர்வுகள் நடைபெறவுள்ளன. மாநாட்டின் இறுதிநாளன்று மாலை 5 மணிக்கு மாவலங்கார் அரங்கில் பொது மாநாடு நடைபெறும். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர்களும் மற்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து சிலரும் உரை நிகழ்த்துகிறார்கள்.

சீனம், கியுபா, வியட்நாம், கொரியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டின் முதல் நாளன்று முதல் அமர்விற்கும் இறுதி நாளன்று மாலை நடைபெறவிருக்கும் பொது அமர்விற்கும் அனைத்துப் பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள். மற்ற அமர்வுகள் குறித்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பத்திரிகையாளர் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Friday, November 13, 2009

பெர்லின் சுவர் தகர்ப்பு: நெருக்கடியின் பாதிப்புகளை மறைத்திட கோலாகலக் கொண்டாட்டங்கள்



வெற்றி வீரர்களே எப்போதும் வரலாற்றை எழுதுகிறார்கள். வரலாற்றாசிரியர்கள் மிகவும் தாமதமாகத்தான் போராட்டங்களின்போது அவற்றில் சிக்கிக்கொண்ட மக்களின் துன்ப துயரங்கள் பற்றி ஆவணப்படுத்துகிறார்கள். இது பெர்லின் சுவர் அகற்றப்பட்ட 20ஆம் ஆண்டு தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இப்போதும் நன்கு புலப்படுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பெர்லின் இரண்டாகப் பிரிவதற்கான உண்மையான வரலாற்றை இருட்டடிப்புச் செய்திடுவதற்காக, இத்தகைய ஆரவார நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

பாசிசம் தோற்கடிக்கப்பட்ட நிகழ்வினை அடையாளப்படுத்தும் வண்ணம் ஹிட்லரின் ரெய்ச்ஸ்டாக் கட்டிடத்தின் உச்சியில் செங்கொடி ஏற்றப்பட்டது. அமெரிக்கா, பிரான்ஸ் அல்லது பிரிட்டனின் கொடி எதுவும் ஏற்றப்படவில்லை.

யுத்தம் முடிவுற்றபின்னர், பெர்லின் நகரை நான்கு நேச நாடுகளும் (யடடநைன யீடிறநசள) கூட்டாக நிர்வகிக்கத் தீர்மானித்தன. கிழக்கு பெர்லின் சோவியத் செம்படையின் நிர்வாகத்தின்கீழ் இருந்த அதேசமயத்தில், மேற்கு பெர்லின் நகரானது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கூட்டு நிர்வாகத்தின் கீழ் இருந்தது. பெர்லினை கூட்டாக நிர்வகித்திடலாம் என்று சோவியத் யூனியன் சார்பில் விடுக்கப்பட்ட அனைத்து வேண்டுகோள்களையும் மேற்கத்திய நாடுகள் நிராகரித்துவிட்டன. ஏனெனில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சோசலிச ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு பெர்லின் நகரையே முழுமையாக ஈர்த்துவிடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். பல ஆண்டுகள் பெர்லின் நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, மேற்கு பெர்லின் தனியே தனித்துவத்துடன் இருந்து வந்தது. இப்பகுதியை மேற்கத்திய ஆட்சியாளர்கள் சோசலிசத்திற்கு எதிரான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கான பனிப்போரின் நீரூற்றாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் சோசலிசத்தின் மீது மக்களுக்கிருந்த செல்வாக்கை சீர்குலைத்திட அவை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து பதினாறு ஆண்டுகள் கழித்து, 1961 ஆகஸ்ட்டில்தான், வார்சா ஒப்பந்த நாடுகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பெர்லின் சுவரை எழுப்பிடத் தீர்மானித்தன. ஆனால் பெர்லின் பிரிக்கப்பட்டு சுவர் எழுப்பப்படுவதற்கு சோசலிசமும் சோவியத் யூனியனும்தான் காரணம் என்கிற முறையில் இப்போது வரலாறு திரிக்கப்பட்டு கூறப்படுகிறது.

நிச்சயமாக எதிர்காலத்தில் உண்மை வரலாற்றை மக்கள் தெரிந்துகொள்வார்கள். ஆயினும், ஏகாதிபத்தியத்திற்குத் தன்னுடைய பங்குச்சந்தை (றுயடட ளுவசநநவ) நிலைகுலைந்து வீழ்ந்தகொண்டிருக்கக்கூடிய இன்றைய நிலையில், இவ்வாறு பெர்லின் சுவர் தொடர்பாக வரலாற்றைத் திரித்துக்கூற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தை வீழ்ச்சி என்பது எந்தவிதமான வெளியார் தாக்குதலாலும் ஏற்படவில்லை. முதலாளித்துவத்தின் உள்ளீடான மாற்றங்களே ஏகாதிபத்தியத்தின் உலகமயத்தில் இத்தகைய நெருக்கடியைக் கொண்டுவந்திருக்கின்றன. இன்றைய உலக முதலாளித்துவ நெருக்கடியின் குணம் குறித்த இப்பகுதியில் ஏற்கனவே நாம் பல முறை ஆய்வு செய்திருக்கிறோம். எனவே இப்போது அதனை மீண்டும் கூறவேண்டிய தேவையில்லை.

உலகில் உள்ள பெரும்பான்மை மக்களைப் பொறுத்தவரை, தங்களுடைய வாழ்வில் மிகக் கொடூரமான முறையில் தாக்குதலைத் தொடுத்திட்ட ஏகாதிபத்திய பங்குச்சந்தைதான் (wall street) நிலைகுலைந்துள்ளது. இந்த ஆண்டு, தற்போதைய உலக முதலாளித்துவ மந்தம் தொடங்கியதிலிருந்து, உலக அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சியடைந்திருப்பது மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போருக்குப்பின் முதன்முறையாக, மிக அதிக எண்ணிக்கையிலான மக்கள் பசிக்கும் பட்டினிக்கும் தள்ளப்பட்டு, ஆதரவற்றவர்களாகி இருக்கிறார்கள். பசியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 102 கோடியைத் தாண்டியுள்ளது. அதாவது உலகில் வாழும் மக்களில் ஆறில் ஒருவர் பசியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறார். உலகப் பொருளாதார மந்தம் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மட்டும், பசியால் வாடும் பட்டியலில் 10 கோடியே 30 லட்சம் மக்கள் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இப்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து தன்னை மீண்டும் எழுந்து நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஒரு தூண்டுகோலாகவே பெர்லின் சுவர் தகர்வு தொடர்பான கோலாகலக் கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள ஏகாதிபத்தியம் முயற்சிக்கிறது. இப்போதைய உலக பொருளாதார நெருக்கடிக்கு எந்த கார்பரேட் நிறுவனங்கள் காரணமாக இருந்தனவோ அவற்றுக்கே மிகப்பெரிய அளவில் கோடிக்கணக்கான டாலர்கள் உதவிகளை அளிப்பதன் மூலம், அவற்றின் இருப்பு நிலைக் குறிப்பையும், லாபத்தையும் நல்லமுறையில் வைத்திட முன்வந்திருக்கிறது. ஆனால் இந்நெருக்கடியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள சாமானிய மக்களின் வாழ்க்கையைப் பற்றி அது கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. முதலாளித்துவத்தின் வர்க்கக் குணத்தைத் தெரிந்து கொண்டுள்ளவர்களுக்கு இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

உலக அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஸ்தாபனம் (OECD) வெளியிட்டுள்ளஅறிக்கையின்படி இந்தக் காலகட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் மக்கள் வேலையில்லாப் பட்டாளத்தில் இணைந் திருக்கிறார்கள். அமெரிக்காவில் வேலையில்லாதோரின் விகிதம் அதிகாரபூர்வ அறிக்கையின்படியே இரண்டு இலக்கத்தை - அதாவது 10.2 சதவீதத்தை - தொட்டிருக்கிறது. அதிகாரபூர்வமற்ற அறிக்கைகள் இதனை 20 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் என்று மதிப்பிடுகின்றன. அமெரிக்காவில் வறுமை விகிதம் 13.2 சதவீதமாகும். இதன்பொருள் சுமார் 4 கோடி மக்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதாகும். அதேசமயம் மறுபக்கத்தில், உலகப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அரசாங்கத்தால் தரப்பட்ட அதீதமான நிதி உதவியின் காரணமாக, கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் ஜேபி மார்கன் சேஸ் என்னும் இரு பெரிய வங்கிகள் அபரிமிதமான லாபம் ஈட்டியிருப்பதாகப் பிரகடனம் செய்து, தன் நிர்வாகிகளுக்கு கோடிக்கணக்கான டாலர் போனஸ் அளித்து அதனைக் கொண்டாடி யிருக்கிறது. முதலாளித்துவம் எப்படி இயங்கும் என்பதற்கு இது ஒரு சரியான உதாரணமாகும். ‘மக்கள் எக்கேடுகெட்டால் என்ன எனக்கு வேண்டியது லாபம்’ என்பதே அதன் குறிக்கோளாகும்.

எனவே, பெர்லின் சுவர் தகர்வை கோலாகலமாகக் கொண்டாட ஏகாதிபத்தியமும் முதலாளித்துவமும் என்னதான் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், அதனால் உலகம் முழுதுமுள்ள பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிட முடியாது. மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காக ஏகாதிபத்தியம் மேற்கொள்ளும் இத்தகைய நடவடிக்கைகளின் உண்மை சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டக்கூடிய வகையில் வெகுஜன இயக்கங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

(தமிழில்: ச.வீரமணி)

Saturday, November 7, 2009

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையையே ஏற்காத மாவோயிஸ்ட்டுகள்:பிரகாஷ்காரத்




புதுதில்லி, நவ. 07-

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையையே ஏற்காதவர்கள் மாவோயிஸ்ட்டுகள் என்றும்,அவர்களது உலகக் கண்ணோட்டம் காலாவதியாகிப்போன ஒன்று என்றும் அவர்களின் தாக்குதலை எதிர்த்து முன்னேறுவோம் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ்காரத் கூறினார்.

தலைநகர் புதுதில்லியில் மேற்கு வங்க கலாச்சார மையத்தில் உள்ள முக்ததாரா அரங்கத்தில் ‘‘இடதுசாரிகளின் பார்வையில்’’ (Left view) என்னும் அமைப்பின் கீழ் ‘‘இந்தியாவில் இன்றைய நிலையில் மாவோயிஸ்ட்டுகளின் பங்கு’’ என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. தில்லி அறிவியல் இயக்கத்தின் தலைவர் பிரபீர் புர்கயஸ்தா தலைமை வகித்தார். ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் ஜெயதி கோஷ் உரையாற்றியபின் நிறைவுரையாற்றுகையில் பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது:

‘‘நக்சலைட் இயக்கம் என்று எல்லோராலும் அழைக்கப்படுகின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி 1960இல் இந்தியாவில் தோன்றியது. இந்திய அரசைத் தூக்கி எறிவதற்காகவும், மக்களை நிலவுடைமை நுகத்தடியிலிருந்தும், ஏகாதிபத்திய சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவதற்குத் மக்களைத் திரட்டுவதற்காக உருவான ஒரே மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் இயக்கம் இது என்று கூறப்பட்டது. அவ்வாறு தோன்றி 40 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆயினும் அதனால் நாட்டின் எந்தப் பகுதியிலும் மக்களைத் திரட்ட முடியவில்லை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியிலும் இடது குழுவாதிகளால் (Left sectarians), அதிதீவிரவாதிகளால் (Ultra-Left) ஆட்சி அமைக்கப்பட்டதாக வரலாறில்லை. உலகில் பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடிக்க முயற்சித்தது. ஆயினும் இன்று ஐயாயிரத்திற்கும் குறைவான அளவில் அதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்துள்ளது. நேபாளத்தில் இயங்கி வந்த மாவோயிஸ்ட்டுகள் நம்முடன் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்கள். ஜனநாயகப் பாதைக்குத் திரும்புங்கள் என்று அறிவுறுத்தினோம். அவர்களும் நம் அறிவுரையைக் கேட்டு, ஜனநாயகப் பாதைக்குத் திரும்பினார்கள், மகத்தான அளவில் வெற்றியும் பெற்றார்கள்.
நக்சலைட்டுகள் தங்கள் சித்தாந்தத்தை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியானது இடது குழுவாதிகளின்/அதிதீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த காலத்தில் கடைப்பிடித்த சித்தாந்தத்தைப் பின்பற்றினார்கள். ஆனால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அந்த சிந்தாந்தத்தைக் கைவிட்டுவிட்ட போதிலும், இவர்கள் இன்னும் அதனைக் கைவிடவில்லை.
மாவோயிஸ்ட்டுகளை பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். ஒருவகையில் அது சரி என்ற போதிலும், அவர்களை லஸ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் ஒப்பிடத் தேவையில்லை.

மாவோயிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டம் என்ன? அவர்கள் உலக நிலைமைகள்குறித்தெல்லாம் எதுவும் கூறுவதாகத் தெரியவில்லை.
தெற்காசியா புரட்சியின் விளிம்பில் இருப்பதாக அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே தெற்காசியாவில் தேசிய விடுதலை இயக்கங்கள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? பாகிஸ்தான் அமெரிக்காவின் தொங்கு சதையாக இருக்கிறது என்பதை அனைவரும் அறிவோம். அமெரிக்காவின் உதவி இல்லாமல் ஒரு நாள் கூட அதனால் நீடிக்க முடியாது. இப்போது இந்தியாவும் அமெரிக்காவின் மிகப்பெரிய நட்பு நாடாக மாறியிருக்கிறது. வங்க தேசம், இலங்கை நிலைமைகள் சொல்லத் தேவையில்லை. ஆப்கானிஸ்தானத்தில் ஏகாதிபத்தியமும், ‘ நேட்டோ’ படையினரும் யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய தெற்காசியா.

மாவோயிஸ்ட்டுகள், எல்டிடிஇ-இனரை தேசிய விடுதலை இயக்கமாக பார்த்தார்கள். எனவேதான் அவர்களின் தோல்வி மாவோயிஸ்டுகளை நிலைகுலைய வைத்துள்ளது.
எல்டிடிஇ இயக்கமானது மிகவும் திட்டமிட்டமுறையில் இலங்கையில் தங்கள் பகுதியிலிருந்த அனைத்து ஜனநாயக மற்றும் இடதுசாரி எண்ணங்கொண்டோரையும், இயக்கங்களையும் அழித்து ஒழித்தது. தாங்கள் வலுவாக இருந்த தமிழ்பேசும் மக்கள் பகுதியில் எதேச்சாதிகார ராணுவ அமைப்பினை ஏற்படுத்தியிருந்தது. இப்போது அவர்களது தோல்வியடைந்ததை அடுத்து, அப்பகுதியில் மீண்டும் ஜனநாயக மற்றும் இடதுசாரி இயக்கங்கள் துளிர்விடத் துவங்கியிருக்கின்றன.

மாவோயிஸ்ட்டுகளின் உலகக் கண்ணோட்டம் மிகவும் காலாவதியானதும், உருச்சிதைந்ததுமாகும். எனவே இதன் அடிப்படையில் அவர்களால் எந்தவிதமான முடிவுக்கு வர முடியும்?

இந்தியாவைப் பொறுத்தவரை, அவர்கள் 1960களில் தங்கள் கட்சியை ஆரம்பித்தபோது இந்திய ஆளும் வர்க்கமானது ‘தரகுமுதலாளிகள்’ என்ற கொண்டிருந்த அதே கண்ணோட்டத்தைத்தான் இன்றைக்கும் கொண்டிருக்கிறது. இந்தியா ஒரு அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ நாடு என்கிறார்கள். ஆனால் உண்மை நிலை என்ன? இந்தியாவில் இன்றைய தினம் வலுவான பெருமுதலாளிகளைக் கொண்ட ஒரு நாடாக வளர்ந்திருக்கிறது.
மாவோயிஸ்ட்டுகளைப் பொறுத்தவரை, அவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் பாத்திரத்தைப்பற்றி எதுவுமே கூறவில்லை. அவர்கள் விவசாயிகளை அணிதிரட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆனாலும் வலுவான விவசாய இயக்கத்தைக் கூட அவர்களால் எந்தப் பகுதியிலும் உருவாக்க முடியவில்லை.

இன்றையதினம் நாட்டின் சில மாநிலங்களில் சட்டீஸ்கார், ஜார்கண்ட், பீகார், ஒரிசா, மகாராஷ்ட்ரா, மேற்கு வங்கத்தில் எல்லைப்பகுதிகளில் உள்ள மூன்று மாவட்டங்களில் பழங்குடியினர் பகுதிகளில் - அரசு நிர்வாகம் எளிதில் செல்லமுடியாத வனப்பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளை அணிவகுத்து புரட்சிகர இயக்கத்தை எங்கே அவர்கள் கட்டியிருக்கிறார்கள்?
வர்க்க எதிரிகளை அழித்தொழிப்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கொல்வது எல்லாம் யாரை? சாதாரண போலீஸ்காரர்கள், அப்பாவி பொது மக்களை. போலீசாருக்கு ‘ஆள்காட்டி’யாக இருந்தார்கள் என்று கூறி இவர்களைக் கொல்கிறார்கள். கடந்த 40 ஆண்டுகளில் இவர்கள் முழுமையாகத் தங்களுடைய ‘ஆயுதக் குழு’ வையும், துப்பாக்கிகளையும் மற்றும் பல்வேறுவிதமான ஆயுதங்களையும் சார்ந்து இயங்கி வருகிறார்களேயொழிய, மக்களைச் சார்ந்து அல்ல.

ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சகாலம் ஆந்திராவில் சில இடங்களில் இயங்கிக் கொண்டிருந்தார்கள். அங்கு நிலைகுலைவு ஏற்பட்டபின்னர், அவர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.

நக்சலைட் இயக்கம் தோன்றிய காலத்திலிருந்தே, மார்க்சிஸ்ட் கட்சிதான் அதன் குறியாக இருந்து வந்தது. 1967இல் மேற்கு வங்கத்தில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அமைந்தபோதும், பின்னர் 1969இலும், ஆட்சியாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை வேட்டையாடினர். ஆயிரக்கணக்கான ஊழியர்களைக் கொன்று குவித்தனர். 1970களுக்கும் 77களுக்கும் இடையில் 1200க்கும் மேற்பட்ட கட்சியின் முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 350க்கும் மேற்பட்டோர் நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டவர்களாவார்கள். ஏன்? தாங்கள் வளர வேண்டுமானால், சிபிஎம் தொலைய வேண்டும் என்று அவர்கள் கருதினார்கள். சிபிஎம் மக்களோடு பின்னிப்பிணைந்து இருந்துவரும் வரை தங்களுக்கு வளர்ச்சிகிடையாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். எனவேதான், எப்போதும் நம் கட்சியின் முன்னணி ஊழியர்களைக் குறி வைத்துத் தாக்குகிறார்கள். சென்ற வாரம்கூட 70 தோழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மாவோயிஸ்ட்டுகள் இயக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. நாம் அவ்வாறு கருதவில்லை. அதனை மக்கள் உதவியுடன் அரசியல்ரீதியாகவும், சித்தாந்தரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எதிர்கொள்வோம். அவ்வாறு அவர்களை நாம் எதிர்த்து நின்றதால்தான் நக்சலைட் இயக்கம் மேற்கு வங்கத்தில் உருவானபோதும், அதனால் அங்கு காலூன்ற முடியாமல் பிற மாநிலங்களுக்குச் சென்றது. இப்போது, ஆளும் வர்க்கத்தின் உதவியுடன் மீண்டும் மேற்கு வங்கத்தில் தலைதூக்க முயற்சிக்கிறது. இதனை நிச்சயம் மக்கள் உதவியுடன் முறியடிப்போம்.

மேற்கு வங்கத்தில் நம் தலைவர்களை அவர்கள் படுகொலை செய்திட குறி வைத்திருக்கிறார்கள். எண்ணற்ற தியாகங்களைச் செய்துதான் மார்க்சிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கிறது. இப்போதும் அவர்களின் சவால்களை நாம் எதிர்த்து முறியடித்து முன்னேறுவோம்.

இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்.

(ச. வீரமணி)

Friday, November 6, 2009

நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே! - சுகுமால்சென்





ரஷ்யாவில் 1917 அக்டோபர் 17 அன்று நடைபெற்ற நவம்பர் சோசலிஸ்ட் புரட்சி, (ரஷ்யாவின் பழைய காலண்டர்படி அக்டோபர் 17 அன்றும், புதிய காலண்டர்படி நவம்பர் 7 அன்றும் நடைபெற்றது) உலகைக் குலுக்கிய முக்கியமானதொரு நிகழ்வு மட்டுமல்ல, அதன் படிப்பினைகள் இன்றைய உலக நிலைமைகளுக்கும் சரியாகப் பொருந்தக் கூடியதேயாகும்.
இன்றைய உலக முதலாளித்துவம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நெருக்கடிச் சேற்றில் சிக்கி, பெருமளவில் மந்த நிலைமைக்குச் சென்று செப்டம்பர் 15 உடன் ஓராண்டு காலமாகிவிட்டது. தொழிலாளர் வர்க்கத்தின் மீதும் மற்றும் முதலாளித்துவ நாடுகளில் வாழும் ஏழை மக்கள் மீதும் எந்த அளவிற்கு அது பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து இன்னமும் முழுமையாக வெளிக்கொணரப் படவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கிற உலக முதலாளித்துவ நெருக்கடியானது நவம்பர் புரட்சியின் முக்கியத்துவத்தை உலகுக்கு மீண்டும் நடைமுறையில் மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறது.

ஏகாதிபத்தியமானது இன்றையதினம் எவ்வித கூச்சநாச்சமுமின்றி தன் யுத்த முஸ்தீபுகளை கூர்மைப்படுத்திக் கொண்டு உலகின் அனைத்துப் பகுதிகளையுமே தன் மேலாதிக்க நடவடிக்கைகளால் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, மக்கள் நலன் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்படாது, தன்னுடைய நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கைகளின் மூலமாக உலகச் சந்தையில் மிகவும் ஈவிரக்கமற்ற முறையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் தொழிலாளர் வர்க்கம் மற்றும் சாமானிய மக்களின் மீதான சுரண்டலும் ஆழமாகியிருக்கிறது.
1917இல் ரஷ்யாதான் முதலாளித்துவ சங்கிலித் தொகுப்பிலிருந்த மிக பலவீனமான கண்ணியை உடைத்துத் தூளாக்கி, தங்களுடைய நாட்டில் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஆட்சியை நிறுவியது. ரஷ்யப் புரட்சியின் மிக முக்கிய அம்சம் என்னவெனில், அது முதலாளித்துவத்தின் சுரண்டல் ஆட்சி முறைக்கு முற்றுப் புள்ளி வைத்தது என்பதேயாகும்.

சோவியத் சோசலிசக் குடியரசு 1991இல் முடிவுக்கு வந்தது என்றால் அதற்குக் காரணம் அங்கு ஆட்சியிலிருந்தவர்கள் மார்க்சிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கைவிட்டு விலகிச் சென்றதேயாகும். உலகம் முழுதும் உள்ள மார்க்சிஸ்ட்டுகள் அதற்கான காரணங்களை ஆராய்வதில் ஈடுபட்டார்கள்

மார்க்சின் புரட்சித் தத்துவம்
புரட்சிகர மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன? மார்க்சின் கூற்றுப்படி, ஒரு வர்க்க சமுதாயத்திற்குள் வளர்ந்திடும் முரண்பாடு என்பது வளர்கின்ற உற்பத்திச் சக்திகளுக்கும் ஏற்கனவேயுள்ள சொத்துடைய வடிவங்களுக்கும் இடையிலானதாக இருந்திடும். இதுவே முதலாளித்துவ அமைப்பைப் பலவீனப் படுத்தி, புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் முக்கிய கூறாகும். அது புராதனப் பொதுவுடைமை சமுதாயமாக இருந்தாலும் சரி அல்லது ஆண்டை - அடிமை சமுதாயமாக இருந்தாலும் சரி, அல்லது நிலப்பிரபுத்துவ அமைப்பாக இருந்தாலும் சரி அல்லது முதலாளித்துவ அமைப்பாக இருந்தாலும் சரி இவ்வாறுதான் மனிதகுல வரலாற்றை ஆய்வு செய்து வந்திருக்கிறோம். முதலாளித்துவத்தின் கீழான இந்த முக்கிய முரண்பாட்டை, ‘‘அதீத உற்பத்தியினால் உருவாகும் கொள்ளை நோய்’’ மூலம் நன்கு உணர முடியும்.

மார்க்ஸ் ஆரம்பத்தில் முதலாளித்துவத்திற்கு எதிரான புரட்சிகள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நன்கு முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில்தான் ஏற்படும் என்று நினைத்திருந்தார். ஆனால் அவர் தன் வாழ்நாளின் பிற்பகுதியிலேயே, மிகவும் வளர்ச்சிகுன்றிய ரஷ்யா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட புரட்சி வெடிக்கும் என்பதைக் கண்டார். இதன் மூலம் வளர்ச்சிகுன்றிய அல்லது ‘‘பிற்பட்ட’’ நாடுகளில் கூட முதலாளித்துவ சங்கிலியின் பலவீனமான கண்ணியை உடைத்தெறிவதன் மூலம் புரட்சி சாத்தியம் என்கிற சிந்தனையோட்டம் தோன்றி வளர்ந்தது.

மாமேதை லெனினின் கூர்மதியால் அவரது தலைமையின் கீழான போல்ஷ்விக் கட்சியானது ‘‘பலவீனமான கண்ணியை’’க் கண்டறிந்து உடைத்து சுக்குநூறாக்கி, முதலாளித்துவ ரீதியாக ஒரு பிற்பட்ட ரஷ்யாவில் புரட்சியை வெற்றிகரமானதாக உருவாக்கியது.

மார்க்ஸ் முதலாளித்துவ சமூகத்தின் வளர்ச்சிப் போக்குகளை நன்கு ஆய்ந்து, புரட்சி குறித்த சிந்தனைகளை உருவாக்கினார். வாழ்வதற்கான போராட்டம் மற்றும் இயற்கையோடு இருந்த பிணைப்பு ஆகியவற்றின் விளைவாக, மனிதன் சில கருவிகளை, உபகரணங்களை, உழைப்பை அளிப்பதிலும் பல்வேறு வடிவங்களை வளர்த்திட்டான். மார்க்ஸ் இவற்றை உற்பத்திச் சக்திகள் என்று விவரித்தார். பின்னர், அவர் உற்பத்தி உறவுகள் குறித்து விவரித்தார்.

மார்க்ஸ், கம்யூனிஸ்ட் அறிக்கையிலும், மூலதனத்திலும் தொடர்ந்து ஏற்படும் முதலாளித்துவ நெருக்கடிகள் அவற்றை மேலும் உக்கிரமானதாக மாற்றும் என்று கருதினார். ‘‘அதீத உற்பத்தி என்னும் கொள்ளைநோயை’’ ஒழித்துக்கட்ட வேண்டுமானால், முதலாளித்துவ சொத்துடைமை உறவுகளுக்கு எதிராக, சமூகக் குணத்துடனான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என்றும், உற்பத்திச் சாதனங்கள் சமூகத்திற்கு உடைமையாக்கப்பட வேண்டும் என்றும் கோரினார்.

பொருளாதார நெருக்கடிகள் இந்த மோதலை வெளிப்படையாகக் கொண்டு வந்துவிட்டன. மார்க்சின் கூற்றின்படி, ‘‘உண்மையான எல்லா நெருக்கடிகளுக்கும் முடிவான காரணம் மனித சமூகத்தின் ஏழ்மையேயாகும். அதன் ஓரெல்லைக்குள் கட்டுப்பட்டுள்ள குறைந்த நுகர்வு ஆற்றலே. மக்களது வறுமைக்கும் அவர்தம் குறைந்த நுகர்வாற்றலுக்கும் எதிராக, சமூகத்தில் எல்லையற்ற உயர்ந்த நிலை அளவுக்கு நுகர்வு ஆற்றல் உளது என்று எண்ணிக்கொண்டு, உற்பத்திச் சக்திகளைப் பெருக்குவதில் முதலாளித்துவ உற்பத்தி உந்தப்படுகின்றது.’’

மூலதனத்தின் மற்றொரு பகுதியையும் நாம் ஆராய்வோம். ‘‘மூலதனத்தின் ஏகபோகம், அதனோடு சேர்ந்தும் அதன் ஆளுகையிலும் பிறந்து வளர்ந்த பொருளுற்பத்தி முறைக்குப் பூட்டிய விலங்காகி விடுகிறது. முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்துவ மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகிவிடும் நிலை வருகிறது. ஆகவே, அந்த மேலோடு உடைத்தெறியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது.’’

ஆயினும் சோசலிசத்திற்கு மாறிச் செல்லுதல் என்பது தானாகவே நடைபெற்று விடாது. தொழிலாளர் வர்க்கப் புரட்சியின் மூலம் அது அமல்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. ஏனெனில் தொழிலாளர் வர்க்கம்தான் சமூகத்தின் ‘‘மாபெரும் உற்பத்தி சக்தி’’யாகும். உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான மோதலில் மற்றவர்களை விட அதிகமான அளவில் அவதிப்பட்ட பிரிவுமாகும். எனவே உற்பத்திச் சாதனங்களை சமூகமயப்படுத்துதலில் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தனி ஆர்வம் உண்டு.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்

மக்களை உறிஞ்சும் குணம் கொண்ட சுரண்டல் சமுதாயத்தை அடித்த நொறுக்கிவிட்டு, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் ஓர் அரசை அமைத்திட வேண்டுமானால், உற்பத்திச் சாதனங்களைப் படிப்படியாக சோசலிசமயமாக்கிட வேண்டும். மார்க்ஸ், இதனைக் குறிப்பிடுகையில், ‘‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார். இந்தச் சொற்றொடரில் தொழிலாளர் வர்க்கம் மேற்கொள்ள வேண்டிய மகத்தான போராட்டங்கள் மற்றும் வெற்றிகள் மட்டுமல்ல மக்கள்திரளின் மத்தியில் ஜனநாயகத்தை அமல்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகிய அனைத்தும் அடங்கியிருக்கின்றன.

தொழிலாளர் வர்க்கம் நடத்துகின்ற வர்க்கப் போராட்டம் அனைத்தும், தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச் செல்லும் என்று மார்க்ஸ் கூறுகிறார். அனைத்து வர்க்கங்களும் அழித்து ஒழிக்கப்பட்டு, வர்க்க சமுதாயம் உருவாகும்வரை பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் அவசியமாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையில் அரசின் தன்மை குறித்து மார்க்ஸ் விரிவாக எழுதியிருக்கிறார். குறைந்த காலமே நீடித்த 1871 பாரிஸ் கம்யூன் தொழிலாளர் தலைமையில் அமைந்த முதல் அரசாங்கம் என்று அவர் கருதுகிறார்.

சமூக மாற்றத்தின் இன்றைய பிரதிநிதிகள் யார்?

மார்க்ஸ் காலத்தில் ‘‘தொழிலாளர்’’ (proletariat) என்போர் அநேகமாக தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்களையே குறித்தது, தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் அநேகமாக கரத்தால் உழைப்பவர்களாகவே இருந்தார்கள். சுரங்கங்கள் மற்றும் பல்வேறு தொழில்மையங்களில் பணியாற்றியவர்கள். ஆனால் தொழிலாளர் வர்க்கம் என்னும் கருத்தாக்கத்திற்குள் நிதிநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு எந்திரத்தில் பணியாற்றும் கருத்தால் உழைப்பவர்களும் படிப்படியாக ஈர்க்கப் பட்டார்கள். ஏன், சமீபத்தில் இன்போடெக் மற்றும் மிக நவீன பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கூட, தாங்களும் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியினரே என்பதை உணரத் தலைப்பட்டுள்ளனர். முதலாளித்துவத்தின் நலன்களுக்கு ஏதேனும் ஒருவகையில் சேவை செய்யும் ஒவ்வொருவரும், தங்கள் பணிநிலைமைகள் மற்றும் வாழ்நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான முறையில் இழிநிலைக்குச் சென்று கொண்டிருப்பதை உணரத் தலைப்பட்டு, தொழிலாளர் வர்க்கப் படையின் போராளிகளாக மாற வேண்டிய அவசியத்தை உணரத் தொடங்கியுள்ளனர்.

ஒரு காலத்தில் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்களை, ‘‘காக்கிச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களை ‘‘வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள்’’ என்றும் வித்தியாசப் படுத்தியதை அறிவோம். காக்கிச்சட்டைத் தொழிலாளர்களைவிட, வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் அதிகமான அளவில் பணிப்பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்று கூட சொல்லப்பட்டது. உண்மையில் இது அனைத்தும் கற்பனாவாதமே. மேலும் வெள்ளைச் சட்டைத் தொழிலாளர்கள் ‘‘மத்திய வர்க்கமாக’’ உயர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறப்பட்டது.

ஆயினும் இன்றும்கூட உலகில் பெரும் பகுதி, கரத்தால் உழைக்கும் காக்கிச்சட்டைத் தொழிலாளர்களேயாவர். இந்தியாவிலும் இதுதான் உண்மை நிலை.
மார்க்ஸ் தன் படைப்புகளை பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியவாக்கில் எழுதிக்கொண்டிருந்தார். 1883இல் மரணம் அடைந்தார். அதன்பின் எண்ணிலடங்கா மாற்றஙகள் ஏற்பட்டுள்ளன. இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றஙகளை மார்க்ஸ் கற்பனைகூட செய்து பார்த்திருக்க முடியாது.

இந்நூற்றாண்டில் தொடக்கத்தில் முதலாளித்துவம் தன்னைப் புனரமைத்துக் கொண்டு, வளர்ந்தது. ஆயினும் இன்றைய தினம் உலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமானதாகும்.
வர்க்கப்போராட்டத்தின் முக்கியத்துவம்

அரசு எந்திரம் அதிகமான அளவில் அதிகாரவர்க்கத்தின் ஆலோசனையின்படி நடப்பதால், அது பெரும்பாலும் மூலதனத்தின் நலன்களுக்கே - முதலாளிகளின் நலன்களுக்கே - சேவகம் செய்கிறது. மார்க்ஸ் புரட்சி குறித்து கூறிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. ஆயினும், ‘‘ஒரு பெரிய உந்துதல், அனைத்தையும் மற்றும் எல்லாவற்றையும் சரிசெய்துவிடும்’’ என்ற சொற்றொடரை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது. மார்க்சைப் பொறுத்தவரை புரட்சி என்கிறபோது அவர் எப்போதும் ‘‘சமூகப் புரட்சியையே’’ பொருள் கொண்டார். ஒரு ‘‘பெரிய உந்துலு’’க்காக ஒருசிலரின் தலைகளைக் கொய்துவது எளிதுதான். அதைத்தான் இந்தியாவில் மாவோயிஸ்ட்டுகள் புரட்சி என்ற பெயரில் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நிச்சயமாக மார்க்ஸ் பொருள்கொண்டது இதையல்ல.
இதுபோன்ற காரியங்கள் கடந்த காலத்தில் பயன் அளிக்கவில்லை, எதிர்காலத்திலும் பயனளிக்க முடியாது என்பதை நாம் நம் கசப்பான அனுபவங்களிலிருந்து அறிந்து கொண்டிருக் கிறோம். புரட்சிகர சித்தாந்தம் என்பது முன்பிருந்தது போலவே இன்றைக்கும் பொருந்தக் கூடியதே. புரட்சி என்பது ஒன்றை அழிப்பது என்பது மட்டுமல்ல, அந்த இடத்தில் மற்றொன்றை உருவாக்குவது என்பதுமாகும். அழித்தல் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு உருவாக்கம் என்பதும் முக்கியம். மார்க்ஸ் ஒருமுறை, ‘‘புரட்சிகரமான சிந்தனை’’ என்பது ‘‘விஷயங்களை அதன் மூலத்திலிருந்தே கிரகித்துக்கொள்வது’’ என்றார். மார்க்சின் இக்கூற்று இன்றைக்கும் பொருந்தக் கூடியதேயாகும்.
சமூகப் புரட்சி குறித்த மார்க்சிய சிந்தனை, இந்தியாவில் நடைபெறும் புரட்சிகரப் போராட்டத்திற்கும் பொருந்தக்கூடியதேயாகும். இதிலிருந்து பிறழ்ந்து செல்வதென்பது புரட்சிகர நடைமுறைக்கு சொல்லொணா தீங்கினை ஏற்படுத்தும்.

1991இல் சோவியத் யூனியனில் ஏற்பட்ட பின்னடைவு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அதிர்ச்சியை அளித்தது என்பதும் அதில் பாதிப்பிலிருந்து உலகில் பல நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்னும் முழுமையாக மீண்டு எழவில்லை என்பதும் உண்மை. இவற்றில் சில கட்சிகள் வர்க்கப் போராட்டம் என்னும் கருத்தோட்டத்தைக் கைவிட்டு, ‘‘தெளிவுபெற்ற முதலாளித்துவம்’’ அல்லது ‘‘மனிதமுகத்துடன் கூடிய உலகமயம்’’ என்பதில் நம்பிக்கைகொண்டு, சமூக ஜனநாயகவாதக் கட்சிகளாக மாறியிருக்கின்றன. உண்மையில், இத்தகைய போக்குகள் அனைத்தும் புரட்சிகர வளர்ச்சிப்போக்குகளுக்குத் தீங்கு விளைவிப்பவைகள் என்பதிலும், இறுதியாக இவை மூலதனத்தின் நலன்களுக்கே சேவை செய்திடும் என்பதிலும் எவ்வித ஐயமமில்லை.
இவ்வாறு, இன்றைக்கும் அனைத்து நாடுகளிலும் சமூகப் புரட்சியையும் புரட்சிகரப் போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல நவம்பர் புரட்சியின் படிப்பினைகள் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

(தமிழில்: ச.வீரமணி)

Sunday, November 1, 2009

தமிழ் செம்மொழியாகக் கருதப்பட வேண்டும் -பி. மோகன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரை

தோழர் பி. மோகன் நாடாளுமன்றத்தில் தமிழ் செம்மொழியாகக் கருதப்பட வேண்டும் என்று உரை நிகழ்த்தியதையும் மற்றும் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து அவர் ஆற்றிய உரைகளையும் கீழே இணைத்திருக்கிறேன்.

அன்புத் தோழர் பி.மோகன் மறைந்து விட்டார்



கட்சி என்னை டில்லிக்கு அனுப்பியபோது, என்னை புதுடில்லி ரயில்நிலையத்திற்கு வந்து வரவேற்று, உடன் தங்க வைத்து, என்னை கடந்த ஐந்தாண்டு காலமாக டில்லியில் கட்சிப் பணியைச் செய்திட அனைத்து விதங்களிலும் உற்ற துணையாக இருந்த தோழர் பி.மோகன் மறைந்து விட்டார். ஐந்தாண்டுகளுக்கு முன் நான் டில்லி வந்தபோது, மிகவும் சுறுசுறுப்புடன் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் நாடாளுமன்றப் பணிகளில் தோழர் பி.மோகன் ஈடுபட்டார்.

நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்ப வேண்டுமானால், நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் முதலில் கடிதம் கொடுத்தவர்களுக்கே முன்னுரிமைகொடுக்கும் வழக்கம் இருந்ததால், காலை எட்டு மணிக்கே, என்னுடைய சைக்கிளை வாங்கிக் கொண்டு அவரே நேரடியாக நாடாளுமன்றம் சென்று கடிதத்தைக் கொடுத்து விட்டு வருவார். நானும் சென்று அவர் கையொப்பமிட்ட கடிதத்தைக் கொடுக்கலாம். ஆனாலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே நேரில் வந்து கொடுத்தால் அதற்கு அதைவிட முன்னுரிமை கூடுதலாகும். எனவே அவரே சென்று கடிதத்தைக் கொடுத்துவிட்டு வருவார். இவர் சைக்கிளில் செல்வதைக் கண்டு இனிய அதிர்ச்சியுறாத பாதுகாவலர்களே இல்லை என்று சொல்லலாம்.

தேசபிமானி நிருபர் ஒருநாள் பார்த்துவிட்டு தன் புகைப்படநிபுணருடன் வந்து அவரைப் பேட்டிகண்டு, தேசாபிமானியில் ‘‘இவருக்கு நாடாளுமன்றப் பணிகளுக்கு இந்த சைக்கிளே போதும்’’ என்ற தலைப்பிட்டு ஒரு முழுப் பக்க கட்டுரையே எழுதி விட்டார். ஆயினும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் உடல் நலிவடையத் தொடங்கிவிட்டது. மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டபோதிலும், மருத்துவர்களின் ஆலோசனைகள்படி அவர் அதன்பின் நடந்து கொண்டாரா என்பது எனக்குச் சந்தேகமே.

வீரம் விளைந்தது நாவலில் தோழர் பாவல் ஓரிடத்தில் சொல்கிறார்:
‘‘என் தேகாரோக்கியத்தைப் பற்றியே நான் அஜாக்கிரதையாக இருந்தேன். அந்த முட்டாள்தனத்தை எண்ணி நான் என்னைக் கடிந்துகொள்கிறேன். அந்த அஜாக்கிரதைப் போக்கில் ஒரு வீரமும் இல்லை என்பதை இப்பொழுது உணர்கிறேன். அந்தக் கண்மூடித்தனம் இருக்காதிருந்தால், நான் மேலும் சில ஆண்டுகள் தாக்குப் பிடித்திருக்க முடியும். வேறுவிதமாகச் சொல்வதென்றால், இடதுசாரி வாதம் என்ற இளம் பருவ வியாதி நம்முன் உள்ள பேராபத்துக்களில் ஒன்று.’’

இந்தப் போக்குடன்தான் நம் கட்சி உறுப்பினர்களில் பலர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தோழர் பி.மோகனும் கிட்டத்தட்ட அப்படித்தான். அவருக்கு சர்க்கரை நோய் உண்டு. ஆயினும் எவரேனும் தேநீர் சர்க்கரையுடன் கொடுத்தால் வாங்கிச் சாப்பிட்டுவிடுவார். எவரேனும் பிரியமாக எதையேனும் கொடுத்தால் அதைச் சாப்பிட்டுவிட்டு அவர் அவதிப்படுவதை அடிக்கடி நான் பார்த்திருக்கிறேன். உடல்நலத்தைப் பார்த்துக் கொள்வதில் அவர் இன்னும் கொஞ்சம் அக்கறையுடன் இருந்திருந்தால், இவ்வளவு சீக்கிரம் அவர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

எனினும் தான் வாழ்ந்த ஒவ்வொரு நாளும் தன்னைத் தேடி வந்த மக்களுக்காக அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்படாது, தன்னாலான அனைத்து உதவிகளையும் தன் வாழ்நாள் முழுவதும் மேற்கொண்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசமயத்தில் தமிழுக்குச் செம்மொழி அந்த°து அளிக்கப்பட வேண்டும் என்பதற்காக முதன்முதலில் தமிழிலேயே குரல் கொடுத்தவர் தோழர் பி. மோகன்.

இதைப்போல் ஐடிஐ படிக்கும் மாணவர்கள் தமிழில் தேர்வு எழுத நடவடிக்கை எடுத்தவர் தோழர் பி.மோகன்.

இன்றைக்கு சென்னை - மதுரை ரயில்பாதை இரட்டை ரயில்பாதையாக மாறி, மின்மயமாகிக் கொண்டிருக்கிறதென்றால் தன் நாடாளுமன்றப் பணிக்காலம் முழுதும் அதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்டவர் தோழர் பி.மோகன்.

அவர் நம்மை விட்டுச் சென்றாலும் அவரால் செயல்படுத்தப்பட்டுள்ள பணிகள் நம்மை என்றென்றும் இயங்க வைத்துக் கொண்டிருக்கும்.